Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


விண்ணை அதிரவைத்த பக்தர்கள் கோஷத்துடன் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்

Go down

விண்ணை அதிரவைத்த பக்தர்கள் கோஷத்துடன் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் Empty விண்ணை அதிரவைத்த பக்தர்கள் கோஷத்துடன் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்

Post by oviya Fri Dec 12, 2014 1:13 pm

அறுபத்து மூவர் திருவிழா இன்று நடக்கிறது

சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அறுபத்து மூவர் திருவிழா இன்று நடக்கிறது. சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா கடந்த 6ம் தேதி, கிராம தேவதை பூஜை கோலவிழியம்மன் சிறப்பு வழிபாடுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 7ம் தேதி கொடியேற்றமும், 8ம் தேதி சூரிய வட்டம், சந்திரவட்டமும், 9ம் தேதி அதிகார நந்தி காட்சியளித்தலும், 10ம் தேதி புருஷாமிருகம், சிங்கம், புலி வாகனமும், 11ம் தேதி சவுடல் விமானமும், 12ம் தேதி பல்லக்கு விழாவும் நடந்தது.

ஒவ்வொரு நாளும் ஐந்திருமேனிகள் திருவீதி உலா நடந்தது. இதையடுத்து விழா வின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று காலை நடந்தது. தேரோட்டத்தையொட்டி கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் காலை 8 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். சர்வ அலங்காரத்தில் இருந்த சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மங்கள வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க தேர் புறப்பட்டபோது கூடியிருந்த பக்தர்கள் ‘‘ தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவருக் கும் இறைவா போற்றி.... நமச்சிவாயன் தாள் வாழ்க... நாதன் தாள் வாழ்கÕÕ என்று பக்தி பரவசத்துடன் விண் அதிர கோஷமிட்டனர். தொடர்ந்து மாட வீதிகளில் திருத்தேரில் எழுந்தருளி கபாலீஸ்வரர் அருள்பாலித் தார். திருத்தேர் பிற்பகலில் நிலைக்கு வந்தது. இதையடுத்து தேரிலிருந்து திருக்கோயிலுக்கு இறைவன் எழுந்தருளினார்.

திருத்தேரோட்டத்தை முன்னிட்டு மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கோயிலின் அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பல்லாயிரக்கணக் கான மக்கள் கூடியதால் மயிலையில் எங்கு திரும்பினாலும் நெரிசல் காணப்பட்டது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சைவ சமயத்தார் மற்றும் பல்வேறு அமைப்பினை சார்ந்தவர்கள் பல இடங்களில் நீர் மோர், அன்னதானம் வழங்கினர். தேரோட்டத்தால் மயிலாப்பூர் முழுவதும் களை கட்டியிருந்தது. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் திருவிழா இன்று பிற்பகல் 2.55 மணியளவில் நடைபெறுகிறது. வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூவர் நாயன்மார்களோடு காட்சி அளிக்கிறார். நாளை மாலை 6 மணிக்கு இறைவன் இரவலர் கோலவிழா, ஐந்திருமேனிகள் விழாவும், நாளை மறுநாள் இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச் சியும் நடைபெறுகிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum