Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


திருவல்லிக்கேணியில் 300 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதைந்திருந்த எல்லம்மன்

Go down

திருவல்லிக்கேணியில் 300 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதைந்திருந்த எல்லம்மன் Empty திருவல்லிக்கேணியில் 300 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதைந்திருந்த எல்லம்மன்

Post by oviya Wed Dec 10, 2014 1:13 pm

திருவல்லிக்கேணி சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் தெருவில் அமைந்துள்ளது எல்லம்மன் திருக்கோயில். இந்த ஆலயம் இருக்கும் பகுதியில் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் அஸ்திவாரம் தோண்டும் போது அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த இடத்தில் அம்மன் ஆலயம் நிறுவப்பட்டது. கோயிலுக்குள் நுழைந்ததும் கிழக்கு நோக்கி சிம்ம வாகினியாக அருள் பாலிக்கிறார் எல்லம்மன். அம்மன் சன்னதி முன்பு கொடிக்கம்பமும், பலிபீடமும் அமைந்துள்ளன. கோயிலின் நுழைவாயில் முகப்பில் ஆஞ்சநேயரின் உருவச் சிலை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

அம்மன் சன்னதிக்கு இடதுபுறம் சக்தி விநாயகர் காட்சி தருகிறார். பின்பகுதியில் வள்ளி, தெய்வானை சமேதமாக சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர். வலதுபுறத்தில் நால்வர் சன்னதி, சோமஸ்கந்தர், எல்லம்மன் உற்சவர், நடராஜர் சன்னதிகள் உள்ளன. கோயிலின் வெளி பிரகாரத்தில் நவக்கிரக சன்னதி அமைந்துள்ளது. 12 மாதங்களும் அம்மனுக்கு பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சித்திரையில் சித்ரா பவுர்ணமி, 1008 இளநீர் அபிஷேகம், வைகாசி மாதம் வைகாசி விசாகம், பூச்சொரிதல் நடைபெறுகிறது.

ஆனி மாதம் திருமஞ்சனம், ஆடியில் ஆடி பிரமோற்சவ விழா, ஆடிப்பூரத்தையொட்டி 108 பால்குட அபிஷேகம் நடைபெறும். புரட்டாசி மாதம் நவராத்திரி விழா, ஐப்பசியில் சஷ்டி, கார்த்திகை மாதம் தீபத்திருவிழா, மார்கழியில் விசேஷ சிறப்பு பூஜை, தை மாதம் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் மாசிமக உற்சவம், பங்குனி மாதம் உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது. தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 9 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.

நித்ய பூஜை காலை சந்தி 8.30 மணிக்கும், மாலை 5க்கு சாய ரட்சை பூஜையும் நடக்கிறது. எல்லம்மனை மனமுருக வேண்டினால் திருமண தடைநீங்கும். குழந்தை வரம் கிடைக்கும். தீராத நோய் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வேண்டுதல் நிறைவேறிய பின் அம்மனுக்கு குங்கும காப்பு, சந்தன காப்பு சாற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். எப்படி போகணும்: ஐஸ் ஹவுஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 5 நிமிட நடைதூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

ஆடி பிரமோற்சவம் வரும் 13ல் தொடக்கம்

எல்லம்மன் கோயிலில் ஆடி பிரமோற்சவ திருவிழா வரும் 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. அதன் விபரம்:

12ம் தேதி இரவு 8 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவம்.

13ல் காலை 7.30க்கு கொடியேற்றம். 8 மணிக்கு கேடய உற்சவம். இரவு 7 மணிக்கு காப்பு கட்டுதல், 8க்கு கேடய உற்சவம்.

14ல், இரவு 8க்கு காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா. 15ம் தேதி ரிஷப வாகன உலா.

16ம் தேதி நாக வாகனத்தில் திருவீதி உலா. 17ம் தேதி சிம்ம வாகனத்தில் உலா.

18ம் தேதி காலை 8 மணிக்கு கமலதொட்டி. இரவு 8க்கு யானை வாகனத்தில் திருவீதி உலா.

19ல் இரவு 8க்கு அன்ன வாகன வீதி உலா. 20ம் தேதி குதிரை வாகன வீதிஉலா.

21ல் இந்திர விமான உலா. 22ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அன்னதானம். இரவு 8க்கு பூதவாகனத்தில் வீதி உலா. இதைத் தொடர்ந்து கொடியிறக்கம்.

23ல், இரவு 7 மணிக்கு புஷ்ப பல்லக்கு வீதி உலா. 24ம் தேதி விடையாற்றி விழாவையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
Sundaramurthi Vinayaka Temple is located at Triplicane ellamman Church Street. In the last 300 years before the temple of the Goddess statue found while digging the foundation said.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum