வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி: திரளான பக்தர்கள் பங்கேற்பு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி: திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாகை மாவட்டம் வேளாங் கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நேற்று இரவு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பெரியதேரில் புனித ஆரோக்கிய மாதா எழுந்தருள பக்தர்களின் கூட்டத்திற்கு மத்தியில் மெல்லமெல்ல தேர் ஊர்ந்து சென்றது.
பெரியத்தேரின் முன்னால் 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல் சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரிய மாதா, ஆரோக்கிய மாதா ஆகி யோர் எழுந்தருளி பவனி சென்றனர்.பவனி கடைத்தெரு, ஆரியநாட்டுத்தெரு, கடற்கரை சாலை வழியாக பேராலய முகப்பை வந்தடைந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆரோக்கிய மாதாவை வழிபட்டனர். சிலர் மாதாவை புகழ்ந்து பாடல்களை பாடினர்.
முன்னதாக மாலை 5.15 மணி அளவில் பேராலய கலையரங்கில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்பு ரோஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் கலெக்டர் முனுசாமி பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார், பங்கு தந்தை சூசைமாணிக்கம் அடிகளார், உதவி பங்கு தந்தைகள் ஆரோக்கிய சுந்தரம் அடிகளார், தாரிஸ்ராஜ் அடிகளார், ஜோதி நல்லப்பன் அடிகளார் மற்றும் அருட்சகோதரிகள், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (8ம்தேதி) ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு காலை 6 மணி அளவில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடந்தது. மாலை 6 மணி அளவில் அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. பின்னர் மாலை 6.15 மணி அளவில் பேராலய கீழ்கோவிலில் மாதா மன்றாட்டு கூட்டம், நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டு தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படும். விழாவை முன்னிட்டு பேராலய கோபுரங்கள் மின்னொளி அலங்காரத்தில் வண்ணமயமாக ஒளிர்ந்தது.
நாகை எஸ்.பி. பொன்னி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பெரியத்தேரின் முன்னால் 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல் சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரிய மாதா, ஆரோக்கிய மாதா ஆகி யோர் எழுந்தருளி பவனி சென்றனர்.பவனி கடைத்தெரு, ஆரியநாட்டுத்தெரு, கடற்கரை சாலை வழியாக பேராலய முகப்பை வந்தடைந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆரோக்கிய மாதாவை வழிபட்டனர். சிலர் மாதாவை புகழ்ந்து பாடல்களை பாடினர்.
முன்னதாக மாலை 5.15 மணி அளவில் பேராலய கலையரங்கில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்பு ரோஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் கலெக்டர் முனுசாமி பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார், பங்கு தந்தை சூசைமாணிக்கம் அடிகளார், உதவி பங்கு தந்தைகள் ஆரோக்கிய சுந்தரம் அடிகளார், தாரிஸ்ராஜ் அடிகளார், ஜோதி நல்லப்பன் அடிகளார் மற்றும் அருட்சகோதரிகள், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (8ம்தேதி) ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு காலை 6 மணி அளவில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடந்தது. மாலை 6 மணி அளவில் அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. பின்னர் மாலை 6.15 மணி அளவில் பேராலய கீழ்கோவிலில் மாதா மன்றாட்டு கூட்டம், நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டு தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படும். விழாவை முன்னிட்டு பேராலய கோபுரங்கள் மின்னொளி அலங்காரத்தில் வண்ணமயமாக ஒளிர்ந்தது.
நாகை எஸ்.பி. பொன்னி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா : இன்று இரவு பெரிய தேர் பவனி
» மசினியம்மன் கோவில் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
» ஈரோடு சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
» வல்லத்தில் அய்யா தேர் பவனி
» அத்தனூரம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
» மசினியம்மன் கோவில் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
» ஈரோடு சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
» வல்லத்தில் அய்யா தேர் பவனி
» அத்தனூரம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya