Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


பாடாலூரில் மாரியம்மன் கோயில்கள் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்

Go down

பாடாலூரில் மாரியம்மன் கோயில்கள் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம் Empty பாடாலூரில் மாரியம்மன் கோயில்கள் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்

Post by oviya Sat Dec 06, 2014 11:14 am

ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் மாரியம்மன், செல்லியம்மன், விநாயகர் உள்ளிட்ட கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீகாமாட்சி அம்மன் உடனுறை கைலாசநாதர், ஸ்ரீமுருகன் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீற்றிருந்த பெருமாள், பரிவார தேவதைகள் ஸ்ரீ பூர்ண, புஷ்பகலாம்பிகா சமேத அய்யனார், மாரியம்மன், செல்லியம்மன், எல்லையம்மன் செங்கமலையார், பெரியண்ணசுவாமி, கருப்புசுவாமி ஆகிய திருக்கோயில்கள் கிராம பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு அஷ்டபந்தன மகா குமபாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்.5–ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. சனிக்கிழமை காலை 7 மணிக்கு விநாயகர் அனுக்ஞை, லஷ்மி பூஜை, துர்க்கா ஹோமம், சுமங்கலி பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, வேதபாராயணம், தமிழ்மறை தீபாராதனை நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு விநாயகர் பூஜை, குரு நமஸ்காரம், புன்யாவாஜனம், சிவாச்சாரியார் ரட்சாபந்தனம், அங்குரார்ப்பணம், மிருத்சங்கிரஹனம். கலாகர்ஷனம் யாகசாலை கட பிரவேசித்தல், திக் பூஜை, கலசபூஜை, மூல மந்திரஜெயம், அஷ்ட திரவியாகுதி, பூர்ணாகுதி, வேதபாராயணம், தமிழ்மறை தீபாராதனை ஆகிய பூஜைகள் நடைபெற்றது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கணபதி பூஜை, குரு பூஜை, சூர்யபூஜை, திக் பூஜை, கும்ப பூஜை, யாகசாலை பூஜை, திரவியாகுதி, தீபாராதனையும், மாலை 5 மணிக்கு விநாயகர் பூஜை, குரு பூஜை, யாகசாலை பூஜை, பூர்ணாகுதி தீபாராதனையும் நடைபெற்றது.

நேற்று திங்கள்கிழமை காலை 4 மணிக்கு கணபதி பூஜையுடன் 4–ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது, அதனையடுத்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு சிவாலய மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், ஸ்ரீமுருகன் ஆலயம் மகா கும்பாபிஷேகம், விநாயகர், மாரியம்மன், மகா மண்டபம், எல்லையம்மன் மகா கும்பாபிஷேகம், அய்யனார், செல்லியம்மன், செங்க மலையார், கருப்புசுவாமி மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.

கும்பாபிஷேகத்தை பாலசுப்ரமணியம் சண்முகம், விக்னேஷ் சிவாச்சாரியார்கள், லட்சுமி நாராயணன், சீனிவாசன் பட்டாச்சாரியார்கள் நடததி வைத்தனர். கும்பாபிஷேகத்தில் பாடாலூர், இரூர், ஆலத்தூர்கேட், நாட்டார்மங்கலம், சீதேவிமங்கலம், செட்டிகுளம், பெருவளப்பூர், திருவிளக்குறிச்சி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா: பக்தர்கள் சாமி தரிசனம்
» அத்தனூரம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
» பழனி திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» திருப்போரூர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து முதல் கிருத்திகை: 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
» பாலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum