Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


செங்கோலைத் தூக்கி எறிந்தால் செங்கோல் ஆட்சி நடக்குமா?

Go down

செங்கோலைத் தூக்கி எறிந்தால் செங்கோல் ஆட்சி நடக்குமா? Empty செங்கோலைத் தூக்கி எறிந்தால் செங்கோல் ஆட்சி நடக்குமா?

Post by oviya Sat Dec 06, 2014 11:49 am

வடக்கு மாகாண சபையின் அமர்வுகளில் நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும் போது வேதனைப்படாமல் இருக்க முடியாது. அந்தளவிற்கு வடக்கு மாகாண சபையின் போக்குகள் அமைந்துள்ளன.
நேற்று முன்தினம் வடக்கு மாகாண சபையின் அமர்வு நடைபெற்ற வேளை சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்திருந்தார்.

வன்னியில் நடந்தது இன அழிப்பு என்பதே அவர் கொண்டு வந்த பிரேரணை.

எனினும் அவரின் பிரேரணைக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அனுமதி கொடுக்க மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த சிவாஜிலிங்கம் செங்கோலைத் தூக்கி எறிந்தார்.

சிவாஜிலிங்கம் எறிந்த செங்கோல் வெடித்து நெருப்பெனும் பிழம்பைக் கக்கி வடக்கு மாகாண சபையில் இருப்போரை சங்காரம் செய்யாமல், இந்தச் சபையில் நானிருப்பதை விட என்னை உடைத்துச் கொள்வதே உகந்தது என்று நினைத்த செங்கோல் தன்னைச் சேதப்படுத்திக் கொண்டது.

வடக்கு மாகாண அரசு அமைந்த ஒரு வருட காலத்தில் அது செய்த சாதனை என்றால் ஏகப்பட்ட பிரேரணைகளை நிறைவேற்றியதுதான்.

நிலைமை இவ்வாறாக இருக்க, சிவாஜிலிங்கம் கொண்டு வந்த பிரேரணையை பத்தோடு பதினொன்றாக நிறைவேற்றுவதில் அவைத்தலைவருக்கு இருந்த இடர்பாடு என்ன? என்பது தெரியவில்லை.

அதேநேரம் வன்னியில் நடந்தது இனஅழிப்பே என்ற பிரேரணை வடக்கு மாகாண சபையில் நிறைவேறினாலும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பெரிதாக இருக்கமாட்டாது.

எனினும் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அதுவொரு வரலாற்று ஆவணப்படுத்தலாக அமையும் என்பதை மட்டுமே இப்போதைக்குக் கூறிக்கொள்ள முடியும்.

இருந்தும் அத்தகையதொரு ஆவணப்படுத்தலை அவைத்தலைவர் விரும்பவில்லையா? அல்லது அதற்குள் ஏதாவது அழுத்தங்கள் இருந்துள்ளனவா? என்பது புரியாத புதிராகவே உள்ளது.

எதுவாயினும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் செங்கோலைத் தூக்கி எறிந்தமை எந்த வகையிலும் நியாயப்படுத்தலுக்குரியதல்ல. செங்கோல் என்பது நல்லாட்சிக்கான அடையாளச் சின்னம்.

நல்லாட்சி இல்லையாயினும் அந்த அடையாளம் ஆட்சிப்பீடத்தில் இருக்க வேண்டிய பண்பாட்டு அம்சம் என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.

ஒரு சபையில் செங்கோல் என்பது மரியாதைக்குரிய சின்னம் என்ற வகையில் அதனைத் தூக்கி எறிவது எங்களை நாங்களே பிசக்கிக் கொள்வதாகும்.

அதேநேரம் இத்தகைய சம்பவங்கள் வடக்கு மாகாண சபையில் நடக்கும் போது மக்களிடையே ஏற்படக்கூடிய சபை குறித்த மனப்பதிவு எதிர்க் கணியமாகவே இருக்கும்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்ற போது தமிழர்களின் அரசு என்று நாமெல்லோரும் புளகாங்கிதமடைந்தோம்.

இத்துணை இழப்புகளின் மத்தியிலும் தமிழ் மக்கள் தங்களின் இனப்பற்றை பறைசாற்றி விட்டனர் என்று உலகம் போற்றியது.

கையிழந்தவர், காலிழந்தவர், இருந்தும், கிடந்தும், தலையால் நடந்தும் சென்று தங்கள் வாக்குகளைத் தந்து தமிழினத்தின் மானத்தைக் காத்தனர்.

ஆனால் தமிழ் மக்களின் வாக்குகளால் வென்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது வேதனை தாளமுடியவில்லை.

ஆம்! வடக்கு மாகாண அரசை முன்னெடுத்துச் செல்லும் பக்குவம் எங்களுக்குப் போதாமல் உள்ளது என்பதை பல தடவைகளில் நாம் கண்டுணர முடிந்துள்ளது அவ்வளவுதான்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum