தமிழ் வைத்திய அதிகாரி நியமனம்: மத்திய சுகாதார அமைச்சு பாராமுகம்
Page 1 of 1
தமிழ் வைத்திய அதிகாரி நியமனம்: மத்திய சுகாதார அமைச்சு பாராமுகம்
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் தமிழர் ஒருவர் வைத்திய அதிகாரியாக இருப்பதனால் இந்த வைத்தியசாலையை மத்திய மாகாண சுகாதார அமைச்சு பாராமுகமாக கவனிக்கின்றதா? என்ற கேள்வி எழுவதாக தாவரவியல் பூங்காக்கள் பொது பொழுது போக்கு பிரதி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கூறினார்.
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக அங்குள்ள வர்த்தகர்கள் பிரதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்ததை தொடர்ந்து, பிரதியமைச்சர், ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன்போது வைத்தியசாலையை பார்வையிட்ட பிரதி அமைச்சர் அங்குள்ள அதிகாரிகளிடம் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்துகொண்டார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார்.
இவ்வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
எதிர்வரும் சனிக்கிழமை 6ம் திகதி ஸ்ரீபாத யாத்திரை பருவகாலம் ஆரம்பமாகின்றது.
இதன்போது ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் இந்த வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைக்காக வரவேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கமுடியாத நிலையிலே இவ்வைத்தியசாலை காணப்படுகின்றது.
இந்த வைத்தியசாலையில் உயர் அதிகாரியாக தமிழர் ஒருவர் இருப்பதன் காரணமாக இவ்வைத்தியசாலை, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்படுகின்றதா? என்ற சந்தேகமும் எனக்குள் எழுகின்றது.
வைத்தியசாலையின் இந்நிலைமைக்கு மத்திய மாகாண சுகாதார அமைச்சரும் மத்திய மாகாண சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் காரணமாக இருக்கின்றார்கள்.
நாங்களும் இந்த நாட்டில் வாழ்கின்றவர்கள் என்பதை பலரும் மறந்து விடுகின்றார்கள். வைத்தியசாலையின் தேவைக்கு ஏற்ப எஸ்பிரின்கள் கூட இல்லை என்று கேள்விப்படும் போது வேதனையாக உள்ளது.
வைத்தியசாலையில் கட்டிடங்கள் மாத்திரமே கம்பீரமாக நிற்கின்றன. ஆனால் உள்ளே ஒன்றும் இல்லை. சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கு ஏற்ப இவ்வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லை, சிற்றூழியர்கள் இல்லை, அம்பியுலன்ஸ் வாகனம் இல்லை, பாதை மிகவும் மோசமாக உள்ளது, இங்குள்ள மின் உயர்த்தி, கடந்த ஒரு வருடமாக செயற்பாடத நிலையில் உள்ளது.
இதன் காரணமாக நான்கு மாடி கொண்ட இந்த வைத்தியசாலையில் நோயாளர்களை கொண்டு செல்வதில் பாரிய சிரமங்களை வைத்தியர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை. இவ்விடயம் தொடர்பாக மத்திய மாகாண ஆளுநர் மற்றும் மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.
இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாக அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.
மேலும் மத்திய அரசாங்கத்தின் மூலம் உடனடியாக அம்புலன்ஸ் வாகனம் ஒன்றையும் பெற்றுத் தருவதாக அவர்கள் கூறியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த பிரச்சினை தொடர்பாக பிரதேசவாசிகள் கருத்து தெரிவிக்கையில்,
இந்த வைத்தியசாலை கட்டிடத்தில் வசதிகள் இருந்தாலும் கூட வைத்தியர்களின் குறைபாடுகள் அதிகமாகவுள்ளது.
அதேபோல இந்த பிரதேசத்தை பொருத்தமட்டில் இலட்சக்கனக்கான மக்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசம் ஆகும். நோயாளிகளை இங்கு கொண்டு வரும் போது நோயாளிகளுக்கான தகுந்த சிகிச்சையின்மை காரணமாக ஏனைய வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக அங்குள்ள வர்த்தகர்கள் பிரதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்ததை தொடர்ந்து, பிரதியமைச்சர், ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன்போது வைத்தியசாலையை பார்வையிட்ட பிரதி அமைச்சர் அங்குள்ள அதிகாரிகளிடம் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்துகொண்டார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார்.
இவ்வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
எதிர்வரும் சனிக்கிழமை 6ம் திகதி ஸ்ரீபாத யாத்திரை பருவகாலம் ஆரம்பமாகின்றது.
இதன்போது ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் இந்த வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைக்காக வரவேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கமுடியாத நிலையிலே இவ்வைத்தியசாலை காணப்படுகின்றது.
இந்த வைத்தியசாலையில் உயர் அதிகாரியாக தமிழர் ஒருவர் இருப்பதன் காரணமாக இவ்வைத்தியசாலை, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்படுகின்றதா? என்ற சந்தேகமும் எனக்குள் எழுகின்றது.
வைத்தியசாலையின் இந்நிலைமைக்கு மத்திய மாகாண சுகாதார அமைச்சரும் மத்திய மாகாண சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் காரணமாக இருக்கின்றார்கள்.
நாங்களும் இந்த நாட்டில் வாழ்கின்றவர்கள் என்பதை பலரும் மறந்து விடுகின்றார்கள். வைத்தியசாலையின் தேவைக்கு ஏற்ப எஸ்பிரின்கள் கூட இல்லை என்று கேள்விப்படும் போது வேதனையாக உள்ளது.
வைத்தியசாலையில் கட்டிடங்கள் மாத்திரமே கம்பீரமாக நிற்கின்றன. ஆனால் உள்ளே ஒன்றும் இல்லை. சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கு ஏற்ப இவ்வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லை, சிற்றூழியர்கள் இல்லை, அம்பியுலன்ஸ் வாகனம் இல்லை, பாதை மிகவும் மோசமாக உள்ளது, இங்குள்ள மின் உயர்த்தி, கடந்த ஒரு வருடமாக செயற்பாடத நிலையில் உள்ளது.
இதன் காரணமாக நான்கு மாடி கொண்ட இந்த வைத்தியசாலையில் நோயாளர்களை கொண்டு செல்வதில் பாரிய சிரமங்களை வைத்தியர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை. இவ்விடயம் தொடர்பாக மத்திய மாகாண ஆளுநர் மற்றும் மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.
இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாக அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.
மேலும் மத்திய அரசாங்கத்தின் மூலம் உடனடியாக அம்புலன்ஸ் வாகனம் ஒன்றையும் பெற்றுத் தருவதாக அவர்கள் கூறியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த பிரச்சினை தொடர்பாக பிரதேசவாசிகள் கருத்து தெரிவிக்கையில்,
இந்த வைத்தியசாலை கட்டிடத்தில் வசதிகள் இருந்தாலும் கூட வைத்தியர்களின் குறைபாடுகள் அதிகமாகவுள்ளது.
அதேபோல இந்த பிரதேசத்தை பொருத்தமட்டில் இலட்சக்கனக்கான மக்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசம் ஆகும். நோயாளிகளை இங்கு கொண்டு வரும் போது நோயாளிகளுக்கான தகுந்த சிகிச்சையின்மை காரணமாக ஏனைய வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மைத்திரிபாலவின் ஊடகப் பேச்சாளர்களாக மங்கள - ராஜித நியமனம்?
» ஆளுங்கட்சிக்கு தாவிய திஸ்ஸ சுகாதார அமைச்சராக பதவிப்பிரமாணம்!
» வாக்கு சீட்டு அச்சுப் பகுதியின் அதிகாரி மாற்றம்: அரச அச்சகத்தி்ல் குழப்பம் ஆரம்பம்
» தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்திற்கு கோத்தாவின் தலையீட்டில் நிதி ஒதுக்கீடு
» தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்திற்கு கோத்தாவின் தலையீட்டில் நிதி ஒதுக்கீடு
» ஆளுங்கட்சிக்கு தாவிய திஸ்ஸ சுகாதார அமைச்சராக பதவிப்பிரமாணம்!
» வாக்கு சீட்டு அச்சுப் பகுதியின் அதிகாரி மாற்றம்: அரச அச்சகத்தி்ல் குழப்பம் ஆரம்பம்
» தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்திற்கு கோத்தாவின் தலையீட்டில் நிதி ஒதுக்கீடு
» தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்திற்கு கோத்தாவின் தலையீட்டில் நிதி ஒதுக்கீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya