பெரியமாரியம்மன் கோயில் திருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
பெரியமாரியம்மன் கோயில் திருவிழா
தீர்த்த குடம் ஊர்வலத்தில் பக்தர்கள் திரண்டனர்
ஈரோடு : ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 18ம்தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பெரியமாரியம்மன் கோயில், சின்னமாரியம்மன்கோயில், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுவதற்காக கோயில் பூசாரிகள் கம்பத்தை ஊர்வலமாக கொண்டு வந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நடப்பட்டது. இந்த கம்பத்திற்கு பொதுமக்களும், பக்தர்களும் புனிதநீர் ஊற்றி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று தீர்த்தகுடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஈரோடு மாநகராட்சி 43வது வார்டுக்குட்பட்ட கைக்கோளன் தோட்டம், எஸ்.கே. சி.ரோடு, மொசுவண்ணவீதி, கந்தப்பா வீதி, பட்டேல் ரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காவிரி ஆற்றிற்கு சென்று அங்கிருந்து தீர்த்த குடம் எடுத்து வந்தனர். கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் தொடங்கிய இந்த தீர்த்த குடம் ஊர்வலம் கருங்கல்பாளையம், மார்க்கெட், மணிக்கூண்டு வழியாக பெரியமாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தீர்த்தகுடம் எடுத்து வந்தனர்.
குண்டம் விழா
வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) இரவு 10.30 மணிக்கு கிராமசாந்தி நிகழ்ச்சியும், மறுநாள் மாலை 5 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சியும், நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா வருகிற 1-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிக்கிறார்கள். இதையடுத்து இரவு 9 மணிக்கு மாவிளக்கு, கரகம், பெரிய மாரியம்மன் விசேஷ அலங்காரத்துடன் வீதி உலா ஆகிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், மாலை 4 மணிக்கு சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், 5-ந் தேதி மாலை கம்பம் பிடுங்கும் விழாவும், மஞ்சள் நீர் விழாவும் நடைபெறுகிறது.
ஈரோடு : ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 18ம்தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பெரியமாரியம்மன் கோயில், சின்னமாரியம்மன்கோயில், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுவதற்காக கோயில் பூசாரிகள் கம்பத்தை ஊர்வலமாக கொண்டு வந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நடப்பட்டது. இந்த கம்பத்திற்கு பொதுமக்களும், பக்தர்களும் புனிதநீர் ஊற்றி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று தீர்த்தகுடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஈரோடு மாநகராட்சி 43வது வார்டுக்குட்பட்ட கைக்கோளன் தோட்டம், எஸ்.கே. சி.ரோடு, மொசுவண்ணவீதி, கந்தப்பா வீதி, பட்டேல் ரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காவிரி ஆற்றிற்கு சென்று அங்கிருந்து தீர்த்த குடம் எடுத்து வந்தனர். கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் தொடங்கிய இந்த தீர்த்த குடம் ஊர்வலம் கருங்கல்பாளையம், மார்க்கெட், மணிக்கூண்டு வழியாக பெரியமாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தீர்த்தகுடம் எடுத்து வந்தனர்.
குண்டம் விழா
வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) இரவு 10.30 மணிக்கு கிராமசாந்தி நிகழ்ச்சியும், மறுநாள் மாலை 5 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சியும், நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா வருகிற 1-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிக்கிறார்கள். இதையடுத்து இரவு 9 மணிக்கு மாவிளக்கு, கரகம், பெரிய மாரியம்மன் விசேஷ அலங்காரத்துடன் வீதி உலா ஆகிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், மாலை 4 மணிக்கு சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், 5-ந் தேதி மாலை கம்பம் பிடுங்கும் விழாவும், மஞ்சள் நீர் விழாவும் நடைபெறுகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» காளியம்மன் கோயில் தீ குண்டம் திருவிழா
» கொடியேற்றத்துடன் மாசாணியம்மன் கோயில் திருவிழா தொடங்கியது
» கோத்தகிரி அம்மன் கோயில் திருவிழா
» பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடி திருவிழா துவக்கம்
» மயிலை நவசக்தி விநாயகர் கோயில் திருவிழா
» கொடியேற்றத்துடன் மாசாணியம்மன் கோயில் திருவிழா தொடங்கியது
» கோத்தகிரி அம்மன் கோயில் திருவிழா
» பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடி திருவிழா துவக்கம்
» மயிலை நவசக்தி விநாயகர் கோயில் திருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya