விண்ணை அதிரவைத்த பக்தர்கள் கோஷத்துடன் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
விண்ணை அதிரவைத்த பக்தர்கள் கோஷத்துடன் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்
அறுபத்து மூவர் திருவிழா இன்று நடக்கிறது
சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அறுபத்து மூவர் திருவிழா இன்று நடக்கிறது. சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா கடந்த 6ம் தேதி, கிராம தேவதை பூஜை கோலவிழியம்மன் சிறப்பு வழிபாடுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 7ம் தேதி கொடியேற்றமும், 8ம் தேதி சூரிய வட்டம், சந்திரவட்டமும், 9ம் தேதி அதிகார நந்தி காட்சியளித்தலும், 10ம் தேதி புருஷாமிருகம், சிங்கம், புலி வாகனமும், 11ம் தேதி சவுடல் விமானமும், 12ம் தேதி பல்லக்கு விழாவும் நடந்தது.
ஒவ்வொரு நாளும் ஐந்திருமேனிகள் திருவீதி உலா நடந்தது. இதையடுத்து விழா வின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று காலை நடந்தது. தேரோட்டத்தையொட்டி கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் காலை 8 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். சர்வ அலங்காரத்தில் இருந்த சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மங்கள வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க தேர் புறப்பட்டபோது கூடியிருந்த பக்தர்கள் ‘‘ தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவருக் கும் இறைவா போற்றி.... நமச்சிவாயன் தாள் வாழ்க... நாதன் தாள் வாழ்கÕÕ என்று பக்தி பரவசத்துடன் விண் அதிர கோஷமிட்டனர். தொடர்ந்து மாட வீதிகளில் திருத்தேரில் எழுந்தருளி கபாலீஸ்வரர் அருள்பாலித் தார். திருத்தேர் பிற்பகலில் நிலைக்கு வந்தது. இதையடுத்து தேரிலிருந்து திருக்கோயிலுக்கு இறைவன் எழுந்தருளினார்.
திருத்தேரோட்டத்தை முன்னிட்டு மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கோயிலின் அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பல்லாயிரக்கணக் கான மக்கள் கூடியதால் மயிலையில் எங்கு திரும்பினாலும் நெரிசல் காணப்பட்டது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சைவ சமயத்தார் மற்றும் பல்வேறு அமைப்பினை சார்ந்தவர்கள் பல இடங்களில் நீர் மோர், அன்னதானம் வழங்கினர். தேரோட்டத்தால் மயிலாப்பூர் முழுவதும் களை கட்டியிருந்தது. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் திருவிழா இன்று பிற்பகல் 2.55 மணியளவில் நடைபெறுகிறது. வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூவர் நாயன்மார்களோடு காட்சி அளிக்கிறார். நாளை மாலை 6 மணிக்கு இறைவன் இரவலர் கோலவிழா, ஐந்திருமேனிகள் விழாவும், நாளை மறுநாள் இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச் சியும் நடைபெறுகிறது.
சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அறுபத்து மூவர் திருவிழா இன்று நடக்கிறது. சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா கடந்த 6ம் தேதி, கிராம தேவதை பூஜை கோலவிழியம்மன் சிறப்பு வழிபாடுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 7ம் தேதி கொடியேற்றமும், 8ம் தேதி சூரிய வட்டம், சந்திரவட்டமும், 9ம் தேதி அதிகார நந்தி காட்சியளித்தலும், 10ம் தேதி புருஷாமிருகம், சிங்கம், புலி வாகனமும், 11ம் தேதி சவுடல் விமானமும், 12ம் தேதி பல்லக்கு விழாவும் நடந்தது.
ஒவ்வொரு நாளும் ஐந்திருமேனிகள் திருவீதி உலா நடந்தது. இதையடுத்து விழா வின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று காலை நடந்தது. தேரோட்டத்தையொட்டி கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் காலை 8 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். சர்வ அலங்காரத்தில் இருந்த சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மங்கள வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க தேர் புறப்பட்டபோது கூடியிருந்த பக்தர்கள் ‘‘ தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவருக் கும் இறைவா போற்றி.... நமச்சிவாயன் தாள் வாழ்க... நாதன் தாள் வாழ்கÕÕ என்று பக்தி பரவசத்துடன் விண் அதிர கோஷமிட்டனர். தொடர்ந்து மாட வீதிகளில் திருத்தேரில் எழுந்தருளி கபாலீஸ்வரர் அருள்பாலித் தார். திருத்தேர் பிற்பகலில் நிலைக்கு வந்தது. இதையடுத்து தேரிலிருந்து திருக்கோயிலுக்கு இறைவன் எழுந்தருளினார்.
திருத்தேரோட்டத்தை முன்னிட்டு மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கோயிலின் அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பல்லாயிரக்கணக் கான மக்கள் கூடியதால் மயிலையில் எங்கு திரும்பினாலும் நெரிசல் காணப்பட்டது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சைவ சமயத்தார் மற்றும் பல்வேறு அமைப்பினை சார்ந்தவர்கள் பல இடங்களில் நீர் மோர், அன்னதானம் வழங்கினர். தேரோட்டத்தால் மயிலாப்பூர் முழுவதும் களை கட்டியிருந்தது. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் திருவிழா இன்று பிற்பகல் 2.55 மணியளவில் நடைபெறுகிறது. வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூவர் நாயன்மார்களோடு காட்சி அளிக்கிறார். நாளை மாலை 6 மணிக்கு இறைவன் இரவலர் கோலவிழா, ஐந்திருமேனிகள் விழாவும், நாளை மறுநாள் இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச் சியும் நடைபெறுகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சிவ கோஷங்கள் முழங்க கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்
» மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா அறுபத்துமூவர் உலா
» திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் தேரோட்டம்
» கபாலீஸ்வரர் கோயிலில் சிவன் திருக்கல்யாணம் : பக்தர்கள் குவிந்தனர்
» சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்
» மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா அறுபத்துமூவர் உலா
» திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் தேரோட்டம்
» கபாலீஸ்வரர் கோயிலில் சிவன் திருக்கல்யாணம் : பக்தர்கள் குவிந்தனர்
» சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya