Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


பொது வேட்பாளரின் திட்டங்கள் நடைமுறைச் சாத்தியமற்றது!– விலகியது குறித்து திஸ்ஸ அறிக்கை

Go down

பொது வேட்பாளரின் திட்டங்கள் நடைமுறைச் சாத்தியமற்றது!– விலகியது குறித்து திஸ்ஸ அறிக்கை Empty பொது வேட்பாளரின் திட்டங்கள் நடைமுறைச் சாத்தியமற்றது!– விலகியது குறித்து திஸ்ஸ அறிக்கை

Post by oviya Tue Dec 09, 2014 1:13 pm

பொது வேட்பாளரினால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவையும் நடைமுறைச் சாத்தியமற்றது. இதனை வைத்து நாட்டைக் கொண்டு செல்ல முடியாது என்பதனாலேயே தான் கட்சியிலிருந்து விலகியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தான் கட்சியை விட்டும் விலகியதற்கான காரணத்தைத் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழு மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் பொது வேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவிப்பது எனத் தீர்மானித்தது. இவற்றில், 24 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதிக்குள்ள

நிறைவேற்று அதிகாரத்தை அமைச்சரவைக்கு வழங்குதல்,

அரசாங்கத்திலுள்ள 20 அமைச்சர்களை எதிர்க்கட்சிக்கு அழைத்துவருதல்,

100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்குதல் என்பன அடங்குகின்றன.

இந்த எந்தவொன்றும் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதனாலேயே தான் கட்சியிலிருந்து விலகியதாகவும் அவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



2ம் இணைப்பு

ரவி. மங்கள எனக்கு எதிராக சதி'': அத்தநாயக ரணிலுக்கு வழங்கிய இராஜினாமா கடிதத்தில் தெரிவிப்பு

மலிக், ரவி, மங்கள இந்த முக்கூட்டு எனக்கு எதிராக கட்சிக்குள் மேற்கொண்ட சதித் திட்டங்கள் மற்றும் கட்சியில் முக்கிய விடயங்களை எனக்கு தெரிவிக்காது ஓரம் கட்டப்பட்டு முடக்கப்பட்டதன் காரணமாக ஐ.தே.கட்சியில் நான் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு திஸ்ஸ அத்தநாயக அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே. கட்சியை சார்ந்தவர்களை களமிறக்காது வேறொரு கட்சியை சேர்ந்தவரை களமிறக்குவது கட்சிக்கும் ஆதரவாளர்களுக்கும் செய்த துரோகமாகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.தே. கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு நேற்று திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே திஸ்ஸ அத்தனாயக எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

எனது அரசியல் பயணத்தை தடுத்து நிறுத்த மேற்கொண்ட கூட்டணி பல்வேறு வழிகளில் சதிகளை மேற்கொண்டது. கடந்த காலங்களில் கட்சியில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய தீர்மானங்கள் கட்சி செயலாளர் என்ற ரீதியில் எனக்கு தெளிவுபடுத்தப்படவில்லை.

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையும் காண்பிக்கப்படவில்லை. கட்சியினதும் எமது ஆதரவாளர்களினதும் எதிர்காலம் கருதி ரணில் - சஜித்துக்கு இடையே இணக்கப்பாட்டை பெரு முயற்சியுடன் மேற்கொண்டு வெற்றி பெற்றேன்.

அதிலிருந்து மலிக், மங்கள, ரவி கூட்டணி கட்சிக்குள் எனக்கு எதிரான சதித் திட்டத்தை முன்னெடுத்தனர். கட்சியின் அனைத்து முக்கிய நடவடிக்கைகளிலிருந்தும் நான் ஓரம் கட்டப்பட்டேன். அத்தோடு இந்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.கட்சியின் வேட்பாளர்களை களமிறக்கியிருக்க வேண்டும்.

ரணில் அல்லது சஜித் பிரேமதாஸ போட்டியிட்டிருக்க வேண்டும்.

ஆனால் அந்த சம்பிரதாயம் மீறப்பட்டு ஏற்கனவே மனமுடைந்து நொந்து போயுள்ள ஆதரவாளர்கள் மத்தியில் மேலும் மேலும் வேதனையை அதிகரிக்கும் விதத்தில் இன்னொரு கட்சியிலிருந்து பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிடுகின்றார்.

இது ஐ.தே. கட்சி ஆதரவாளர்களுக்கு செய்த மாபெரும் துரோகமாகும். கட்சிக்காக நான் செய்த அர்ப்பணிப்புக்கள் ஏராளம். அதனை நீங்கள் அறிவீர்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் இடம்பெற்ற போது ரவி கருணாநாயக்க எமது படையினரை கேலிக் கூத்தாக வர்ணித்தார்.

நாட்டையும் மக்களையும் காட்டிக் கொடுத்த இந்த நிகழ்வு மக்கள் மத்தியில் கட்சிக்கு இருந்த ஆதரவு குறைந்தது. மலிக், ரவி, மங்கள கூட்டணிக்கு தான் இரையானேன். அதே போன்று நீங்களும் அக் கூட்டணியில் சிறைக்கைதியாக சிக்கிக் கொண்டுள்ளீர்கள்.

கடந்த காலங்களில் கட்சிக்குள் எனக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சதிகளுக்கு மத்தியிலும் என்னோடு இணைந்து செயலாற்றிய எம் மக்களுக்கும் அமைப்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் திஸ்ஸ அத்தநாயக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» பொது வேட்பாளரின் உடன்படிக்கைகளால் நாட்டுக்கு ஆபத்து: அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க
» அரசாங்கத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் பொது வேட்பாளரின் நடவடிக்கை ஆரம்பம்
» 2015ம் ஆண்டுக்கான நிதிக்கூற்று அறிக்கை வடமாகாண சபையில் ஏற்பு
» மீனவர் விவகாரம் குறித்து ராஜபக்சவுடன் தொடர்ந்து பேசுகிறார் மோடி: சுஷ்மா
» சிந்தித்து முடிவெடுப்போம்! பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum