Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ஜனாதிபதி தேர்தல்!- தூர விலகும் தமிழர்கள்!

Go down

ஜனாதிபதி தேர்தல்!- தூர விலகும் தமிழர்கள்! Empty ஜனாதிபதி தேர்தல்!- தூர விலகும் தமிழர்கள்!

Post by oviya Sun Dec 07, 2014 10:43 am

ஜனா­தி­பதித் தேர்தல் பற்­றிய ஆர்வம் தமிழர் தரப்­பிடம் கொஞ்சம் கொஞ்­ச­மாக் குறையத் தொடங்­கி­யுள்­ளதை அண்­மைய நாட்­க­ளாக அவ­தா­னிக்க முடி­கி­றது.
பொது­வா­கவே, ஜனா­தி­பதி தேர்­தல்­களில் வடக்கு, கிழக்கு தமி­ழர்கள் அவ்­வ­ள­வாக ஆர்வம் காட்­டு­வ­தில்லை, வாக்­க­ளிப்பில் பங்­கேற்­ப­தில்லை.

முன்­னைய ஜனா­தி­பதித் தேர்­தல்­களில் மிகக் ­கு­றைந்­த­ளவு வாக்­க­ளிப்பே இடம்­பெற்­றி­ருப்­பதை, கடந்த காலத் தேர்தல் முடி­வுகள் எடுத்துக் காட்­டி­யி­ருக்­கின்­றன.

பொது­வா­கவே ஜனா­தி­பதி பத­வி­யா­னது தமி­ழர்­க­ளுக்கு அந்­நி­ய­மானதொன்று என்ற கருத்து உள்­ளது.

சிங்­கள பௌத்தர் அல்­லாத ஒரு­வரால், ஜனா­தி­பதி பத­வியில் அமர முடி­யாத நிலை தான், தமிழ் மக்­களை மட்­டு­மன்றி, ஏனைய சிறு­பான்­மை­யின மக்­க­ளையும் அந்­நி­யப்­ப­டுத்தி வைத்­தி­ருப்­ப­தற்கு முக்­கி­ய­மான காரணம்.

இம்­முறை ஜனா­தி­பதித் தேர்தல் குறித்து தமிழர் தரப்­பு­க­ளிடம் ஆரம்பத்தில் கொஞ்சம் ஆர்வம் இருந்த போதிலும், பின்னர் அது படிப்­ப­டி­யாகக் குறைந்து விட்­டது.

அதற்கு, இந்த தேர்­தலும் தமக்கு அந்­நி­ய­மா­னதே என்ற கருத்து, மீளவும் வலுப்­பெற்­றுள்­ளது தான் காரணம் என்­பதில் சந்­தே­க­மில்லை.

1. தமிழர் தரப்பின் நியா­யங்­களைக் கேட்­ட­றிந்து கொள்­ளத்­தக்க வேட்­பா­ளர்கள் எவரும் களத்தில் இறங்­காமை,
2. தமிழர் தரப்­புக்கு நியா­யங்­களை வழங்க முன்­வ­ராது போனாலும், குறைந்­த­பட்சம் அவர்­களின் நியா­யங்­களை செவி­ம­டுக்கும் ஆற்றல் பெற்ற ஒருவர் கூட களத்­துக்கு வராமை,
3. பிர­தான வேட்­பா­ளர்கள் சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வாத சக்­தி­களின் கைக்குள் சிக்­கி­யி­ருப்­பது.

இந்த மூன்று விட­யங்­களும் தமிழர் தரப்பின் ஆர்­வ­மின்மைக்கு முக்­கி­ய­மான கார­ணங்­க­ளாகும்.

எதி­ர­ணியின் தரப்பில், குறைந்­த­பட்சம் தமி­ழர்­களின் வாக்­கு­களை கவரக் கூடிய ஒருவர், கள­மி­றக்­கப்­பட்­டி­ருந்தால் கூட, அவர்­களின் ஆர்வம் சற்று அதி­க­ரித்­தி­ருக்கக் கூடும்.

ஆனால், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைப் பொறுத்­த­வ­ரையில், தமி­ழர்­க­ளுக்­காக ஒரு­போதும், குரல் கொடுத்­த­வ­ரு­மில்லை. தமி­ழர்­களின் பிரச்­சி­னைகள் குறித்து நியா­ய­மான கருத்­துக்­களை முன்­வைத்­த­வ­ரு­மில்லை.

இப்­போதும் கூட அவர், சிங்­கள பௌத்த வாக்­கு­களை மட்டும் தான் குறி­வைப்­ப­வ­ராக இருக்­கிறார்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவுக்கு இணை­யாக தானும் போரில் பங்­க­ளித்தேன் என்­பதை நிரூ­பிக்­கவே அவர் இப்­போது முனை­கிறார்.

போரின் இறுதி இரண்டு வாரங்­க­ளிலும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச நாட்டில் இருக்­க­வில்லை என்றும், நான்கு முறை தானே பதில் பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்து போரை வழி நடத்­தி­ய­தா­கவும், மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருக்­கிறார்.

இப்­ப­டி­யாக, பிர­தான இரு வேட்­பா­ளர்­களும் சிங்­கள மக்­களின் வாக்­கு­களைக் கவர்­வ­தற்­காக, தமிழ் ­மக்­களின் வாக்­கு­களை இழக்­கவும் தயா­ரா­கவே இருக்­கின்­றனர்.

தமிழ்­மக்­களின் கவ­லைகள், கரி­ச­னைகள் குறித்­தெல்லாம் கவ­லைப்­ப­டாத பிர­தான வேட்­பா­ளர்கள் விட­யத்தில் தமிழ் வாக்­கா­ளர்கள் கூடுதல் அக்­கறை செலுத்­து­வார்கள் என்று எதிர்­பார்ப்­ப­தற்­கில்லை.

கடந்­த­காலம் குறித்து மறந்து விட்டு எதிர்­காலம் பற்றிச் சிந்­திப்­ப­தற்குக் கூட, தமிழ்­மக்­க­ளுக்கு நம்­பிக்கை ஏற்­ப­ட­வில்லை.

ஒரு காலத்தில் மஹிந்த ராஜபக்சவையும் அவ­ரது அர­சாங்­கத்­தையும் ஆத­ரித்த சிங்­களக் கடும்­போக்­கா­ளர்கள் இப்­போது மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பக்கம் சாயத் தொடங்­கி­யுள்­ளனர்.

முதலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்தில் இருந்து ஜாதிக ஹெல உறு­மய வெளி­யே­றி­யது.

தாம் சுதந்­தி­ர­மாகச் செயற்­படப் போவ­தா­கவும், அர­சாங்­கத்தில் இருந்து மட்­டுமே வில­கி­ய­தா­கவும், ஆளும் கூட்­ட­ணியில் இருந்து வில­க­வில்லை என்றும் கூறிய ஜாதிக ஹெல உறு­மய இப்­போது, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் கைகோர்த்­துள்­ளது.

தேசிய சங்க சபா, தேசிய பிக்­குகள் முன்­னணி போன்ற பௌத்த அமைப்­பு­களும் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பக்­கத்தில் நிற்­கின்­றன.

அது­போ­லவே, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவுக்கு பொது­பல சேனா, ராவண பலய போன்ற கடும் போக்கு பௌத்த அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் ஆத­ர­வ­ளித்­துள்­ளன.

கடந்த காலங்­களில், மஹிந்த ராஜபக்சவை தெளி­வாக ஆத­ரித்து, அவரைப் பலப்­ப­டுத்­திய சிங்­கள அமைப்­புகள் இப்­போது பிரிந்து நிற்­கின்­றன.

இரண்டு பக்­கங்­க­ளிலும் இந்த அமைப்­புகள் பிள­வு­பட்டு நிற்­பதால், சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வாத வாக்­குகள் பிரிந்து போகும் சூழல் ஒன்று இருக்­கி­றது.

ஆனால் இன்­னொரு பக்­கத்தில், தமி­ழர்கள் அல்­லது முஸ்­லிம்கள் மத்­தியில், எந்தப் பக்க வேட்­பாளர் வெற்றி பெற்­றாலும் தாம், சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வா­தி­களால் நசுக்­கப்­ப­டுவோம் என்று கருதும் நிலையை உரு­வாக்­கவும் தவ­ற­வில்லை.

இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­க­ளையும் தமது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருப்­பது தான் பௌத்த சிங்­கள அடிப்­ப­டை­வாத சக்­தி­களின் பிர­தான திட்­ட­மாக இருக்­கலாம்.

தம்மை மீறிய ஒரு சக்தி ஆட்­சிக்கு வரு­வதை பௌத்த அடிப்­ப­டை­வாத சக்­தி­களால் பொறுத்துக் கொள்ள முடி­யாது. அதற்கு, தமது ஆதிக்கம் வலு­வி­ழந்து போகும் என்ற அச்சம் ஒரு காரணம்.

ஆட்­சிக்கு வரும் தரப்பு தமி­ழர்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யி­னரின் உரி­மைகள் விட­யத்தில் நெகிழ்ந்து கொடுத்து விடக் கூடாது என்ற தூர­நோக்கு மற்­றொரு காரணம்.

இதனால் தான், தெளி­வான இல­க்­குடன் இரு­பக்­கத்­திலும் பௌத்த அடிப்­ப­டை­வாத சக்­திகள் பிரிந்து நிற்­ப­தாகத் தெரி­கி­றது.

இத்­த­கை­ய­தொரு சூழலில், தமிழ் ­மக்கள், எந்த நம்­பிக்­கை­யு­டனும் இந்த தேர்­தலை எதிர்­கொள்ள முடி­யாத சூழ்­நி­லையே காணப்­ப­டு­கி­றது.

கடந்த ஜனா­தி­பதித் தேர்தல், போரை வழி ­ந­டத்­தி­யது தாமே என்று மார்­தட்டிக் கொண்ட இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டை­யான போட்­டி­யாக அமைந்­தி­ருந்­தது.

அதில், இரு வேட்­பா­ளர்­க­ளுமே போரை நடத்­தி­ய­வர்­க­ளா­கவும், அதில் இடம்­பெற்ற குற்­றங்­க­ளுக்கு பொறுப்­பேற்க வேண்­டி­ய­வர்­க­ளா­கவும் இருந்­தனர்.

அதனால் தான், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ரவைப் பெற்­றி­ருந்தும், சரத் பொன்­சே­கா­வினால் தமிழ்­ மக்­களின் ஏகோ­பித்த ஆத­ரவைப் பெற முடி­ய­வில்லை.

தமிழ் மக்கள் சரத் பொன்­சே­கா­வுக்­காக பெரு­மெ­டுப்பில் வாக்­க­ளிக்க வெளியே வர எத்­த­னிக்­க­வில்லை.

காரணம், அவர் போரில் ஆற்­றிய பங்கை, தமிழ்­ மக்­களால் மறக்க முடி­ய­வில்லை.

அத்­துடன், அந்த தேர்தல் தமிழ் ­மக்­க­ளுக்கு விமோ­ச­னத்தை தரும் என்றும் அவர்கள் நம்­ப­வில்லை.

2010 ஜனா­தி­பதி தேர்­தலில் கடந்த காலம் குறித்து அதிகம் சிந்­தித்த தமிழ் வாக்­கா­ளர்கள், இந்தத் தேர்­தலில் எதிர்­காலம் குறித்து அதிகம் சிந்­திக்கத் தலைப்­ப­டு­கின்­றனர்.

அதா­வது, எந்த வேட்­பா­ளரை ஆத­ரித்தால், தமிழ்­ மக்­களின் குறைந்­த ­பட்ச பிரச்­சி­னை­க­ளா­வது தீர்க்­கப்­படும் என்று தான் அவர்கள் எதிர்­பார்க்­கின்­றனர்.

எந்­த­வொரு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருமே தமி­ழர்­க­ளுக்கு நியா­ய­மான உரி­மை­களை வழங்­குவேன் என்று கூறப் ­போ­வதும் இல்லை, அவர் ஜனா­தி­ப­தி­யா­னதும், தமி­ழர்­களின் உரி­மை­களை அள்ளி வழங்கி விடப் போவ­து­மில்லை.

ஆனால், தமி­ழர்­களின் பிரச்­சி­னை­களை கொஞ்­ச­மேனும் நியா­ய­பூர்­வ­மாக கையாளும், அணுக முற்­படும் ஒரு­வ­ரையே ஆத­ரிக்க முடியும் என்று தமிழ் மக்கள் எதிர்­பார்ப்­பதில் தவ­றில்லை.

அவ்­வாறு பார்த்தால், ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்­ச­வோ, மைத்­தி­ரி­பால சிறி­சே­னவோ, தமிழ் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் ஏமாற்றம் அளிக்­கின்ற வேட்­பா­ளர்­க­ளா­கவே தெரி­கின்­றனர்.

இவர்கள் சுய­மாக தமி­ழர்­க­ளுக்கு உரிமைகளை வழங்க விரும்பினாலும் கூட, இவர்களின் பின்புலமாக இருக்கும் பௌத்த சிங்கள அடிப்படைவாத சக்திகள் அதற்கு இடம்கொடுக்கப் போவதில்லை.

போர்க்குற்றங்கள், தமிழர்களுக்கான உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில், இறுக்கமான கடிவாளத்தைப் போட்டுத் தான் இந்த அமைப்புகள், தமது ஆதரவைப் பிரதான வேட்பாளர்களுக்கு அளிக்க முன் வந்துள்ளன.

இத்தகைய நிலையில், இந்தக் கட்டுக்காவலை உடைத்துக் கொண்டு அவர்கள் வெளியே வரப் போவதுமில்லை,

அவ்வாறு நம்பிக்கை வைக்கும் அளவுக்கு தமிழ் வாக்காளர்கள் முட்டாள்களுமில்லை.

இத்தகைய பின்புலத்தில் தான் தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலில் இருந்து அந்நியமாகி வருகின்றனர்.

இது இயல்பாக நிகழ்கிறது என்பது போலத் தெரிந்தாலும், திட்டமிட்டே விலக தமிழர்கள் தூர விலக்கி வைக்கப்படுகின்றனர் என்பதே உண்மை.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பு
» ஜனாதிபதி தேர்தல்! 7ம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் ஏற்பு!
» ஜனாதிபதி தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 87 முறைப்பாடுகள்!
» ஜனாதிபதி தேர்தல்! மஹிந்த ராஜபக்சவுக்கான கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டது
» மஹிந்தவின் தேர்தல் விளம்பரங்களை ஒட்ட மறுக்கும் அரச ஊழியர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum