பழநியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
பழநியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பழநி: பழநியில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 27ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநியில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இத்திருவிழாவில் மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், தேனி சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்கின்றனர். மேலும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்பட வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்துக்கு வருகின்றனர்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இத்திருவிழா இன்று காலை 10 மணிக்கு பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வள்ளி தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசாமி கொடிகட்டி மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விநாயகர், வீரபாகு ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் கொடிமரம் முன்பாக பூஜைகள் நடந்தன. கொடிப்பட்டம் பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கொடிமரத்தில் ஏற்பட்டது.
முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் 26ம் தேதி நடக்கிறது. இரவு 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் வள்ளி-தெய்வானையம்மன் முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடக்க உள்ளது. 27ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் வள்ளி-தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியாள் வாகனத்தில் சண்முகநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
காலை 11.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேரோட்ட நிகழ்ச்சியும், மாலை 4.20 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. 28ம் தேதி இரவு 8 மணிக்கு வையாபுரி கண்மாயில் வாணவேடிக்கை நிகழ்ச்சியும், 30ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று இரவு 11.30 மணிக்கு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவடைகிறது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இத்திருவிழா இன்று காலை 10 மணிக்கு பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வள்ளி தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசாமி கொடிகட்டி மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விநாயகர், வீரபாகு ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் கொடிமரம் முன்பாக பூஜைகள் நடந்தன. கொடிப்பட்டம் பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கொடிமரத்தில் ஏற்பட்டது.
முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் 26ம் தேதி நடக்கிறது. இரவு 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் வள்ளி-தெய்வானையம்மன் முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடக்க உள்ளது. 27ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் வள்ளி-தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியாள் வாகனத்தில் சண்முகநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
காலை 11.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேரோட்ட நிகழ்ச்சியும், மாலை 4.20 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. 28ம் தேதி இரவு 8 மணிக்கு வையாபுரி கண்மாயில் வாணவேடிக்கை நிகழ்ச்சியும், 30ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று இரவு 11.30 மணிக்கு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவடைகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மகாலிங்கசுவாமி கோயிலில் தைப்பூச பெருவிழா துவக்கம்
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» தைப்பூச திருவிழா முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்
» வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
» வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கத்தில் துவக்கம்
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» தைப்பூச திருவிழா முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்
» வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
» வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கத்தில் துவக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya