Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிகிறார்கள்

Go down

திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிகிறார்கள் Empty திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிகிறார்கள்

Post by oviya Mon Dec 01, 2014 2:10 pm

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி கடந்த 24–ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை யொட்டி  தினமும் காலையிலும்  மாலையிலுமாக சண்முகார்ச்சனையும் யாகசாலை பூஜையும் நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி இன்று (28–ந்தேதி) வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதனையொட்டி இரவு 7 மணியளவில் கோவிலுக்குள் உள்ள கம்பத்தடி மண்டபத்தில் அமைக்கப்படும் ஆலய பணியாளார்கள் திருக்கண்ணில் சுவாமி எழுந்தருளுகிறார். அங்கு கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து சக்திவேல் பெற்று நந்தியை வலம்வந்து முருகபெருமான் திருக்கரத்தில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (29–ந்தேதி) சூரசம்ஹாரம் நடக்கிறது. இதனையொட்டி மாலை 6 மணியளவில் தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமானும் வெள்ளை குதிரை வாகனத்தில் முருகப்பெருமானின் போர்படை தளபதியான வீரபாகும் சன்னதி தெருவில் முன்னே வலம் வருகிறார்கள்.

இதேசமயம் இருமாப்பு கொண்டு சூரபத்மன் வீதி உலா வருகிறார். இந்த நிலையில் முருகப்பெருமான் தன் தாயாரிடம் பெற்ற சக்திவேலைக் கொண்டு சூரபத்மனை நான்கு ரதவீதி களில் துரத்தி சம்ஹாரம் செய்கிறார்.

இந்த நிகழ்ச்சியை கண்டு தரிசனம் செய்தால் சகல பாக்கியமும் கிடைக்கும். ஆகவே இங்கு பக்தர்கள் குவிகிறார்கள். திருவிழாவின் இறுதி நாளான 30–ந்தேதி சட்ட தேரோட்டம் நடக்கிறது. இதனையொட்டி விரதமிருக்கும் பக்தர்கள் சட்டதேரை வடம் பிடித்து கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» குருந்தமலை வேலாயுத சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்
» சோலைமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
» குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்
» கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
» இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum