திஸ்ஸவின் கட்சித்தாவலை முன்னரே அறிந்திருந்த ரணில் - திஸ்ஸ அத்தநாயக்க வெளியேறியமை வருத்தமளிக்கின்றது
Page 1 of 1
திஸ்ஸவின் கட்சித்தாவலை முன்னரே அறிந்திருந்த ரணில் - திஸ்ஸ அத்தநாயக்க வெளியேறியமை வருத்தமளிக்கின்றது
திஸ்ஸ அத்தநாயக்க கட்சியில் இருந்து விலகவுள்ளார் என்பதை, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒருவாரத்துக்கு முன்னதாகவே அறிந்து வைத்திருந்தார் என்று ஐ.தே.க கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவிருப்பதாகவும் அவருக்கு பெருந்தொகையான பணம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் திஸ்ஸ அத்தநாயக்க கட்சி உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்வதை நிறுத்தி விட்டு, தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதி பெற்றிருந்தார்.
எனினும் ரணில் விக்கிரமசிங்க அவரை நேரடியாக சந்தித்து இது குறித்து கேட்ட போது, தாம் கட்சி தாவுவதாக வெளியான செய்தியை திஸ்ஸ மறுத்தார்.
பின்னர் சில தினங்களுக்கு முன்னரும் திஸ்ஸ அத்தநாயக்க இந்த கருத்தை மறுத்திருந்தார்.
எனினும் அவர் கட்சி தாவவுள்ளார் என்பதை ரணில் அறிந்திருந்ததாகவும், அவரை தடுக்க முற்பட வேண்டாம் என்று கட்சியின் ஏனையோருக்கு அறிவுறுத்தியதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
திஸ்ஸ அத்தநாயக்க வெளியேறியமை வருத்தமளிக்கின்றது: ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து திஸ்ஸ அத்தநாயக்க வெளியேறியமை வருத்தமளிக்கின்றது. ஆயினும் அதை விடவும் முக்கியத்துவம் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியில் தங்கியிருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று பொது எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஆட்சி மாற்றத்தினை எதிர்பார்த்து அனைவரும் களத்தில் இறங்கியுள்ளோம். பல விட்டுக் கொடுப்புகள் எதிர்பார்ப்புகளின் மத்தியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களின் மத்தியில் காட்டிக் கொடுப்புக்களும் கால் வாரல்களும் இடம்பெறுவது எதிர்பார்க்கும் ஒன்றே.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்ட திஸ்ஸ அத்தநாயக்க இன்று கட்சியினை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவரின் இராஜினாமா கடிதத்தினை நான் பெறவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு திஸ்ஸ வெளியேறியமை எமக்கு வருத்தமளிக்கின்றது. எனினும் தற்போது நாம் தனி நபரை நினைத்து கவலைப்படுவது அர்த்தமற்றது.
எமக்கு தற்போதைய தேவை மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெற வைப்பதே. அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது. எனவே பொது எதிரணியின் வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
அதேபோல் இன்றில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் கபீர் ஹாசீம் செயற்படுவார். தொடர்ந்து வரும் தினங்களில் இவரின் செய்தியாளர் சந்திப்புக்களால் ஏனைய செயற்பாடுகளை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவிருப்பதாகவும் அவருக்கு பெருந்தொகையான பணம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் திஸ்ஸ அத்தநாயக்க கட்சி உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்வதை நிறுத்தி விட்டு, தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதி பெற்றிருந்தார்.
எனினும் ரணில் விக்கிரமசிங்க அவரை நேரடியாக சந்தித்து இது குறித்து கேட்ட போது, தாம் கட்சி தாவுவதாக வெளியான செய்தியை திஸ்ஸ மறுத்தார்.
பின்னர் சில தினங்களுக்கு முன்னரும் திஸ்ஸ அத்தநாயக்க இந்த கருத்தை மறுத்திருந்தார்.
எனினும் அவர் கட்சி தாவவுள்ளார் என்பதை ரணில் அறிந்திருந்ததாகவும், அவரை தடுக்க முற்பட வேண்டாம் என்று கட்சியின் ஏனையோருக்கு அறிவுறுத்தியதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
திஸ்ஸ அத்தநாயக்க வெளியேறியமை வருத்தமளிக்கின்றது: ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து திஸ்ஸ அத்தநாயக்க வெளியேறியமை வருத்தமளிக்கின்றது. ஆயினும் அதை விடவும் முக்கியத்துவம் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியில் தங்கியிருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று பொது எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஆட்சி மாற்றத்தினை எதிர்பார்த்து அனைவரும் களத்தில் இறங்கியுள்ளோம். பல விட்டுக் கொடுப்புகள் எதிர்பார்ப்புகளின் மத்தியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களின் மத்தியில் காட்டிக் கொடுப்புக்களும் கால் வாரல்களும் இடம்பெறுவது எதிர்பார்க்கும் ஒன்றே.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்ட திஸ்ஸ அத்தநாயக்க இன்று கட்சியினை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவரின் இராஜினாமா கடிதத்தினை நான் பெறவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு திஸ்ஸ வெளியேறியமை எமக்கு வருத்தமளிக்கின்றது. எனினும் தற்போது நாம் தனி நபரை நினைத்து கவலைப்படுவது அர்த்தமற்றது.
எமக்கு தற்போதைய தேவை மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெற வைப்பதே. அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது. எனவே பொது எதிரணியின் வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
அதேபோல் இன்றில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் கபீர் ஹாசீம் செயற்படுவார். தொடர்ந்து வரும் தினங்களில் இவரின் செய்தியாளர் சந்திப்புக்களால் ஏனைய செயற்பாடுகளை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பொது வேட்பாளரின் உடன்படிக்கைகளால் நாட்டுக்கு ஆபத்து: அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க
» ரணில் போட்டியிடவில்லையே என்ற கவலையில் ஜனாதிபதி!
» ஆளுங்கட்சிக்கு தாவிய திஸ்ஸ சுகாதார அமைச்சராக பதவிப்பிரமாணம்!
» அரசியலில் பணம் சம்பாதிக்கும் அவசியம் கிடையாது!– ரணில்
» மைத்திரி வெற்றியீட்டினால் ரணில் - சந்திரிகா ஆட்சியே நீடிக்கும்!- குணதாச அமரசேகர
» ரணில் போட்டியிடவில்லையே என்ற கவலையில் ஜனாதிபதி!
» ஆளுங்கட்சிக்கு தாவிய திஸ்ஸ சுகாதார அமைச்சராக பதவிப்பிரமாணம்!
» அரசியலில் பணம் சம்பாதிக்கும் அவசியம் கிடையாது!– ரணில்
» மைத்திரி வெற்றியீட்டினால் ரணில் - சந்திரிகா ஆட்சியே நீடிக்கும்!- குணதாச அமரசேகர
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya