Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


இன்று மகாளய அமாவாசை: காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Go down

இன்று மகாளய அமாவாசை: காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் Empty இன்று மகாளய அமாவாசை: காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Post by oviya Sat Dec 06, 2014 10:41 am

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். தேரோட்டம் போன்ற திருவிழா நாட்களில் இந்த கோவிலுக்கு லட்சக் கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

சமயபுரம் கோவிலில் அமாவாசை, பவுர்ணமி நாட்களின் இரவில் கோவில் பிரகாரத்தில் தங்கி காலையில் குளித்துவிட்டு அம்மனை வணங்கி வந்தால் அந்த பிரார்த்தனை நிறைவேறுவதாக ஐதீகம். அதனால் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக சமயபுரம் வந்து இரவு தங்கி காலையில் அம்மனை வணங்கி செல்கின்றனர்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசையாக அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மகாளய அமாவாசை இன்று காலை 10.47 மணிக்கு தொடங்கி நாளை மதியம் 12.25 மணி வரை நீடிக்கிறது. இதையொட்டி இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு சமயபுரம் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம், சந்தனாதி தைலம், திரவியப்பொடி, பச்சரிசி மாவு பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், பன் னீர், விபூதி, சந்தனம், பழவகைகள் போன்ற 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்பிறகு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

இரவு 7 மணிக்கு மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது. முன்னதாக சமயபுரம் கோவிலை சுற்றியுள்ள கங்கா தீர்த்தம், சர்வேஸ்வரன் தீர்த்தம், அம்மன் தீர்த்தம், கோவில் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் இன்று காலை பக்தர்கள் புனித நீராடி அம்மனை வழிபட்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தென்னரசு மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மகாளய அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக அவர்களை வழிபட்டு தர்ப்பணம் செய்தனர். தாய், தந்தை, பாட்டனார் என்று அவர்களை நினைத்து எள், தர்ப்பண நீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றையும் வைத்து வழிபட்டனர். சமீபத்தில் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு செல்வதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

இதற்காக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களும் அம்மா மண்டபத்தில் குவிந்திருந்தனர். மேலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
» மகாளய அமாவாசை: பவானி கூடுதுறையில் மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்
» ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
» மகாளய அமாவாசை : பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
» நாளை மகாளய அமாவாசை ஸ்ரீரங்கம்– திருவானைக்காவல் கோவில்களில் சிறப்பு வழிபாடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum