Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து நியாயமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்! சோபித தேரர்

Go down

தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து நியாயமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்! சோபித தேரர் Empty தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து நியாயமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்! சோபித தேரர்

Post by oviya Mon Dec 01, 2014 1:12 pm

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு விடயத்தில் தமிழர்களின் வாக்கு தீர்மானிக்கக் கூடிய ஒன்று. தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து நியாயமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். என்று, நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது,

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியானது பொலிஸ் சேவை தொடக்கம் நீதிமன்றம் வரை காணப்படுகிறது. ஊழல்களில் ஈடுபடுபவர்களும், குற்றம் புரிபவர்களும் இந்த அரசினால் அரசினால் பாதுகாக்கப்படுகின்றனர்.

இதனால் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசை தமிழ் மக்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களும் வெறுக்கத் தொடங்கிவிட்டனர்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினால் இந்த நாட்டின் ஜனநாயகம், சட்டம் மற்றும் நல்லாட்சிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதால் வலுவான பொறிமுறையின் கீழ் அரசியல் யாப்பு மாற்றம் செய்யப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை தற்போதைய அரசு ஏற்க மறுப்பு தெரிவித்ததால், தான் உள்ளிட்ட சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க போன்ற குழுவினர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக களமிறக்கத் தீர்மானித்தோம் என அவர் சுட்டிக்காட்டினார்.

சிரேஸ்ட பிக்குகள், மகிந்த ராஜபக்சவை எதிர்த்து நிற்பதால் அவரால் நினைத்த அளவு சிங்கள, பௌத்த வாக்குகளைப் பெற முடியாது.

தற்போதுள்ள நிலைமையில் தமிழ் மக்களின் வாக்குகள் ராஜபக்சவிற்கு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு விடயத்தில் தமிழர்களின் வாக்கு தீர்மானிக்கக் கூடிய ஒன்று. தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து நியாயமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

அத்துடன் நாடாளுமன்ற தெரிவுக் குழு ஊடாகத் தமிழ் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய அரசு தமிழ் மக்களுக்கு விடிவை பெற்றுக்கொடுக்கும்! மைத்திரியால் தீர்வு எட்டப்படும்!- சோபித தேரர் உறுதி
» பொது வேட்பாளருடன் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையை கம்மன்பிலவே தயாரித்தார்: ஓமல்பே சோபித தேரர்
» தமிழ் மக்களின் ஆதரவை தேடும் சிங்கள பேரினவாதம்!!
» ஜனாதிபதி முறையை ஒழிப்பதா இன்று தமிழர்களின் பிரச்சினை: சிவநேசத்துரை சந்திரகாந்தன்
» நீதியான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனக் கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் மனு -

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum