கல்வி வரமருளும் முப்பெருந்தேவியர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கல்வி வரமருளும் முப்பெருந்தேவியர்
சென்னை-பழைய மாமல்லபுரம் சாலையில், தாழம்பூர் கிருஷ்ணாநகரில் உள்ளது, திரிசக்தி அம்மன் திருக்கோயில். மூன்று கருவறைகளில் ஞான சக்தி, கிரியா சக்தி, இச்சா சக்தி ஆகிய மூன்று சக்திகளும் தனித்தனியாக கொலுவிருந்து, ஒரே கோயிலில் அருள்பாலிப்பது சிறப்பு. இங்குள்ள மூன்று தேவியரையும் வழிபட கல்வி, செல்வம், மனவலிமை போன்றவற்றில் சிறந்து விளங்கலாம். இங்கு திருவருள் புரியும் ஞான சரஸ்வதி நான்கு கரங்களுடன் அமர்ந்துள்ளாள். மேலிரு கரங்களில் ஜபமாலையும் கமண்டலமும் ஏந்தியிருக்கிறாள்.
இடது கீழ் கரத்தில் ஓலைச்சுவடியும் வலது கீழ் கரத்தில் சின்முத்திரையும் காட்டி தரிசனம் தருகிறாள். இவளைப் போற்றிப் பணிய, படிப்பாற்றலும், படைப்பாற்றலும் மேலோங்குகிறது. இவளை அடுத்து கிரியா சக்தியாகத் திகழும் மூகாம்பிகை அமர்ந்துள்ளாள். பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் இவள், மேலிரு கரங்களில் சங்கு சக்கர மும், கீழ் வல இடக்கரங்களில் சின்முத்திரையும் வரத ஹஸ்தமும் கொண்டிருக்கிறாள்.
மூகாம்பிகையின் அருட்பார்வை செயல் முடிக்கும் ஆற்றல், மனவலிமையைத் தரும்; அச்சத்தை போக்கும். அடுத்து இச்சா சக்தியாகிய லட்சுமி தேவி அமர்ந்துள்ளாள். மேலிரு கரங்களில் தாமரை மொட்டுகளைத் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய-வரத ஹஸ்தம் காட்டி புன்னகை தவழப் பொலிகிறாள். பாற்கடலில் பிறந்த பாவையான இவள், கடலைப் போன்றே வற்றாத வளம் தருபவள். அன்னையின் அருட்பார்வை செல்வமெல்லாம் தரும். வறுமையை விரட்டும். கல்வியுடன் வீரமும் செல்வமும் வந்து சேரும் என்பதை நிரூபிப்பதுபோல் இந்த மூன்று அன்னையரையும் தரிசிப்போர் சகல மங்களங்களையும் பெறுவது நிச்சயம்.
இடது கீழ் கரத்தில் ஓலைச்சுவடியும் வலது கீழ் கரத்தில் சின்முத்திரையும் காட்டி தரிசனம் தருகிறாள். இவளைப் போற்றிப் பணிய, படிப்பாற்றலும், படைப்பாற்றலும் மேலோங்குகிறது. இவளை அடுத்து கிரியா சக்தியாகத் திகழும் மூகாம்பிகை அமர்ந்துள்ளாள். பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் இவள், மேலிரு கரங்களில் சங்கு சக்கர மும், கீழ் வல இடக்கரங்களில் சின்முத்திரையும் வரத ஹஸ்தமும் கொண்டிருக்கிறாள்.
மூகாம்பிகையின் அருட்பார்வை செயல் முடிக்கும் ஆற்றல், மனவலிமையைத் தரும்; அச்சத்தை போக்கும். அடுத்து இச்சா சக்தியாகிய லட்சுமி தேவி அமர்ந்துள்ளாள். மேலிரு கரங்களில் தாமரை மொட்டுகளைத் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய-வரத ஹஸ்தம் காட்டி புன்னகை தவழப் பொலிகிறாள். பாற்கடலில் பிறந்த பாவையான இவள், கடலைப் போன்றே வற்றாத வளம் தருபவள். அன்னையின் அருட்பார்வை செல்வமெல்லாம் தரும். வறுமையை விரட்டும். கல்வியுடன் வீரமும் செல்வமும் வந்து சேரும் என்பதை நிரூபிப்பதுபோல் இந்த மூன்று அன்னையரையும் தரிசிப்போர் சகல மங்களங்களையும் பெறுவது நிச்சயம்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» படிப்பு வரமருளும் பரிமுகன்
» திருமண வரமருளும் அன்னை புவனேஸ்வரி
» சந்தான வரமருளும் சாக்லெட் அர்ச்சனை!
» கல்வி தரும் சுபத்ராதேவி
» கல்வி தடை நீக்கும் ஸ்லோகம்
» திருமண வரமருளும் அன்னை புவனேஸ்வரி
» சந்தான வரமருளும் சாக்லெட் அர்ச்சனை!
» கல்வி தரும் சுபத்ராதேவி
» கல்வி தடை நீக்கும் ஸ்லோகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya