Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


மயிலாப்பூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

Go down

மயிலாப்பூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் Empty மயிலாப்பூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

Post by oviya Fri Dec 12, 2014 1:13 pm

அறுபத்து மூவர் விழா கோலாகலம்

நாளை திருக்கல்யாணம் நடக்கிறது

சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை மாலை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா கடந்த 6ம் தேதி, கிராம தேவதை பூஜை கோலவிழியம்மன் சிறப்பு வழிபாடுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 7ம் தேதி கொடியேற்றமும், 8ம் தேதி சூரிய வட்டம், சந்திரவட்டமும், 9ம் தேதி அதிகார நந்தி காட்சியளித்தலும், 10ம் தேதி புருஷாமிருகம், சிங்கம், புலி வாகனமும், 11ம் தேதி சவுடல் விமானமும், 12ம் தேதி பல்லக்கு விழாவும் நடந்தது.

ஒவ்வொரு நாளும் ஐந்திருமேனிகள் திருவீதி உலா நடந்தது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று முன் தினம் நடந்தது. கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் காலை 8 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது.
இந்த நிலையில், விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் திருவிழா நேற்று பிற்பகல் 2.55 மணியளவில் நடந்தது. அறுபத்து மூவர் திருவீதியுலா மேள தாளம் முழங்க, மங்கல இசை ஒலிக்க, வேத மந்திரங்கள் ஒலிக்க ஆரவாரத்தோடு புறப்பட்டது.

முன்னதாக விநாயகர் செல்ல, கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர், வள்ளி& தெய்வானை சமேத முருகப்பெருமான் அடுத்து வர தொடர்ந்து இதர தெய்வங்கள் வலம் வந்தன. இதையடுத்து சமயக்குரவர்கள் பல்லக்கும், அதையடுத்து ஒரு பல்லக்கில் 4 நாயன்மார்கள் என்ற கணக்கில் நாயன்மார்களும் அணிவகுத்து மாட வீதிகளில் வந்தனர். நிகழ்ச்சியில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். அறுபத்து மூவர் விழாவை முன்னிட்டு மயிலாப்பூர் களைகட்டியிருந்தது. மாட வீதிகள், அறுபத்துமூவர் பல்லக்குகள், இறைவனின் பல்லக்குகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அறுபத்து மூவர் விழாவை முன்னிட்டு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தார், தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் போன்றோர் மக்கள் கூடும் இடங்களில் சிறப்பு பந்தல்களை அமைத்து அன்னதானம், நீர் மோர், பானகம், இனிப்புகள், ரோஸ்மில்க், சாக்லேட், போன்ற பொருட்களை வழங்கினர். அறுபத்து மூவர் விழாவையொட்டி மயிலாப்பூரில் நேற்று மதியத்துக்கு மேல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. பங்குனிப்பெருவிழா வின் மற்றொரு முக்கிய அம்சமான திருக்கல்யாணம் நாளை மாலை 7 மணிக்கு நடக்கிறது. ஐந்திருமேனிகள் விழாவும் நடக்கிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
» இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
» திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
» புதுவையில் மாசிமக தீர்த்தவாரி கடற்கரையில் குவிந்தனர் பக்தர்கள்
» புதுவையில் மாசிமக தீர்த்தவாரி கடற்கரையில் குவிந்தனர் பக்தர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum