Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


அமைச்சர் நிமால் சிறிபால,பசிலுடன் பனிப்போரில்!

Go down

அமைச்சர் நிமால் சிறிபால,பசிலுடன் பனிப்போரில்! Empty அமைச்சர் நிமால் சிறிபால,பசிலுடன் பனிப்போரில்!

Post by oviya Fri Dec 05, 2014 12:19 pm

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாக பிளவுப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தனக்கு சாதமாக்கி கொள்ளும் நடவடிக்கை ஒன்றில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
ராஜபக்ஷவினரின் குடும்ப ஆட்சி குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருந்ததுடன் இதனை சமாளிக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் பதவியை வழங்கவும் முயற்சித்தார். எனினும் இது அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் சமாளிப்பு நடவடிக்கையின் ஒரு செயல் என தெரியவந்தது.

இதன் காரணமாவே மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இருந்து விலகியதாக சுதந்திர கட்சிக்குள் கருத்து உருவாகியுள்ளது. ராஜபக்ஷவினரின் இந்த சமாளிப்பு நடவடிக்கைகளை நிராகரித்து விட்டு மைத்திரிபால சிறிசேன, ராஜபக்ஷ குடும்பத்தை ஆட்சியில் இருந்து அகற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களம் இறங்கினார்.

எனினும் அவர் மீதுள்ள நம்பிக்கையீனம் காரணமாக ஜனாதிபதி இது குறித்து போதிய அக்கறை காட்டவில்லை. இவ்வாறான சூழ்நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தேர்தலில் தோல்வியடைந்தாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிடம் இருப்பதால், புதிய பிரதமராகும் வாய்ப்பு சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவருக்கு கிடைக்கலாம் என்பதுடன் அது இலகுவான காரியமாகவும் இருக்கும்.

இந்த சந்தர்ப்பத்தை பஷில் ராஜபக்ஷவுக்கு கொடுத்து விடக் கூடாது என்பதற்காக நிமால் தலைமையிலான அணியினர் இந்த நடவடிக்கையை ஆரம்பித்து மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் டளஸ் அழகபெரும அணியினரின் ஆதரவு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கு கிடைத்துள்ளதாக சுதந்திர கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ஷவினர் முன்னர் செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என்று எச்சரிக்கும் நோக்கிலேயே, சூழ்ச்சிக்காரர்கள் தம் பக்கம் இழுத்து கொண்டது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன அல்ல பிரதமர் கனவு கலைந்து போன மைத்திரிபால சிறிசேன என, டளஸ் அழகபெரும அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியதாக அறியகிடைத்துள்ளது.

இதனிடையே ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் தோல்வியின் பின்னணியல் அமை்சசர் நிமால் சிறிபால டி சில்வா இருப்பதாக குற்றச்சாட்டு ஒன்றும் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது. இந்த குற்றச்சாட்டை பசில் ராஜபக்ஷ தரப்பு சுமத்தியிருக்கலாம் என நிமால் தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நிமால் சிறிபால டி சில்வா, எதிரணியில் இணைந்து கொள்வது தொடர்பில் கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகளின் தகவல்கள் தெரிவித்தன. இதன் காரணமாகவே ஊவா மாகாண சபை தேர்தலின் போது அவர் அமைதியாக இருந்ததாக கூறப்பட்டது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?
» எதிர்க்கட்சிக்கு மாறப்போகும் கல்வி அமைச்சர்!
» சிறுபான்மையினரின் வாக்கு எமக்கு வேண்டாம் அமைச்சர் மகிந்த
» அமைச்சர் றிசார்ட் அசாத் சாலியுடன் இரகசிய பேச்சு!
» நாமல் ராஜபக்சவின் சொற்படி நடக்க அமைச்சர் சியம்பலாபிட்டியவிற்கு ஜனாதிபதி ஆணை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum