Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்

Go down

இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர் Empty இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்

Post by oviya Mon Dec 01, 2014 2:04 pm

முருகப்பெருமானின் 2-வது படை வீடாகவும், திருச்சீரலைவாய் என்ற சிறப்புடனும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. திருச்செந்தூர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில், கந்தசஷ்டி விழா முக்கியமானது. இந்த ஆண்டுக்கான சஷ்டி விழா கடந்த 24-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

அன்றைய தினம் முதல் ஏராளமான பக்தர்கள் கோவிலில் விரதம் இருந்து வருகின்றனர். விழா நாட்களில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு சிறப்பு பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, சண்முக விலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். மாலையில் ஜெயந்திநாதர் திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. இதைதொடர்ந்து சுவாமி-அம்பாள் தங்க ரதத்தில் வீதி உலா வந்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது.

மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4.30 மணி அளவில் சுவாமி ஜெயந்திநாதர், சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். கடற்கரையில் சுவாமி, சூரபதுமனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

பின்னர் சந்தோச மண்படத்தில் சுவாமி ஜெயந்திநாதர், அம்பாளுக்கு அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் கிரிப்பிரகார உலா வந்து சுவாமி, கோவில் சேர்கிறார். அங்கு சாயாபிஷேகம் நடக்கிறது. திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண பக்தர்கள் சாரை, சாரையாக வந்த வண்ணமாக உள்ளனர்.

சிறப்பு பஸ்கள், திருச்செந்தூர் வரும் ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

7-ம் நாள் விழாவான நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறப்பு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 5 மணி அளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுகிறார்.

10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு அம்பாளுக்கு, சுவாமி காட்சி கொடுக்கிறார். பின்னர் தோள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்
» திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
» இன்று வைகாசி விசாக திருவிழா : திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
» இன்று மண்டல பூஜை லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்
» முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum