Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


அவுஸ்திரேலியாவின் புதிய அகதிகள் சட்டத்திருத்தம்: சட்டவிரோத அகதிகளுக்கு நன்மைக்கிடைக்காது- பிரதமர்

Go down

அவுஸ்திரேலியாவின் புதிய அகதிகள் சட்டத்திருத்தம்: சட்டவிரோத அகதிகளுக்கு நன்மைக்கிடைக்காது- பிரதமர் Empty அவுஸ்திரேலியாவின் புதிய அகதிகள் சட்டத்திருத்தம்: சட்டவிரோத அகதிகளுக்கு நன்மைக்கிடைக்காது- பிரதமர்

Post by oviya Sat Dec 06, 2014 11:43 am

அவுஸ்திரேலிய செனட் சபையினால் நேற்று குறுகிய வாக்கு வித்தியாசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் தொடர்பான திருத்தம் சட்டவிரோத அகதிகளுக்கு உதவாது என்று அந்த நாட்டின் பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்திருத்தத்தின்படி அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோருவோருக்கு தற்காலிக அடிப்படையில் 3 தொடக்கம் 5 வருடங்களுக்கு தங்கியிருக்க வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இதில் அவுஸ்திரேலியாவில் தற்போதுள்ள இலங்கையர்கள் அனைத்து சட்டவிரோத அகதிகளும் உள்வாங்கப்படமாட்டார்கள் என்று டோனி அப்போட் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எவருக்கும் நிரந்தரமாக குடியுரிமையும் கிடைக்கமாட்டாது அகதிகளாக இனங்காணக்கப்படுகின்றவர்கள் 3 தொடக்கம் 5 வருடங்கள் தங்கியிருந்து தொழில்புரிய முடியும்.

அவுஸ்திரேலியாவில் தற்போது 30 ஆயிரம் அகதிகள் பல்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரே உண்மையான அகதிகள் என்ற வரையறைக்குள் உள்வாங்கப்படவுள்ளனர் ஏனையவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். தற்காலிக அனுமதியில் தங்கியிருப்போரும் தமது காலம் முடிவடைந்ததும் நாடுகடத்தப்படுவார்கள்.

இதன்கீழ் நவுறு மற்றும் பப்புவா நியுகினியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்களும் விடுவிக்கப்படவுள்ளனர். இதேவேளை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தத்தை முன்கொண்டு புதிதாக எவரும் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வரமுயன்றால் அவர்கள் கடல்மார்க்கமாகவே நாடுகடத்தப்படுவர் என்றும் டோனி அப்போட் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த திருத்தத்தை மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்துள்ளன. தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்காகவே இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் குறிப்பிட்டுள்ளமையை அந்த அமைப்புக்கள் விமர்சித்துள்ளன.

மொரிசனின் கருத்தை பார்க்கும் போது அகதிகளை பார்க்காது சிறுவர்களை மாத்திரம் பயணப்பொருளாக கருதி மேற்கொள்ளப்பட்ட திருத்தம் என்றும் மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்
» மலையகத்தில் புதிய வீடமைப்பு திட்டம் ஆரம்பம்
» மதுரை மீனாட்சி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
» புதிய அரசு தமிழ் மக்களுக்கு விடிவை பெற்றுக்கொடுக்கும்! மைத்திரியால் தீர்வு எட்டப்படும்!- சோபித தேரர் உறுதி
» மதுரை மீனாட்சியம்மன் கோயில் புதிய தங்க கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum