Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


புதிய அரசு தமிழ் மக்களுக்கு விடிவை பெற்றுக்கொடுக்கும்! மைத்திரியால் தீர்வு எட்டப்படும்!- சோபித தேரர் உறுதி

Go down

புதிய அரசு தமிழ் மக்களுக்கு விடிவை பெற்றுக்கொடுக்கும்! மைத்திரியால் தீர்வு எட்டப்படும்!- சோபித தேரர் உறுதி Empty புதிய அரசு தமிழ் மக்களுக்கு விடிவை பெற்றுக்கொடுக்கும்! மைத்திரியால் தீர்வு எட்டப்படும்!- சோபித தேரர் உறுதி

Post by oviya Thu Dec 04, 2014 1:33 pm

புதிய அர­சாங்­கத்தின் மலர்ச்சி தமிழ் மக்­க­ளுக்கு விடி­வையும் சுதந்­தி­ரத்­தையும் பெற்­றுக்­கொ­டுக்கும். தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு மைத்­தி­ரியால் எட்­டப்­படும். அதற்கு நான் உத்­த­ர­வாதம் வழங்­கு­கின்றேன் என கோட்டை நாக விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியும் சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் இணைப்­பா­ள­ரு­மான மாது­லு­வாவே சோபித தேரர் தெரிவித்தார்ர்.
பொது எதி­ர­ணியின் கொள்கைப் பத்­தி­ரத்­திரம் தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

சகல கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்து பொது கூட்­ட­ணி­யொன்­றினை உரு­வாக்கிக் கொடுத்­துள்ளேன். இனி இவர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து தமது இலக்­கினை நோக்கி பய­ணிக்க வேண்டும்.

நாம் ஆரம்­பத்தில் இருந்தே சகல தரப்­பி­ன­ரு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். ஆளும் தரப்­பி­ன­ருக்கு பல சந்­தர்ப்­பங்­களில் அவர்கள் விடும் தவ­றினை சுட்டிக் காட்­டினேன்.

ஜனா­தி­ப­தியை பல சந்­தர்ப்­பங்­களில் சந்­தித்துப் பேசினேன். அர­சாங்­கத்தின் முக்­கிய அமைச்­சர்­களை சந்­தித்தேன். ஆனால் இவர்கள் அனை­வரின் எதிர்­பார்ப்பும் சர்­வா­தி­கார ஆட்­சி­யினை தக்­க­வைக்க வேண்டும் என்­ப­துவே.

எனவே பொது மக்கள் அனை­வரும் எதிர்க்கும் ஆட்­சி­யினை அரசு நடாத்த நினைக்­கின்­றது. எனவே இந்த அர­சுக்கு எதி­ராக நாம் அனை­வரும் கைகோர்க்க வேண்டும் என தீர்­மா­னித்தேன்.

எனவே எனது முயற்சி இன்று பாதி வெற்றி கண்­டு­விட்­டது. நாட்டில் தூய்­மை­யான ஆட்­சி­யினை அமைக்க சரி­யான தலை­மைத்­து­வத்தின் கீழ் சகல உறுப்­பி­னர்­க­ளையும் ஒன்று திரட்டி பொது எதி­ர­ணி­யினை உரு­வாக்கி விட்டோம். இனி ஒவ்­வொரு நாளும் எமது வெற்­றி­யினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான சகல நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்வோம்.

கேள்வி. - பொது எதி­ர­ணியின் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்பில் என்ன நட­வ­டிக்கை உள்­ளது?

எமது பிர­தான எதிர்ப்­பார்ப்பு நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை இல்­லா­தொ­ழிப்­பது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­வதே நாட்டின் முக்­கால்­வாசி பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைத்து விடும்.

நாட்டில் சிறு­பான்மை மக்கள் தொடர்ச்­சி­யாக பிரச்­சி­னை­களை சந்­தித்­துக் ­கொண்­டி­ருக்­கின்­றனர். வடக்கு கிழக்கு மக்கள் கடந்த 30 வரு­டங்­க­ளாக யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்­டனர்.

அதன் பின்னர் வடக்கில் இரா­ணுவ அடக்கு முறைகள் பொரு­ளா­தார சிக்­கல்கள் நில அப­க­ரிப்­புகள் என பல சிக்­கல்­க­ளுக்கு இன்­று­வரை முகம் கொடுத்து வரு­கின்­றனர்.

இவை அனைத்­திற்கும் காரணம் நிறை­வேற்று முறை­மையின் சர்­வ­தி­கா­ரத்­தன்­மையே.

எனவே அதை அழிக்க சக­லரும் ஒன்­றி­ணை­வது நாட்டின் இனப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை ஏற்­ப­டுத்தி விடும்.

அதே போல் 17 ஆவது திருத்தச் சட்­டத்­தினை மீளவும் உரு­வாக்­கு­வது நாட்டில் சுயா­தீன தன்­மை­யினை ஏற்­ப­டுத்தி விடும்.

எனவே எல்லா வகை­யிலும் சிறு­பான்மை மக்­க­ளுக்கு தீர்வு கிடைக்கும் வகை­யி­லேயே எமது கொள்கைத் திட்டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

கேள்வி. - இந்த புதிய கூட்­டணி தனது வாக்­கு­று­தியை காப்­பாற்றும் என்­பதில் என்ன உறு­தித்­தன்மை உள்­ளது?

தமிழ் மக்­க­ளுக்கு மட்­டு­மன்றி முழு நாட்­டிற்கும் ஒரு விடு­தலை தேவைப்­ப­டு­கின்­றது. அதற்கு முழு நாட்டு மக்­களும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்டும். புதிய அர­சாங்­கத்­தினை அமைக்கும் எமது கூட்­ட­ணியில் தமிழ் மக்­க­ளுக்கு விடி­வி­னையும் சுதந்­தி­ரத்­தி­னையும் ஏற்­ப­டுத்திக் கொடுக்கும்.

இன்று சிறு­பான்மை மக்கள் தமது உரி­மை­க­ளையும் சலு­கை­க­ளையும் இழந்து தனித்து விட்­டனர். அவற்­றினை நிச்­சயம் வென்­றெ­டுக்க வேண்டும்.

அதேபோல் ஜன­நா­ய­கத்தை விரும்பும் ஜன­நா­ய­கத்தை இந்த நாட்டில் ஏற்­ப­டுத்த முயற்­சிக்கும் கூட்­ட­ணியே எம்­முடன் கைகோர்த்­துள்­ளது.

எனவே மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அர­சாங்­கத்தில் அதி­காரப் பகிர்வு விடயம் மட்டும் அல்­லாது சிறு­பான்மை மக்­களின் நியா­ய­மான எதிர்­பார்ப்­புகள் நிறைவேற்றப்படும்.

மத விடயங்களிலும் மொழி விடயங்களிலும் சமத்துவம் ஏற்படுத்தப்படும். இதனையே நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

எனவே புதிய ஆட்சியில் அனைவருக்கும் சுதந்திரம் கிடைக்கும். தேசிய அரசாங்கத்தில் தமிழ் மக்கள் பாதுகாக்கப் படுவார்கள் என நான் உறுதியளிக்கின்றேன்.

எனவே வார்த்தையை நம்பி சிறுபான்மை மக்கள் வாக்களியுங்கள் எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கு எதிராகச் செயற்படப் போவதில்லை!- சோபித தேரர்

நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக செயற்படாது என அதன் தலைவர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது அமைப்பு ஜனாதிபதிக்கு எதிரான அமைப்பல்ல. இது ஜனாதிபதியின் கொள்கைக்கு அமைவானது.

அவரது கொள்கையை பற்றி பேசுவது அவருக்கு எதிரானதா?. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிக்குமாறு கோரி அவரே பாத யாத்திரை மேற்கொண்டார்.

இந்த ஆட்சி முறை கேடு விளைவிக்க கூடியது என்பதானாலேயே அவரது மகிந்த சிந்தனையில் அதனை ஒழிக்க போவதாக வாக்குறுதி வழங்கப்பட்டது.

நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒழித்தால் மிகவும் பெறுமதியானதாக இருக்கும்.

இதனால், எமது நடவடிக்கையானது ஜனாதிபதிக்கு எதிரானதல்ல. இதன் காரணமாகவே தேர்தல் முறையில் மாற்றங்களை செய்யுங்கள் என நாம் கோருகிறோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவ முடியாது என்ற விடயத்தை அரசியல் அமைப்பு சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற யோசனையை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

கட்சி தாவினால் அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் மாதுளுவாவே சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து நியாயமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்! சோபித தேரர்
» பொது வேட்பாளருடன் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையை கம்மன்பிலவே தயாரித்தார்: ஓமல்பே சோபித தேரர்
» கூட்டமைப்பின் உள்ளகச் சிக்கல்களுக்கு தீர்வு காண யாப்பு நடைமுறை அவசியம்: சுரேஸ் பிறேமச்சந்திரன்
» சஷ்டிக் கவசத்தை 216 தடவை படித்தால் குழந்தை பாக்கியம் உறுதி
» தங்கமான தேசத்தை உருவாக்கித் தருவேன்! தமிழர்களிடம் மஹிந்த உறுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum