சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?
கல்விச்செல்வத்தை அடைய, அறிவும், ஆற்றலும் பெறக் கலைமகளின் அருள் வேண்டும். நமது நாட்டில் சரஸ்வதிக்கு என்று தனிக்கோயில்கள் இல்லை எனவே கலைமகளை நம் வீட்டிலே நாமே பூஜை செய்து வழிபட வேண்டும்.
முதன்முதலாக பூஜையை எந்த மாதத்திலும், எந்த நாளிலும், எந்தக்கிழமையிலும் தொடங்கலாம். ஆனால் அன்று பவுர்ணமியாக மட்டும் இருக்க வேண்டும். கலைமகளுக்குப் பூஜை செய்யும் போது அலை மகளுக்கும் சேர்த்து வழிபாடு செய்ய வேண்டும்.
மலர்களுள் வெண்தாமரை, செந்தாமரை, மல்லிகை, முல்லை, இருவாட்சி, சம்பங்கி, மருக்கொழுந்து,வெட்டிவேர், மற்றும் வாசனைத் திரவியங்கள், சந்தனம் முதலியவற்றையும் இளநீர்,மாதுளம் பழம், கொய்யா, கரும்பு, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, கற்பூரம், ஊதுவத்தி முதலியனவற்றையும் சேகரிக்கவேண்டும்.
நிவேதனப் பொருள்களாகக்கல்கண்டு, பால்பாயசம், வெண்கடலைக் சுண்டல், இனிப்புச் சுவையுள்ள பலகாரங்கள் ஆகியவற்றைக் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
பூஜைப் பொருள்களில் ஐந்துமுக விளக்கும் கலசத்திற்காக இரு தட்டுகள், இரு செம்புகள், இரு தேங்காய்கள்,நெல் பச்சஅரிசி ஆகியவையும் புதிதாக வாங்கப்பட்ட பேனா பென்சில், சில நோட்டுப்புத்தகங்கள், சிலேட்டுகள் ஆகியவையும் இடம் பெற வேண்டும்.
வீட்டின் அறையில் நடுப்பகுதியில் கிழக்கு முகமாக பீடம் அமைக்க வேண்டும். அதில் சதுரமாக நெல்லை பரப்ப வேண்டும். அதன் மீது இரு தட்டுகளில் பச்ச அரிசியை பரப்ப வேண்டும். அதில் கலசங்களை வைக்க வேண்டும்.
முதல் கலசத்தின் கீழ்ச்சுற்றில் வெண்தாமரை இதழ்களையும், இரண்டாவது கலசத்தின் கீழ்ச்சுற்றில் செந்தாமரை இதழ்களையும் சுற்றி வைக்க வேண்டும். கலசத்திற்கும் தேங்காய்க்கும் மஞ்சள், குங்குமத்திலகம் இடவேண்டும். அவற்றை மலர்ச்சரங்களால் சூடி அலங்கரித்து வைக்க வேண்டும்.
மஞ்சள் தூளிலோ, பசும் சாணியிலோ பிடித்த விநாயகரை அறுகம்புல் ஆசனத்தில் அமர்த்த வேண்டும். அதற்குத் திலக மிட்டு மலரிட வேண்டும். ஐந்துமுக விளக்கை இரு கலசத்தின் நடுவே வைத்து, திலகமிட்டு மலர்ச்சரம் சுற்றி வைக்க வேண்டும்.
விளக்குகளுக்கு நெய் ஊற்றி தீபம் ஏற்றிய பின் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். பின்பு ஸ்தோத்திரங்களைச் சொல்லி கற்பூர தூப தீப ஆராதனை முடித்து விநாயகரை வணங்க வேண்டும். பவுர்ணமி உதயமாகும் போது கலசங்களுக்குக்கற்பூர தீபம் காட்ட வேண்டும்.
அடுத்து கலைமகள் அலைமகள் ஸ்தோத்திரங்களை மனம் உருக எல்லாரும் சேர்ந்து சொல்ல வேண்டும். ஸ்தோத்திரங்கள் சொல்லி முடித்ததும் கற்பூர தூப தீப நிவேதனம் காட்ட வேண்டும். எல்லாரும் சாஷ்டாங்கமாக வீழ்ந்துவணங்க வேண்டும்.
சிறுவர் சிறுமியர்க்குப் பேனா, பென்சில, சிலேட், நோட்டுப்புத்தகம் ஆகியவற்றைத் தானமாகவும், மற்ற பிரசாதப் பொருள்களையும் தர வேண்டும், அதற்குப் பிறகே பிரசாதங்களைப் பயன்படுத்த வேண்டும்.
முதன்முதலாக பூஜையை எந்த மாதத்திலும், எந்த நாளிலும், எந்தக்கிழமையிலும் தொடங்கலாம். ஆனால் அன்று பவுர்ணமியாக மட்டும் இருக்க வேண்டும். கலைமகளுக்குப் பூஜை செய்யும் போது அலை மகளுக்கும் சேர்த்து வழிபாடு செய்ய வேண்டும்.
மலர்களுள் வெண்தாமரை, செந்தாமரை, மல்லிகை, முல்லை, இருவாட்சி, சம்பங்கி, மருக்கொழுந்து,வெட்டிவேர், மற்றும் வாசனைத் திரவியங்கள், சந்தனம் முதலியவற்றையும் இளநீர்,மாதுளம் பழம், கொய்யா, கரும்பு, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, கற்பூரம், ஊதுவத்தி முதலியனவற்றையும் சேகரிக்கவேண்டும்.
நிவேதனப் பொருள்களாகக்கல்கண்டு, பால்பாயசம், வெண்கடலைக் சுண்டல், இனிப்புச் சுவையுள்ள பலகாரங்கள் ஆகியவற்றைக் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
பூஜைப் பொருள்களில் ஐந்துமுக விளக்கும் கலசத்திற்காக இரு தட்டுகள், இரு செம்புகள், இரு தேங்காய்கள்,நெல் பச்சஅரிசி ஆகியவையும் புதிதாக வாங்கப்பட்ட பேனா பென்சில், சில நோட்டுப்புத்தகங்கள், சிலேட்டுகள் ஆகியவையும் இடம் பெற வேண்டும்.
வீட்டின் அறையில் நடுப்பகுதியில் கிழக்கு முகமாக பீடம் அமைக்க வேண்டும். அதில் சதுரமாக நெல்லை பரப்ப வேண்டும். அதன் மீது இரு தட்டுகளில் பச்ச அரிசியை பரப்ப வேண்டும். அதில் கலசங்களை வைக்க வேண்டும்.
முதல் கலசத்தின் கீழ்ச்சுற்றில் வெண்தாமரை இதழ்களையும், இரண்டாவது கலசத்தின் கீழ்ச்சுற்றில் செந்தாமரை இதழ்களையும் சுற்றி வைக்க வேண்டும். கலசத்திற்கும் தேங்காய்க்கும் மஞ்சள், குங்குமத்திலகம் இடவேண்டும். அவற்றை மலர்ச்சரங்களால் சூடி அலங்கரித்து வைக்க வேண்டும்.
மஞ்சள் தூளிலோ, பசும் சாணியிலோ பிடித்த விநாயகரை அறுகம்புல் ஆசனத்தில் அமர்த்த வேண்டும். அதற்குத் திலக மிட்டு மலரிட வேண்டும். ஐந்துமுக விளக்கை இரு கலசத்தின் நடுவே வைத்து, திலகமிட்டு மலர்ச்சரம் சுற்றி வைக்க வேண்டும்.
விளக்குகளுக்கு நெய் ஊற்றி தீபம் ஏற்றிய பின் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். பின்பு ஸ்தோத்திரங்களைச் சொல்லி கற்பூர தூப தீப ஆராதனை முடித்து விநாயகரை வணங்க வேண்டும். பவுர்ணமி உதயமாகும் போது கலசங்களுக்குக்கற்பூர தீபம் காட்ட வேண்டும்.
அடுத்து கலைமகள் அலைமகள் ஸ்தோத்திரங்களை மனம் உருக எல்லாரும் சேர்ந்து சொல்ல வேண்டும். ஸ்தோத்திரங்கள் சொல்லி முடித்ததும் கற்பூர தூப தீப நிவேதனம் காட்ட வேண்டும். எல்லாரும் சாஷ்டாங்கமாக வீழ்ந்துவணங்க வேண்டும்.
சிறுவர் சிறுமியர்க்குப் பேனா, பென்சில, சிலேட், நோட்டுப்புத்தகம் ஆகியவற்றைத் தானமாகவும், மற்ற பிரசாதப் பொருள்களையும் தர வேண்டும், அதற்குப் பிறகே பிரசாதங்களைப் பயன்படுத்த வேண்டும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» குபேர பூஜை செய்வது எப்படி?
» ஆயுத பூஜை எப்போது செய்வது?
» ஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி?
» சரஸ்வதி பூஜை செய்யும் முறை
» கும்பாபிஷேகம் செய்வது ஏன்?
» ஆயுத பூஜை எப்போது செய்வது?
» ஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி?
» சரஸ்வதி பூஜை செய்யும் முறை
» கும்பாபிஷேகம் செய்வது ஏன்?
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya