தீராத நோயை தீர்க்கும் எல்லையம்மன் ரேணுகா பரமேஸ்வரி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
தீராத நோயை தீர்க்கும் எல்லையம்மன் ரேணுகா பரமேஸ்வரி
திருவல்லிக்கேணி தேவராஜ முதலி தெருவில் அமைந்துள்ளது எல்லையம்மன் ரேணுகா பரமேஸ்வரி கோயில். கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு நெசவுத் தொழில் செய்து வந்த செங்குந்தர்கள் இக்கோயில் அமைந்திருந்த இடத்தில் வாழ்ந்து வந்தனர். அஸ்திவாரத்திற்காக நிலத்தை தோண்டும் போது, அதில் அம்மன் சிலை இருந்ததாக கூறப்படுகிறது. குமரனை குல தெய்வமாக கொண்டவர்களாக இருந்தாலும், தாங்கள் கண்டெடுத்த அம்மன் சிலையை சிறு கொட்டகையில் நிறுவி பக்தர்கள் வழிபாடு செய்ய ஆரம்பித்ததாக வரலாறு எடுத்துரைக்கிறது.
இக்கோயிலே தற்போது எல்லையம்மன் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் ஆலயமாக போற்றப்படுகிறது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் சிறிய சாலக்கார விமானத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறார் ரேணுகா பரமேஸ்வரி அம்மன். கோயிலின் இடதுபுறம் விநாயகர் காட்சியளிக்கிறார். இதையடுத்து வெளிப்பிரகாரத்தின் இடதுபுறத்தில் நால்வர் சன்னதி அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை மாதம் சித்திரை வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, 108 பால்குட அபிஷேகம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஆனி மாதம் பவுர்மணி தினத்தன்று பூச்சொரிதல் விழா, ஆடி மாதம் பிரமோற்சவ திருவிழா மற்றும் கூழ்வார்த்தல் நடைபெறும். இதுதவிர சிவராத்திரி திருவிழா, மாசி மக உற்சவ விழா நடைபெறும். இக்கோயிலில் வெள்ளிக்கிழமை தோறும் பொங்கலிட்டு அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேற அம்மனுக்கு 11 வெள்ளிக்கிழமை எலுமிச்சை மாலை அணிந்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.
இந்த அம்மனை வேண்டினால் தீராத நோய் தீரும், வாழ்வில் வளம் பெருகும், வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் இக்கோயிலை சுற்றியுள்ள பகுதியில் அம்மை நோய் கண்டவர்களுக்கு, அம்மனுக்கு பூஜிக்கப்பட்ட தீர்த்தத்தை உடலில் தெளித்தவுடன் நோய் குணமாகும் என பக்தர்கள் கூறுகின்றனர். காலை 6 மணி முதல் 11 வரையும், மாலை 5 முதல் இரவு 9 வரைக்கும் கோயில் திறந்திருக்கும். வாரம் தோறும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜை, மஞ்சள் காப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
எப்படி போகணும்:
திருவல்லிக்கேணி ஜாம்பஜார் மார்க்கெட் அல்லது கெல்லட் பள்ளி பஸ் ஸ்டாப்பில் இருந்து 5 நிமிட நடைதூரத்தில் இக்கோயில் உள்ளது.
இக்கோயிலே தற்போது எல்லையம்மன் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் ஆலயமாக போற்றப்படுகிறது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் சிறிய சாலக்கார விமானத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறார் ரேணுகா பரமேஸ்வரி அம்மன். கோயிலின் இடதுபுறம் விநாயகர் காட்சியளிக்கிறார். இதையடுத்து வெளிப்பிரகாரத்தின் இடதுபுறத்தில் நால்வர் சன்னதி அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை மாதம் சித்திரை வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, 108 பால்குட அபிஷேகம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஆனி மாதம் பவுர்மணி தினத்தன்று பூச்சொரிதல் விழா, ஆடி மாதம் பிரமோற்சவ திருவிழா மற்றும் கூழ்வார்த்தல் நடைபெறும். இதுதவிர சிவராத்திரி திருவிழா, மாசி மக உற்சவ விழா நடைபெறும். இக்கோயிலில் வெள்ளிக்கிழமை தோறும் பொங்கலிட்டு அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேற அம்மனுக்கு 11 வெள்ளிக்கிழமை எலுமிச்சை மாலை அணிந்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.
இந்த அம்மனை வேண்டினால் தீராத நோய் தீரும், வாழ்வில் வளம் பெருகும், வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் இக்கோயிலை சுற்றியுள்ள பகுதியில் அம்மை நோய் கண்டவர்களுக்கு, அம்மனுக்கு பூஜிக்கப்பட்ட தீர்த்தத்தை உடலில் தெளித்தவுடன் நோய் குணமாகும் என பக்தர்கள் கூறுகின்றனர். காலை 6 மணி முதல் 11 வரையும், மாலை 5 முதல் இரவு 9 வரைக்கும் கோயில் திறந்திருக்கும். வாரம் தோறும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜை, மஞ்சள் காப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
எப்படி போகணும்:
திருவல்லிக்கேணி ஜாம்பஜார் மார்க்கெட் அல்லது கெல்லட் பள்ளி பஸ் ஸ்டாப்பில் இருந்து 5 நிமிட நடைதூரத்தில் இக்கோயில் உள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அரவணைப்பாள் அங்காள பரமேஸ்வரி
» சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கரும்பேஸ்வரர்
» நோயை விரட்டும் யம தீபம்
» கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் மாசி உற்சவம்
» தீராத பாவமும் தீர்ப்பார் திருக்காமீஸ்வரர்
» சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கரும்பேஸ்வரர்
» நோயை விரட்டும் யம தீபம்
» கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் மாசி உற்சவம்
» தீராத பாவமும் தீர்ப்பார் திருக்காமீஸ்வரர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya