Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


சபரிமலையில் இன்று மண்டல பூஜை : பக்தர்கள் குவிகின்றனர்

Go down

சபரிமலையில் இன்று மண்டல பூஜை : பக்தர்கள் குவிகின்றனர் Empty சபரிமலையில் இன்று மண்டல பூஜை : பக்தர்கள் குவிகின்றனர்

Post by oviya Sun Dec 07, 2014 9:46 am

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜை நடக்கிறது. இதையொட்டி வரலாறு காணாத வகையில் பக்தர்கள் குவிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாள் நடைபெறும் மண்டல கால பூஜை கடந்த மாதம் 16ம் தேதி துவங்கியது. இந்த மண்ட காலம் இன்றுடன் முடிகிறது. இன்று மதியம் 12.30 மணியளவில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடக்கிறது. மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கி ஊர்வலம் கடந்த 22ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது.

நேற்று மாலை 3 மணியளவில் ஊர்வலம் பம்பையை அடைந்தது. அங்கு தேவசம் போர்டு பிரதிநிதிகள் வரவேற்பு அளித்தனர். பம்பை கணபதி கோயிலில் பக்தர்களின் தரிசனத்துக்காக தங்க அங்கி வைக்கப்பட்டது. பின்னர், சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சரங்குத்தியில் தங்க அங்கிக்கு தேவசம் போர்டு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், மாலை 6.15 மணியளவில் தங்க அங்கி சன்னிதானத்தை அடைந்தது. சபரிமலை தந்திரி கண்டரர் ராஜுவரர், மேல்சாந்தி தாமோதரன் நம்பூதிரி ஆகியோர் தங்க அங்கியை பெற்று 18ம் படி வழியாக எடுத்துச் சென்று ஐயப்பனுக்கு அணிவித்தனர். பின்னர், சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.

இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தொடங்கின. 3.20 மணிக்கு நெய்யபிஷேகம் தொடங்கி 10 மணியுடன் நிறுத்தப்படுகிறது. பின்னர், மண்டல பூஜைக்கான சடங்குகள் தொடங்கும். மதியம் 12.30 மணியளவில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம் முடிந்ததும் இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது. இதையடுத்து, இவ்வருட மண்டல காலம் நிறைவடையும்.

மீண்டும் மகர விளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. நாளை முதல் 29ம் தேதி வரை 3 நாள் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். இந்த நாட்களில் பம்பையிலிருந்து சன்னிதானம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 30ம் தேதி மதியத்துக்கு பிறகுதான் பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum