ஊரை காக்கும் ஐயனார்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஊரை காக்கும் ஐயனார்
தமிழக மேற்கு மண்டலங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட பகுதியில் ஐயனார் வழிபாடு பரவலாக இருக்கிறது. ஐயனார் பழங்காலத்திலிருந்து காவல் தெய்வமாக கருதப்படுகிறது. சிவனின் அவதாரத்தில் குளக்கரையில் பிறந்தவர் ஐயனார் என கூறப்படுகிறது. ஐயனாரை சிறு தெய்வ வழிபாடாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரியில் அவதரித்தவர் ஐயனார்.
கிழக்கு திசை நோக்கி அமர்ந்து மார்பில் பூணூல் அணிந்து, தலையில் கிரீடம் வைத்து வலது காதில் குழையும், இடது காதில் குண்டலமும், நெற்றியில் சந்தனமும் அணிந்திருப்பவர் ஐயனார். வலது கையில் தண்டமும், இடது கையை இடது காலின் மீது சாய்த்தது போல் வைத்திருப்பார், குதிரை அல்லது யானை மீது வலம் வரும் வகையில் ஐயனார் வடிவமைப்பு இருக்கும். அடர்ந்த மீசையும், வெறித்த பார்வையும் பயபக்தியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.
ஐயனார் நின்ற கோலத்தில் இருந்தால் தேவியர்களும் நின்ற கோலத்தில் இருப்பார்கள்.
இந்திரன், அக்னி, எமதர்மர், நிருதி, வருணர், வாயு, குபேரன், ஈசானியர் திசை தெய்வங்களாக இடம் பெற்றுள்ளனர். ஐயனாரின் பரிவாரங்களாக கருப்பண்ணசாமி, வீரபத்திரர், இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன், சோனை போன்ற ஆண் தெய்வங்களும், செல்லியாய், காளி, நீலகி, ராக்காயி, ராக்காச்சி, கருப்பாயி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி, பேச்சி, ஏழை காத்த அம்மன் மற்றும் சப்த கன்னியர்கள் பெண் பரிவார தெய்வங்களாகவும் கருதப்படுகிறது.
நாடு, ஆடு, மயில், கோழி போன்றவை ஐயனாருடன் காட்சி தரும். சைவ உணவு படையல் ஐயனாருக்கும், பரிவார தெய்வங்களுக்கு ஆடு, கோழியுடன் மது படைப்பதும் காலம் காலமாக நடக்கிறது. ஆடு, கோழி பலியிடும் போது ஐயனார் சன்னதியை மூடி வைத்து விடுவார்கள். ஐயனார் கோயிலின் நுழைவாயில் இடது பக்கம் விநாயகரும், வலது பக்கம் முருகரும் இடம் பெறுகிறார்கள். கோயிலில் காணப்படும் பெரிய குதிரைகள் சேமக்குதிரைகள் என அழைக்கப்படுகிறது. இந்த குதிரைகள் காலை தூக்கியபடி இருக்கும்.
குதிரைகளின் கால்களை தாங்கியபடி இரண்டு பூதங்கள் இருக்கும். பூதங்களுக்கு நடுவே குதிரைக்கு கீழே காளி காட்சியளிப்பது வழக்கம். எருது கட்டுதல் என ஆடு, மாடுகளை ஐயனாருக்கு தானமாக வழங்குவதும், புரவி எடுத்தல் என மண் குதிரைகளை கோயில்களில் ஒப்படைப்பதும் காலம் காலமாக நடக்கிறது. அன்னூர், சோமனூர், அவிநாசி, பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட பகுதியில் ஐயனார் குல தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறது. கொங்கு மண்டலத்தில் பழங்கால மக்களின் இஷ்ட தெய்வமான ஐயனார் போற்றி வணங்கப்படுகிறது.
கிழக்கு திசை நோக்கி அமர்ந்து மார்பில் பூணூல் அணிந்து, தலையில் கிரீடம் வைத்து வலது காதில் குழையும், இடது காதில் குண்டலமும், நெற்றியில் சந்தனமும் அணிந்திருப்பவர் ஐயனார். வலது கையில் தண்டமும், இடது கையை இடது காலின் மீது சாய்த்தது போல் வைத்திருப்பார், குதிரை அல்லது யானை மீது வலம் வரும் வகையில் ஐயனார் வடிவமைப்பு இருக்கும். அடர்ந்த மீசையும், வெறித்த பார்வையும் பயபக்தியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.
ஐயனார் நின்ற கோலத்தில் இருந்தால் தேவியர்களும் நின்ற கோலத்தில் இருப்பார்கள்.
இந்திரன், அக்னி, எமதர்மர், நிருதி, வருணர், வாயு, குபேரன், ஈசானியர் திசை தெய்வங்களாக இடம் பெற்றுள்ளனர். ஐயனாரின் பரிவாரங்களாக கருப்பண்ணசாமி, வீரபத்திரர், இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன், சோனை போன்ற ஆண் தெய்வங்களும், செல்லியாய், காளி, நீலகி, ராக்காயி, ராக்காச்சி, கருப்பாயி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி, பேச்சி, ஏழை காத்த அம்மன் மற்றும் சப்த கன்னியர்கள் பெண் பரிவார தெய்வங்களாகவும் கருதப்படுகிறது.
நாடு, ஆடு, மயில், கோழி போன்றவை ஐயனாருடன் காட்சி தரும். சைவ உணவு படையல் ஐயனாருக்கும், பரிவார தெய்வங்களுக்கு ஆடு, கோழியுடன் மது படைப்பதும் காலம் காலமாக நடக்கிறது. ஆடு, கோழி பலியிடும் போது ஐயனார் சன்னதியை மூடி வைத்து விடுவார்கள். ஐயனார் கோயிலின் நுழைவாயில் இடது பக்கம் விநாயகரும், வலது பக்கம் முருகரும் இடம் பெறுகிறார்கள். கோயிலில் காணப்படும் பெரிய குதிரைகள் சேமக்குதிரைகள் என அழைக்கப்படுகிறது. இந்த குதிரைகள் காலை தூக்கியபடி இருக்கும்.
குதிரைகளின் கால்களை தாங்கியபடி இரண்டு பூதங்கள் இருக்கும். பூதங்களுக்கு நடுவே குதிரைக்கு கீழே காளி காட்சியளிப்பது வழக்கம். எருது கட்டுதல் என ஆடு, மாடுகளை ஐயனாருக்கு தானமாக வழங்குவதும், புரவி எடுத்தல் என மண் குதிரைகளை கோயில்களில் ஒப்படைப்பதும் காலம் காலமாக நடக்கிறது. அன்னூர், சோமனூர், அவிநாசி, பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட பகுதியில் ஐயனார் குல தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறது. கொங்கு மண்டலத்தில் பழங்கால மக்களின் இஷ்ட தெய்வமான ஐயனார் போற்றி வணங்கப்படுகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஐஸ்வர்யங்கள் வாரி வழங்கும் ஐயனார்
» கால்நடைகளை காக்கும் கோவில்
» ஆபத்துகளிலிருந்து காக்கும் ஆலங்குடி குருபகவான்
» கைவிடாது காக்கும் கைவிடேயப்பர்
» தீயசக்திகள் தீண்டாது காக்கும் தாய்
» கால்நடைகளை காக்கும் கோவில்
» ஆபத்துகளிலிருந்து காக்கும் ஆலங்குடி குருபகவான்
» கைவிடாது காக்கும் கைவிடேயப்பர்
» தீயசக்திகள் தீண்டாது காக்கும் தாய்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya