Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


பிள்ளைகள் இல்லாத எனக்கு சொத்து எதற்கு? இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்துவேன்!: ரணில்

Go down

பிள்ளைகள் இல்லாத எனக்கு சொத்து எதற்கு? இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்துவேன்!: ரணில் Empty பிள்ளைகள் இல்லாத எனக்கு சொத்து எதற்கு? இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்துவேன்!: ரணில்

Post by oviya Sat Dec 06, 2014 11:41 am

எனக்கு பிள்ளைகள் இல்லை. எனக்கென்று குடும்பம் இல்லை. நான் உழைத்து கொடுப்பதற்கும் எவரும் இல்லை. எனது நோக்கம் நாட்டின் செல்வமான இளைஞர்களுக்கு நல்லதொரு எதிர்க்காலத்தை ஏற்படுத்துவதாகும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 5 வருடத்தில் 16 இலட்சம் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பேன் என ரணில் விக்கிரம சிங்க சூளுரைத்தார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் வரை இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்த முடியாது. எனவே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி ஆக்கி 2 வருட தேசிய அரசின் ஊடக நாட்டின் முக்கிய பிரச்சினையை தீர்ப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

மேல் மாகாண இளைஞர் அணியின் மாநாடு கொழும்பு முத்தையா மைதானத்தில் பெற்ற போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அங்கு மேலும் கூறுகையில்,

தற்போது மூன்றாவது முறையாக ஜனாதிபதி ஆக்குவதற்காக மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுகிறார். நாட்டில் யுத்தம் இடம் பெற்றவேளை அனைவரும் யுத்தம் நிறைவு பெறும் வரையில் அமைதி காக்கவும் யுத்தம் நிறைவடைந்த பிற்பாடு இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறைக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார்.

இதனை கருத்திற் கொண்டு பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்து கொண்டனர்.

யுத்தம் நிறைவடைந்த பிற்பாடு வீதியெங்கிலும் பாற்சோறு பங்கிட்டு குதுகலிப்பில் ஈடுப்பட்டனர். எனினும் யுத்தம் நிறைவடைந்தவுடன் ஜனாதிபதி நாட்டிற்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை.
இதனால் இளைஞர்களின் கனவு நனவாகவில்லை. உண்மையாக சுதந்திரம் கிடைக்கவில்லை. கடனுக்கு மேல் கடன் பெற்று ஒவ்வொரு குடும்பமும் சீர்குலைந்துள்ளது.

எனவே வாக்குறுதிகளை நிறைவேற்றிக் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடித்து எமது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி ஆக்க வேண்டும்.

நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவே பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நியமித்தோம். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆனவுடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து கட்டுவோம். அதன்பிற்பாடு அனைத்து கட்சியினரும் ஆதரவுடன் இரண்டு வருடம் தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி நாட்டின் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்போம். அதன் பிற்பாடு பாராளுமன்ற தேர்தலினூடாக ஐ.தே.கட்சி ஆட்சியை ஏற்படுத்துவோம்.

ஊழல், மோசடி இல்லாமல் செய்யாவிடின் நாட்டை முன்னேற்ற முடியாது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன போன்றே நாட்டில் தொழில் வாய்ப்பை பெற்று கொடுப்பதே எனது நோக்கம்.

தற்போது இளைஞர்களுக்கு தொழில் இருந்தும் போதிய வருமானம் இல்லை. நாட்டில் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. இலங்கை இளைஞர்கள் தனது நாட்டில் உழைக்க முடியாமல் வெளிநாட்டு செல்ல வேண்டிய நிலைமையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

எனவே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருக்கும் வரை இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்த இயலாது. எனது நாட்டின் இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுப்பதே எமது நோக்கம். எனக்கு குழந்தைகள் இல்லை. எனக்கென்று குடும்பங்கள் இல்லை. நான் உழைத்து கொடுப்பதற்கு கூட எவரும் எனக்கு இல்லை. எனவே எனக்கு இந்நாட்டின் செல்வமான இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்துவதே எனது நோக்கம். இதற்காக நான் முன்னின்று செயற்படுவேன். இதற்கமைய 5 வருடத்தில் 16 இலட்சம் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பேன் என்றார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» வீணை இல்லாத சரஸ்வதி
» நூற்றாண்டு காணும் கிளிநொச்சியின் சொத்து வேரவில் இந்து மகா வித்தியாலயம்: பா.உறுப்பினர் சிறீதரன்
» நல்ல மனிதர்களையே மக்கள் விரும்புகின்றனர்!
» திஸ்ஸவின் கட்சித்தாவலை முன்னரே அறிந்திருந்த ரணில் - திஸ்ஸ அத்தநாயக்க வெளியேறியமை வருத்தமளிக்கின்றது
» ரணில் போட்டியிடவில்லையே என்ற கவலையில் ஜனாதிபதி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum