Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


விளக்கேற்ற உபயோகிக்க வேண்டிய எண்ணெய்

Go down

விளக்கேற்ற உபயோகிக்க வேண்டிய எண்ணெய் Empty விளக்கேற்ற உபயோகிக்க வேண்டிய எண்ணெய்

Post by oviya Tue Dec 02, 2014 1:43 pm

* பசு நெய்-எல்லா சுகங்களும் கிடைக்கும். செல்வம் சேரும்.

* நல்லெண்ணை-எல்லாவித பீடைகளும் விலகும்.

* கடலை எண்ணெய்-இதை ஊற்றி தீபம் ஏற்றக்கூடாது.

* விளக்கு எண்ணெய்-தாம்பத்திய சுகம், புகழ் தேவதை வசியம் கிடைக்கும். பொதுவாக சுத்தமான, கலப்படமில்லாத நல்லெண்ணை ஏற்றி வீட்டில் விளக்கேற்றினாலே போதும். சிறிய வெள்ளி காமாட்சி விளக்கு வாங்கி அதில் நெய் ஊற்றி காலையிலும், மாலையிலும் ஏற்றி வைப்பது நல்லது.

ஆலயத்தில் இலுப்ப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி சிவனை வழிபட்டால் கடன்கள் தீரும். இலுப்ப எண்ணெய் கோவில்களில் மட்டும்தான் பயன்படுத்தலாம். வீட்டில் விளக்கேற்ற இலுப்பை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. கணபதிக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம். மகாலட்சுமிக்கு பசு நெய் ஊற்றி விளக்கேற்றலாம்.

மகாவிஷ்ணுவுக்கு நல்லெண்ணை ஊற்றி விளக்கேற்றலாம். எல்லா தேவதைகளுக்கும் நல்லெண்ணை விளக்கு ஏற்றலாம். விளக்கிற்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் கடலை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றவே கூடாது. அப்படி ஏற்றி வைத்தால் கடன்கள் பெருகும். தீயவிளைவுகள்தான் ஏற்படும்.

பசுநெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த ஐந்தும் கலந்த பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி பஞ்சமி திதியில் தேவியை வழிபட்டால் அம்மனின் அருள் கிடைக்கும். பஞ்சதீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி வடக்குப் பக்கம் பார்த்து தீபம் ஏற்றி வந்தால் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

துன்பங்கள் நீங்கும். வரவேண்டிய பண பாக்கிகள் வந்து சேரும். ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய தினங்களில்தான் குத்துவிளக்கை விளக்கி சுத்தப்படுத்த வேண்டும். பிற நாட்களில் சுத்தப்படுத்தக் கூடாது.

குத்து விளக்கு பூஜை செய்தால் தலைவாழை இலை மீது குத்து விளக்கை வைத்து பூஜை செய்ய வேண்டும். விளக்கில் விபூதி, சந்தனம் அல்லது குங்குமம் உச்சியில் ஒரு பொட்டும் அதன் கீழ் மூன்றும், அதன் அடி கீழ் இரண்டும், அடியில் இரண்டுமாக எட்டு இடங்களில் பொட்டு இட வேண்டும்.

குத்து விளக்கின்அடிப்பாகத்திலும், நடுப்பகுதியிலும், உச்சிப் பகுதியிலும் பூச்சூட வேண்டும். விளக்கில் முதலில் திரியைப் போட்டு பின்னர் எண்ணெய் ஊற்றக் கூடாது. முதலில் எண்ணெய் ஊற்றி விட்டு பின்னர்தான் திரிபோட வேண்டும்.

தீபாவளிதிருநாளில் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். தீபாவளி தின தீப வழிபாடு உங்கள் புகழ், செல்வம், உடல் நலத்தை மேலும் அதிகரிக்கும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum