Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கியது

Go down

வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கியது Empty வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கியது

Post by oviya Sun Nov 30, 2014 1:39 pm

திருப்பூர் மாநகரின் மத்தியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவீரராகவ பெருமாள் கோலில் திருப்பணிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வந்தன.

இப்பணிகள் முடிவுற்ற நிலையில், மஹா கும்பாபிஷேகம் வருகிற திங்கள்கிழமை (டிசம்பர் 1–ந் தேதி) காலை 9.15 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக விழா, கலசம், தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலத்துடன் தொடங்கியது. இதையொட்டி, ஸ்ரீரங்கம் ஸ்ரீராமன்பட்டாச்சாரியார் தலைமையில் கொடுமுடி காவிரிக்கரையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம், முளைப்பாரி மற்றும் பிரதான கோபுரக் கலசங்களுடன் ஊர்வலம் நடைபெற்றது.

டவுன்ஹாலில் பகுதியில் இருந்து புறப்பட்டு இந்த ஊர்வலத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில், புதியதாக வடிவமைக்கப்பட்ட சக்கரத்தாழ்வார், லஷ்மிநரசிம்மர் சிலைகள் அலங்கார பூக்கள் கொண்ட வாகனத்தில் திருவீதி உலா எடுத்து வரப்பட்டன.

கேரள செண்டை மேளங்களுடன் கதகளி ஆட்டம், ஆஞ்சநேயர் மற்றும் கருடவாகனத்தில் பெருமாள் பவனிவருவது போன்ற பிரமாண்ட அலங்காரங்களும் ஊர்வலத்தில் இடம் பெற்றிருந்தன.

சலங்கை கட்டிய இளைஞர்களின் ஆட்டமும், வாணவெடிகளும் ஊர்வலத்தை மேலும் பரவசப்படுத்தின. இந்த ஊர்வலம் குமரன் சாலை, யுனிவர்சல் திரையரங்கம் சாலை, நொய்யல் பாலம் வழியாக பெருமாள் கோயிலை வந்தடைந்தது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum