Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


தொழிலில் லாபம் தரும் புரட்டாசி சனி விரத பூஜை

Go down

தொழிலில் லாபம் தரும் புரட்டாசி சனி விரத பூஜை Empty தொழிலில் லாபம் தரும் புரட்டாசி சனி விரத பூஜை

Post by oviya Sun Nov 30, 2014 1:00 pm

தொழில் சிறக்கக் காத்தல் தொழில் கடவுள் திருப்பதி வெங்கடாசலபதியை வழிபட வேண்டியது அவசியமாகும். எழுமலையானை யார் ஒருவர் ஆத்மார்த்தமாக வழிபடுகிறார்களோ நிச்சயமாக அவர்களது தொழில், வளர்ச்சி பெறும். தொழிலில் ஏற்படும் தொல்லைகள் மாறும். தொழில் பெருகும்.

தொழில் தொடர்பாக எந்த ஒரு செயலையும் செய்யும் முன்னால் திருப்பதி வெங்கடாசலபதியைப் பணிந்துவிட்டுச் செய்வது தான் முறையாகும். எந்த தொழில் செய்பவராய் இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க வேண்டும். அப்போது அந்த ஆண்டு கிட்டிய லாபத்தில் ஒரு சதவிகிதத்தை உண்டியலில் காணிக்கை செலுத்த வேண்டும்.

இவ்வாறு செய்தால் அடுத்த ஆண்டு, தொழிலில் பல மடங்கு லாபம் கிடைக்கும். எந்த தொழில் செய்பவராய் இருந்தாலும், அவர் தம் தொழில் நிலையத்திலோ வீட்டிலோ, ஒவ்வொரு சனிக்கிழமையும் வெங்கடாசலபதிக்கு பூஜை செய்ய வேண்டும். வீட்டில் வெங்கடாசலபதி பூஜை செய்பவர் தம் கடைக்கு சென்றதும் ஊதுவத்தி ஏற்றி வைத்து,

சில நிமிட நேரம் ஏழுமலையானை மனத்தில் நினைத்து விட்டு, தம் தொழிலை தொடங்க வேண்டும். ஒவ்வொரு சனிக்கிழமையும் துளசி நீரைத் தொழில் நிலையத்தில் எல்லா இடத்திலும் தெளிக்க வேண்டும். துளி தள வாசனையுள்ள இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்கிறது பத்ம பூராணம்.

சனிக்கிழமை தோறும் வீட்டில் பின் வருமாறு பூஜை செய்ய வேண்டும். முதல் பூஜையை புரட்டாசி மாதம் முதல் (சனிக்கிழமை) தொடங்க வேண்டும். வேறு எதுவும் பார்க்க வேண்டாம். இல்லையென்றால் தேய்பிறை, கரிநாள், அஷ்டமி, நவமி, திதி, இறந்தவர் திதி ஆகியன இல்லாத ஒரு நல்ல சனிக்கிழமையன்று தொடங்க வேண்டும்.

அன்று வீட்டைத் தூய்மை செய்ய வேண்டும். வீட்டின் அறையில் கிழக்கு முகமாக சுவரில் திருப்பதி வெங்கடேஸ்வரர் வைர அங்கி சேவை நடந்த வண்ணப்படத்தை மாட்டி வைக்க வேண்டும். அதன் கீழே ஒரு மேடை அமைக்க வேண்டும். வண்ணப்படம் இல்லாதவர், சுவரில் வட்டமாக மஞ்சள் வண்ணம் பூசி, அதன்மீது திருப்பதி வெங்கடாசலபதியின் திருநாமத்தை வரைந்து கொள்ள வேண்டும்.

அவ்வட்டத்தின் மேல்பக்கம், இடப்பக்கம், வலப்பக்கம் ஆகிய மூன்று பக்கமும் சிறு ஆணி அடித்து வைக்க வேண்டும். துளசித் தளத்தை மாலையாக்கி, படத்திற்கோ திருநாமத்திற்கோ அணிய வேண்டும். கீழே உள்ள பீடத்தில் ஒரு தட்டில் நெல்பொரி, இனிப்பு பலகாரங்கள், கல்கண்டு, இளநீர் ஆகியவற்றை நிவேதனமாக செய்து வைத்து கொள்ள வேண்டும்.

கீழே உள்ள பீடத்தில் உண்டியல் ஒன்று வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சனிக்கிழமையும் பூஜை முடிந்தவுடன் உண்டியலில் காசு இட வேண்டும். இந்த உண்டியல் பணத்தை அப்படியே திருப்பதி கோவிலுக்கு செல்லும் போது கோவில் உண்டியலில் இட வேண்டும். தனியாக ஒரு தட்டில் அருகம்புல் பரப்பி வைத்து அதன் மீது மஞ்சள் தூளிலோ பசுஞ்சாணத்திலோ பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.

பிள்ளையார் தட்டு அருகே ஓர் இலையிலோ தட்டிலோ பொரிக்கடலை, தேங்காய், வாழைப்பழம் ஆகிய நிவேதனப் பொருள்களை வைத்து விநாயகருக்கு பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்த பிறகு திருப்பதி வெங்கடேஸ்வரரின் சுப்ரபாதம், ஸ்லோகம், ஸ்தோத்திரம், ஆகியவற்றை கூறி கற்பூர தூப தீபம் காட்டி வணங்க வேண்டும்.

அடுத்து பிரசாதங்களை பிறருக்கு வழங்கிவிட்டுத் தாங்கள் உட்கொள்ள வேண்டும். திருப்பதி வெங்கடாசலபதியை ஒவ்வொரு சனிக்கிழமையும் வீட்டிலும் தொழில் நிலையங்களிலும் வழிபடுகிறவர்களுக்கு தொழிலில் மேன்மையும் பொருளாதார முன்னேற்றமும் நிச்சயம் ஏற்படும்.

ஆண்டுக்கு ஒரு முறை திருப்பதி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வர வேண்டும். திருப்பதியில் இருந்து திரும்பி வந்ததும், இயன்ற அளவு அன்னதானம் செய்தல் வேண்டும். அது மிகச்சிறந்த பலனை தரும். அதாவது வாழ்வில் இந்த விரதம் நிச்சயம் திருப்பம் தரும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum