Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்

Go down

குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர் Empty குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்

Post by oviya Fri Dec 05, 2014 12:36 pm

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த மாதம் 24–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினசரி காலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு பூஜைகள்,மாலை 6 மணி முதல் சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி, முத்தாரம்மன் ஒவ்வொரு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விரதம் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கொடியேறியதும் காப்பு கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது.இதை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர். பக்தர்கள் பலர் தாங்கள் வசூலித்த காணிக்கைகளை கோவில் உண்டியல்களில் செலுத்தி வருகின்றனர். சுமார் 800க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் நேற்று முதல் குலசேகரன்பட்டினத்தில் ஆங்காங்கே முகாமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

பக்தர்கள் வந்து செல்ல வசதியாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குலசேகரன்பட்டினத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்.பி. .துரை உத்தரவின் பேரில் திருச்செந்தூர் போலீஸ் டி.எஸ்.பி கோவிந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாளை 11–ம் திருநாளையொட்டி அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் பவனி வருதல், பின்பு மாலை கோவிலுக்கு அம்மன் வந்ததும், பக்தர்கள் காப்பு அவிழ்த்து வேடம் கலைவார்கள். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறநிலையத்துறையின் நெல்லை இணை ஆணையர் அன்புமணி, தூத்துக்குடி உதவி ஆணையரும், கோவில் தக்காருமான செல்லத்துரை, கோவில் நிர்வாக அதிகாரி கணேசன் மற்றும் ஊழியர்கள் செய்து உள்ளனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
» குலசேகரன்பட்டணம் தசரா விழா : இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்
» திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
» திருச்சானூர் கோவிலில் இன்று பஞ்சமி தீர்த்த விழா: பக்தர்கள் புனித நீராடினார்கள்
» இன்று வைகாசி விசாக திருவிழா : திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum