Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


சந்திரனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Go down

சந்திரனை பற்றி அறிந்து கொள்ளுங்கள் Empty சந்திரனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Post by oviya Tue Dec 02, 2014 1:32 pm

சந்திரன் திருப்பாற்கடலில் அமுதம் கடைகையில் உதித்தவர் என்றும், அத்திரிக்கும் அனுசூயைக்கும் பிறந்தவர் என்றும் கூறுவர். சந்திரன் தட்சனின் பெண்கள் இருபத்தெழுவரையும் மணந்து கொண்டவர். எனினும் அவர்கள் எல்லோரிடமும் ஒருமித்த அன்பு செலுத்தாது கார்த்திகை, ரோகிணி ஆகிய இருவரிடமுமே மிகுந்த அன்புடன் பழகி வந்ததால் மற்ற பெண்கள் தந்தை தட்சனிடம் குறை கூறினார்களாம்.

இதனால் கோபமுற்ற தட்சன் நாள்தோறும் ஒவ்வோர் இரவிலும் உடல் தேயும்படி சந்திரனுக்கு சாபமிட்டார். சாபமடைந்த சந்திரன் கையிலாயம் சென்று சிவபெருமானைத் தொழுது வளரவும். நோய் நீங்கவும் அருள் பெற்றான் எனப்புராணங்கள் கூறும்.

திருப்பாற்கடல் கடைந்தபோது அமுதம் அருந்த தேவர் போல் வேடமிட்டு வந்த ராகுவையும், கேதுவையும் திருமாலிடம் காட்டிக் கொடுத்தமையால் பகைடை கொண்ட ராகு, கேதுவால் விழுங்கப்படுகிறார் எனவும் புராணங்கள் கூறும். பிரகஸ்பதியின் (குரு) மனைவியாகிய தாரைக்கும் சந்திரனுக்கும் பிறந்தவர், புதன்.

`திங்களைப் போற்றுதும், திங்களைப் போற்றுதும்' என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சூரியனுக்கு அடுத்து சந்திரனை வணங்கிப் போற்றுகிறார். வேதங்களெல்லாம் சந்திரனைப் புகழ்கின்றன. சங்க காலத்திலும், சந்திர வழிபாடு இருந்து வந்தது குறுந்தொகையில் தொழுது காண் பிறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்திரன் என்ற சொல்லுக்குத் திங்கள், நிலவு, மதி, வெண்மதி, மதியோன், சோமன் போன்ற பல பெயர்கள் உண்டு. இவருக்குரிய நாள் திங்கட்கிழமை. ஒரு ராசியைக் கடக்க இரண்டேகால் நாட்கள் எடுத்துக் கொள்வார். பன்னிரெண்டு ராசிளை 27 நாட்களில் சுற்றி வருவார்.

சந்திரன் சூரியனைச் சுற்றாது பூமியைச் சுற்றி வரும் கிரகமாகும். தண் ஒளியுடைய சந்திரனுக்குச் சுயமாகத்தன் ஒளி கிடையாது. சூரிய ஒளியினாலேயே பிரகாசிப்பவர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» எவரும் மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை: முன்னிலை சோசலிச கட்சி
» தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: ரணில்
» ஐரோப்பிய நாடுகளின் தூதர்களுடன் வைகோ சந்திப்பு: ஈழத் தமிழர் பற்றி கலந்துரையாடல்
» தமிழ் மக்களை பற்றி கூற இவருக்கு அருகதை இல்லை!- கல்முனை மாநகரசபை உறுப்பினர் அதிருப்தி
» கல்விக் கடவுளர் பற்றி காஞ்சி மஹாஸ்வாமிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum