மாசி மகம் : ஜெகத்தினை ஆளவைக்கும் மகத்தின் மகத்துவம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மாசி மகம் : ஜெகத்தினை ஆளவைக்கும் மகத்தின் மகத்துவம்
எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நட்சத்திரத்துக்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும், மோட்சத்தையும் அருளக் கூடியவர். அதுமட்டுமின்றி கோடீஸ்வர யோகத்தையும், மருத்துவ ஞானத்தையும் அள்ளித் தரும் வல்லமை உள்ளவர். மகத்துவம் மிக்க மாசி மாதத்தில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் சந்திரன் இருக்கும்போது, சிம்ம ராசி நாதன் சூரியன் கும்ப ராசியில் இருந்து ஏழாவது பார்வையாக சம சப்தமமாக இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் காலம் பவுர்ணமியும் மகமும் இணையும் மாசி மகமாக திகழ்கிறது.
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து, துன்பக் கடலில் இருக்கும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலை வேண்டும் நாளே மாசி மகத்தின் சிறப்பாகும். இதை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வதுண்டு. அதனால்தான் மோட்சத்தை அருளக்கூடிய கேது பகவான் நட்சத்திரமான மகத்தில் இந்த நாள் அமைகிறது. ஒரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகமே அழியும் நிலை ஏற்பட்டது. உயிர்களை காக்குமாறு சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். பல புண்ணிய ஸ்தலங்களில் இருந்து மண், அமுதம், ஜீவ ராசிகளின் ஜீவ வித்துக்கள் ஆகியவற்றை ஒரு கும்பத்தில் பாதுகாப்பாக சேகரித்தார் சிவபெருமான். அதற்கு பாதுகாப்பாக நான்கு பக்கமும் நான்கு வேதங்களை வைத்து, வில்வத்தால் அர்ச்சித்து மேரு மலையில் வைக்கும்படி சொன்னார்.
பிரளயம் வந்து அனைத்து உயிர்களும் அடித்து செல்லப்பட்டன. அமுதம், ஜீவ வித்துக்கள் வைக்கப்பட்ட கும்பம், பிரளயத்தில் அடித்து வரப்பட்டு ஒரு இடத்தில் தடைபட்டு நின்றது. பிரளயம் வடிந்ததும் வேடன் உருவெடுத்து வந்த சிவபெருமான், அம்பெய்து குடத்தை உடைத்து மீண்டும் உயிர்கள் தழைக்க செய்தார்.
பிரளயத்தில் அடித்து வரப்பட்ட கும்பம் நின்ற இடமே கும்பகோணம் எனப்படுகிறது. உயிர்களை காத்த சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாசி மக விழாவும், 12 ஆண்டுக்கு ஒருமுறை மகாமக விழாவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இந்த நாள் சிவன், விஷ்ணு, பார்வதி, முருகன் ஆகியோருக்கு உகந்த நாளாகும். தோஷம், தடைகள் நீக்கும் புண்ணிய நாளாகவும் கருதப்படுகிறது. இந்நாளில் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்களில் நீராடலாம். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர்கடன் செய்வது நன்மை தரும்.
மகத்துவம் மிக்க மாசி
ஈசனின் திருவிளையாடல்கள் பல அரங்கேறியது இந்த மாசி மாதத்தில்தான். பார்வதி தேவியார், மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார். இந்த உலகை படைத்து காத்து ரட்சிக்கும் அம்பிகை அவதாரம் செய்ததால், மகத்து பெண் ஜெகத்தை ஆளும் என்ற ஜோதிட சொல் ஏற்பட்டது. பெருமாள் வராக அவதாரம் எடுத்து, பாதாளத்தில் இருந்து பூமியை வெளிக்கொணர்ந்த நாளும் மாசி மகம்தான். குலசேகர ஆழ்வார் மாசி புனர்பூச நட்சத்திர நாளில் அவதரித்தார். மாசி மாத பூச நட்சத்திரத்தில்தான் சிவபெருமானுக்கு சுவாமி மலையில் முருகன் உபதேசம் செய்தார்.
மாசி மாதத்தை கும்ப மாதம் என்று சிறப்பித்து கூறுவர். கும்பத்து மாதம் வெகு சம்பத்து தரும் என்பது ஜோதிட வாக்கு. கேது பகவான் ஞானத்தை தரக்கூடியவர். ஆகையால் இந்நாளில் கல்வி சம்பந்தமான பணிகள், பயிற்சிகள், பாடங்கள் படிப்பது, கல்வி பயில சேருவது, மந்திர உபதேசம் பெறுவது மிகவும் சிறப்பாகும். முன்னோர்கள், தாய், தந்தையரை நினைத்து அன்னதானம், ஆடை தானம் செய்யலாம். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபிட்சம் நிலவும். மாசி மாத சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு சூறை தேங்காய் உடைத்து வழிபட தடைகள் நீங்கும்.
ஆண் குழந்தை வேண்டுபவர்கள், அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்கள் மாசி மகத்தில் விரதம் இருந்து முருகப் பெருமானை வணங்க சற்புத்திர யோகம் கிட்டும். மாசி மாதம் இடமாற்றத்துக்கு மிகவும் உகந்தது. வாடகை வீட்டுக்கும் மாறலாம். புது வீடு கிரகப் பிரவேசம் செய்யலாம். திருச்செந்தூரில் நடக்கும் மாசி மகம் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. கடற்கரையில் முருகப் பெருமான் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மெரினா கடற்கரையில் எழுந்தருளி அருளாசி வழங்குகிறார். கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் இருவரும் ஒன்று கூடி எழுந்தருளி அருள் பாலிப்பது மிகவும் விசேஷம்.
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து, துன்பக் கடலில் இருக்கும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலை வேண்டும் நாளே மாசி மகத்தின் சிறப்பாகும். இதை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வதுண்டு. அதனால்தான் மோட்சத்தை அருளக்கூடிய கேது பகவான் நட்சத்திரமான மகத்தில் இந்த நாள் அமைகிறது. ஒரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகமே அழியும் நிலை ஏற்பட்டது. உயிர்களை காக்குமாறு சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். பல புண்ணிய ஸ்தலங்களில் இருந்து மண், அமுதம், ஜீவ ராசிகளின் ஜீவ வித்துக்கள் ஆகியவற்றை ஒரு கும்பத்தில் பாதுகாப்பாக சேகரித்தார் சிவபெருமான். அதற்கு பாதுகாப்பாக நான்கு பக்கமும் நான்கு வேதங்களை வைத்து, வில்வத்தால் அர்ச்சித்து மேரு மலையில் வைக்கும்படி சொன்னார்.
பிரளயம் வந்து அனைத்து உயிர்களும் அடித்து செல்லப்பட்டன. அமுதம், ஜீவ வித்துக்கள் வைக்கப்பட்ட கும்பம், பிரளயத்தில் அடித்து வரப்பட்டு ஒரு இடத்தில் தடைபட்டு நின்றது. பிரளயம் வடிந்ததும் வேடன் உருவெடுத்து வந்த சிவபெருமான், அம்பெய்து குடத்தை உடைத்து மீண்டும் உயிர்கள் தழைக்க செய்தார்.
பிரளயத்தில் அடித்து வரப்பட்ட கும்பம் நின்ற இடமே கும்பகோணம் எனப்படுகிறது. உயிர்களை காத்த சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாசி மக விழாவும், 12 ஆண்டுக்கு ஒருமுறை மகாமக விழாவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இந்த நாள் சிவன், விஷ்ணு, பார்வதி, முருகன் ஆகியோருக்கு உகந்த நாளாகும். தோஷம், தடைகள் நீக்கும் புண்ணிய நாளாகவும் கருதப்படுகிறது. இந்நாளில் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்களில் நீராடலாம். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர்கடன் செய்வது நன்மை தரும்.
மகத்துவம் மிக்க மாசி
ஈசனின் திருவிளையாடல்கள் பல அரங்கேறியது இந்த மாசி மாதத்தில்தான். பார்வதி தேவியார், மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார். இந்த உலகை படைத்து காத்து ரட்சிக்கும் அம்பிகை அவதாரம் செய்ததால், மகத்து பெண் ஜெகத்தை ஆளும் என்ற ஜோதிட சொல் ஏற்பட்டது. பெருமாள் வராக அவதாரம் எடுத்து, பாதாளத்தில் இருந்து பூமியை வெளிக்கொணர்ந்த நாளும் மாசி மகம்தான். குலசேகர ஆழ்வார் மாசி புனர்பூச நட்சத்திர நாளில் அவதரித்தார். மாசி மாத பூச நட்சத்திரத்தில்தான் சிவபெருமானுக்கு சுவாமி மலையில் முருகன் உபதேசம் செய்தார்.
மாசி மாதத்தை கும்ப மாதம் என்று சிறப்பித்து கூறுவர். கும்பத்து மாதம் வெகு சம்பத்து தரும் என்பது ஜோதிட வாக்கு. கேது பகவான் ஞானத்தை தரக்கூடியவர். ஆகையால் இந்நாளில் கல்வி சம்பந்தமான பணிகள், பயிற்சிகள், பாடங்கள் படிப்பது, கல்வி பயில சேருவது, மந்திர உபதேசம் பெறுவது மிகவும் சிறப்பாகும். முன்னோர்கள், தாய், தந்தையரை நினைத்து அன்னதானம், ஆடை தானம் செய்யலாம். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபிட்சம் நிலவும். மாசி மாத சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு சூறை தேங்காய் உடைத்து வழிபட தடைகள் நீங்கும்.
ஆண் குழந்தை வேண்டுபவர்கள், அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்கள் மாசி மகத்தில் விரதம் இருந்து முருகப் பெருமானை வணங்க சற்புத்திர யோகம் கிட்டும். மாசி மாதம் இடமாற்றத்துக்கு மிகவும் உகந்தது. வாடகை வீட்டுக்கும் மாறலாம். புது வீடு கிரகப் பிரவேசம் செய்யலாம். திருச்செந்தூரில் நடக்கும் மாசி மகம் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. கடற்கரையில் முருகப் பெருமான் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மெரினா கடற்கரையில் எழுந்தருளி அருளாசி வழங்குகிறார். கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் இருவரும் ஒன்று கூடி எழுந்தருளி அருள் பாலிப்பது மிகவும் விசேஷம்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» தோஷங்கள் போக்கும் மாசி மகம்
» திருவண்ணாமலையில் மாசி பவுர்ணமி : பக்தர்கள் கிரிவலம்
» திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் மாசி மக திருவிழா
» மாசி மகா சிவராத்திரி திருவிழா : ராமேஸ்வரத்தில் தேரோட்டம்
» கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் மாசி உற்சவம்
» திருவண்ணாமலையில் மாசி பவுர்ணமி : பக்தர்கள் கிரிவலம்
» திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் மாசி மக திருவிழா
» மாசி மகா சிவராத்திரி திருவிழா : ராமேஸ்வரத்தில் தேரோட்டம்
» கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் மாசி உற்சவம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya