மக்களுக்கு மகிழ்ச்சி பெருக்கும் ஐஸ்வர்யம் தரும் ஆடி 18
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மக்களுக்கு மகிழ்ச்சி பெருக்கும் ஐஸ்வர்யம் தரும் ஆடி 18
ஆடி என்றவுடன் மனதில் புது வெள்ளம் பாய்கிறது. ஆடிப்பட்டம் தேடி விதைப்பது, ஆடி மாதம் மழைக்கு பின்னர் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் புது வெள்ளத்தில் குளிப்பது என நம் வாழ்க்கையில் ஆடிக்கு அற்புதமான இடம் உண்டு. காவிரியில் வரும் புது வெள்ளத்தில் குளிப்பதற்கான ஆடி 18 அன்று மேட்டூர் அணையில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு பகுதிகளில் இருந்தும் மக்கள் மேட்டூர் அணைக்கு வந்து ஆடிப்பெருக்கை கொண்டாடுகின்றனர்.
இம்மாவட்டங்களில் உள்ள கிராமப்பகுதி மக்கள் தங்களது குலதெய்வங்களையும், அதற்கு பயன்படுத்தும் ஆயுதங்களையும் தலைச்சுமையாக நடந்தே கொண்டு வருகின்றனர். இவர்கள் விடிய விடிய நடந்து மேட்டூர் அணைக்கு வருகின்றனர். குல தெய்வங்களை பெருக்கெடுத்து ஓடும் காவிரியில் நீராட்டி, பூஜை செய்து மீண்டும் தலைச்சுமையாகவே கொண்டு செல்கின்றனர். இதன் மூலம் குல தெய்வம் தூய்மை செய்யப்படுவதாகவும், குடும்பங்களில் ஐஸ்வர்யம் பெருகும் என மக்கள் நம்புகின்றனர்.
புதிதாகத் திருமணம் ஆன தம்பதியர் காவிரியில் நீராடி தங்கள் வாழ்வு சிறக்க காவிரி தாயிடம் வேண்டிக்கொள்கின்றனர். புனித நீராடி முன்னோரை வழிபடுகின்றனர். மக்கள் அணைக்கட்டு முனியப்பன் கோயிலில் தங்களது நேர்த்திக்கடனை அன்று செலுத்துகின்றனர். அணைக்கட்டு முனியப்பனைப் பற்றி ஆண்டாண்டு காலமாய் மக்கள் மத்தியில் கதை ஒன்று உள்ளது. அணைக்கட்டு கட்டப்பட்டு வந்த காலத்தில் அணைத் தண்ணீர் வெளியேற அமைக்கப்பட்ட இந்த வாய்க்கால் கட்டும் பணி நடந்தது. அப்போது சிறிய அளவில் இருந்த அணைக்கட்டு முனியப்பன் கோயிலை இடிக்க முற்பட்ட போது பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டது. இதனால் முனியப்பன் கோயிலை இடிப்பது கைவிடப்பட்டது.
இப்பணியை மேற்பார்வை செய்த ஆங்கிலேய அதிகாரி முனியப்பன் கோயிலுக்கு மேடை அமைத்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மக்கள் தங்களுக்கு கெட்டது செய்தவர்களை முனியப்பன் தண்டிக்க ஆடு மற்றும் கோழிகளை முனியப்பன் கோயிலில் உள்ள வேலில் குத்துவது வழக்கம். அதே போல் கழிப்பு கழித்தல், பேய் பிசாசு பிடித்திருப்பதாக நம்புபவர்களும் இந்த நாளில் வழிபாடு நடத்துகின்றனர். அணைப்பூங்காவில் ஆடிப்பெருக்குக்கு வரும் குழந்தைகள் விளையாடி மகிழ்கின்றனர். அணையில் மீன், ஆடு, கோழியை சமைத்து சாப்பிடவும் மக்கள் இங்கு வருகின்றனர். அதிகாலை முதல் காலை 11 மணி வரை மக்கள் குளிப்பதற்காக இங்கு வருகின்றனர்.
மதிய வேளையில் பொழுதைக் கழிக்கவும், மீன் உணவுகள் சாப்பிடவும் மக்கள் மேட்டூர் அணைக்கு வந்து செல்கின்றனர். மக்களின் பாதுகாப்புக்காக காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். நடமாடும் மருத்துவ சேவைக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. பேரிக்காய், அண்ணாசி விற்பனை தூள் பறக்கும். இரும்பில் செய்யப்பட்ட வாணலி, அரிவாள், அரிவாள் மனை, தோசைக்கல் உள்ளிட்டவையும் அந்நாளில் விற்பனை செய்யப்படும். மக்களின் வசதிக்காக வாகன நெரிசலைத் தடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஆடி 18 அன்று மேட்டூர் அணையில் புது வெள்ளத்தில் மிதக்கும் புன்னகை முகங்களையும், உற்சாகம் நிறைந்த இளைஞர்களையும், மகிழ்வில் துள்ளும் குழந்தைகளையும் கண்டு ரசிக்கலாம்.
22 நாட்கள் நடக்கும் ஆடி திருவிழா
வழக்கமாக அம்மன் கோயில்களில் ஆண்டு தோறும் சித்திரை, பங்குனி தான் பொங்கல் திருவிழா கொண்டாடுவது வழக்கம். ஆனால் சேலம் மாநகரில் மட்டும் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் திருவிழா களைகட்டும். அதுவும் ஒரே நேரத்தில் அனைத்து கோயில்களிலும் கொண்டாடுவது தான் சிறப்பு.
சேலம் மாவட்ட மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட்ட மாதங்களில் ஒன்று ஆடி. பீடை மாதம் என்று பலர் ஆடியை ஒதுக்கும் நேரத்தில் இங்கு மட்டும் வழிபாடுகளும், நேர்த்திக்கடனும், திருவிழா கொண்டாட்டங்களும் உச்சத்தில் இருக்கும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் மாரியை தரிசித்துச் செல்ல லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருவது வழக்கம். இதேபோல் தங்கள் பகுதியில் உள்ள கோயில்களிலும் திருவிழா கொண்டாடி மகிழ்வர்.
தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் 22 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுவது தான் ஆடிப்பண்டிகையின் சிறப்பு. ஆடி மாதத்தில் வரும் முதல் செவ்வாய்கிழமையில் பூச்சாட்டுதல், இரண்டாம் செவ்வாய்க்கிழமையில் கம்பம் நடுதல், மூன்றாம் செவ்வாய்க்கிழமையில் சக்திகரகம் அழைத்தல், நான்காம் செவ்வாய் கிழமை பொங்கல் விழா என்று செவ்வாய்க்கிழமையில் ஆரம்பிக்கும் விழா, செவ்வாய்க்கிழமையிலேயே நிறைவு பெறுவது மேலும் சிறப்பம்சமாகும். மகாபாரத யுத்தம் நடந்த மாதம், ஆடி என்றும் இதனால் ஆடியை போர்க்காலம் என்றும், நமது முன்னோர்கள் சொல்வார்கள். இதனால் இந்த மாதத்தில் எந்த செயலை துவக்கினாலும், அது பின்னடைவை தரும் என்று கூறுவார்கள். இந்த மாதத்தில் நாம் தெய்வ வழிபாடுகளில் அதிக கவனம் செலுத்தினால் துயரங்கள் யாவும் பறந்து போகும் என்ற நம்பிக்கையால் சேலத்தில் ஆடித்திருவிழா கொண்டாடப்படுகிறது.
ஜீவாதார சக்தி நிறைந்த மாதம்
ஆடி மாதத்தை அடிப்படையாக வைத்துதான் பல சுப நிகழ்ச்சிகளை முன்னோர்கள் நடத்தினர். ஆடியை கற்கடக மாதம் என்றும் அழைக்கிறார்கள்.
மாதங்களைப் பொறுத்தவரை உத்ராயணம், தட்சிணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இதில் தட்சிணாயணம் புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்ராயணம் என பிரிக்கப்பட்டுள்ளது. சூரியனின் பாவன இயக்கத்தை (வடகிழக்கு, தென்கிழக்கு) வைத்து இது வரையறுக்கப்படுகிறது.
தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்த்ரீகம் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிராண வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவாதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது. ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தட்சிணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.
இம்மாவட்டங்களில் உள்ள கிராமப்பகுதி மக்கள் தங்களது குலதெய்வங்களையும், அதற்கு பயன்படுத்தும் ஆயுதங்களையும் தலைச்சுமையாக நடந்தே கொண்டு வருகின்றனர். இவர்கள் விடிய விடிய நடந்து மேட்டூர் அணைக்கு வருகின்றனர். குல தெய்வங்களை பெருக்கெடுத்து ஓடும் காவிரியில் நீராட்டி, பூஜை செய்து மீண்டும் தலைச்சுமையாகவே கொண்டு செல்கின்றனர். இதன் மூலம் குல தெய்வம் தூய்மை செய்யப்படுவதாகவும், குடும்பங்களில் ஐஸ்வர்யம் பெருகும் என மக்கள் நம்புகின்றனர்.
புதிதாகத் திருமணம் ஆன தம்பதியர் காவிரியில் நீராடி தங்கள் வாழ்வு சிறக்க காவிரி தாயிடம் வேண்டிக்கொள்கின்றனர். புனித நீராடி முன்னோரை வழிபடுகின்றனர். மக்கள் அணைக்கட்டு முனியப்பன் கோயிலில் தங்களது நேர்த்திக்கடனை அன்று செலுத்துகின்றனர். அணைக்கட்டு முனியப்பனைப் பற்றி ஆண்டாண்டு காலமாய் மக்கள் மத்தியில் கதை ஒன்று உள்ளது. அணைக்கட்டு கட்டப்பட்டு வந்த காலத்தில் அணைத் தண்ணீர் வெளியேற அமைக்கப்பட்ட இந்த வாய்க்கால் கட்டும் பணி நடந்தது. அப்போது சிறிய அளவில் இருந்த அணைக்கட்டு முனியப்பன் கோயிலை இடிக்க முற்பட்ட போது பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டது. இதனால் முனியப்பன் கோயிலை இடிப்பது கைவிடப்பட்டது.
இப்பணியை மேற்பார்வை செய்த ஆங்கிலேய அதிகாரி முனியப்பன் கோயிலுக்கு மேடை அமைத்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மக்கள் தங்களுக்கு கெட்டது செய்தவர்களை முனியப்பன் தண்டிக்க ஆடு மற்றும் கோழிகளை முனியப்பன் கோயிலில் உள்ள வேலில் குத்துவது வழக்கம். அதே போல் கழிப்பு கழித்தல், பேய் பிசாசு பிடித்திருப்பதாக நம்புபவர்களும் இந்த நாளில் வழிபாடு நடத்துகின்றனர். அணைப்பூங்காவில் ஆடிப்பெருக்குக்கு வரும் குழந்தைகள் விளையாடி மகிழ்கின்றனர். அணையில் மீன், ஆடு, கோழியை சமைத்து சாப்பிடவும் மக்கள் இங்கு வருகின்றனர். அதிகாலை முதல் காலை 11 மணி வரை மக்கள் குளிப்பதற்காக இங்கு வருகின்றனர்.
மதிய வேளையில் பொழுதைக் கழிக்கவும், மீன் உணவுகள் சாப்பிடவும் மக்கள் மேட்டூர் அணைக்கு வந்து செல்கின்றனர். மக்களின் பாதுகாப்புக்காக காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். நடமாடும் மருத்துவ சேவைக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. பேரிக்காய், அண்ணாசி விற்பனை தூள் பறக்கும். இரும்பில் செய்யப்பட்ட வாணலி, அரிவாள், அரிவாள் மனை, தோசைக்கல் உள்ளிட்டவையும் அந்நாளில் விற்பனை செய்யப்படும். மக்களின் வசதிக்காக வாகன நெரிசலைத் தடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஆடி 18 அன்று மேட்டூர் அணையில் புது வெள்ளத்தில் மிதக்கும் புன்னகை முகங்களையும், உற்சாகம் நிறைந்த இளைஞர்களையும், மகிழ்வில் துள்ளும் குழந்தைகளையும் கண்டு ரசிக்கலாம்.
22 நாட்கள் நடக்கும் ஆடி திருவிழா
வழக்கமாக அம்மன் கோயில்களில் ஆண்டு தோறும் சித்திரை, பங்குனி தான் பொங்கல் திருவிழா கொண்டாடுவது வழக்கம். ஆனால் சேலம் மாநகரில் மட்டும் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் திருவிழா களைகட்டும். அதுவும் ஒரே நேரத்தில் அனைத்து கோயில்களிலும் கொண்டாடுவது தான் சிறப்பு.
சேலம் மாவட்ட மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட்ட மாதங்களில் ஒன்று ஆடி. பீடை மாதம் என்று பலர் ஆடியை ஒதுக்கும் நேரத்தில் இங்கு மட்டும் வழிபாடுகளும், நேர்த்திக்கடனும், திருவிழா கொண்டாட்டங்களும் உச்சத்தில் இருக்கும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் மாரியை தரிசித்துச் செல்ல லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருவது வழக்கம். இதேபோல் தங்கள் பகுதியில் உள்ள கோயில்களிலும் திருவிழா கொண்டாடி மகிழ்வர்.
தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் 22 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுவது தான் ஆடிப்பண்டிகையின் சிறப்பு. ஆடி மாதத்தில் வரும் முதல் செவ்வாய்கிழமையில் பூச்சாட்டுதல், இரண்டாம் செவ்வாய்க்கிழமையில் கம்பம் நடுதல், மூன்றாம் செவ்வாய்க்கிழமையில் சக்திகரகம் அழைத்தல், நான்காம் செவ்வாய் கிழமை பொங்கல் விழா என்று செவ்வாய்க்கிழமையில் ஆரம்பிக்கும் விழா, செவ்வாய்க்கிழமையிலேயே நிறைவு பெறுவது மேலும் சிறப்பம்சமாகும். மகாபாரத யுத்தம் நடந்த மாதம், ஆடி என்றும் இதனால் ஆடியை போர்க்காலம் என்றும், நமது முன்னோர்கள் சொல்வார்கள். இதனால் இந்த மாதத்தில் எந்த செயலை துவக்கினாலும், அது பின்னடைவை தரும் என்று கூறுவார்கள். இந்த மாதத்தில் நாம் தெய்வ வழிபாடுகளில் அதிக கவனம் செலுத்தினால் துயரங்கள் யாவும் பறந்து போகும் என்ற நம்பிக்கையால் சேலத்தில் ஆடித்திருவிழா கொண்டாடப்படுகிறது.
ஜீவாதார சக்தி நிறைந்த மாதம்
ஆடி மாதத்தை அடிப்படையாக வைத்துதான் பல சுப நிகழ்ச்சிகளை முன்னோர்கள் நடத்தினர். ஆடியை கற்கடக மாதம் என்றும் அழைக்கிறார்கள்.
மாதங்களைப் பொறுத்தவரை உத்ராயணம், தட்சிணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இதில் தட்சிணாயணம் புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்ராயணம் என பிரிக்கப்பட்டுள்ளது. சூரியனின் பாவன இயக்கத்தை (வடகிழக்கு, தென்கிழக்கு) வைத்து இது வரையறுக்கப்படுகிறது.
தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்த்ரீகம் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிராண வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவாதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது. ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தட்சிணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» வெற்றி, மகிழ்ச்சி, ஆயுள், ஆரோக்கியம்.. அட்சய பாத்திரம் போல அள்ளி தரும் சூரியன்
» மங்கலம் பெருக்கும் மகாலட்சுமி தலங்கள்
» ஐஸ்வர்யம் அள்ளித் தருவாள் அன்னை ரேணுகாதேவி
» மனம் நிறைந்த மகிழ்ச்சி அருள்வாள் மகிமை மாதா
» மனம் நிறைந்த மகிழ்ச்சி அருள்வாள் மகிமை மாதா
» மங்கலம் பெருக்கும் மகாலட்சுமி தலங்கள்
» ஐஸ்வர்யம் அள்ளித் தருவாள் அன்னை ரேணுகாதேவி
» மனம் நிறைந்த மகிழ்ச்சி அருள்வாள் மகிமை மாதா
» மனம் நிறைந்த மகிழ்ச்சி அருள்வாள் மகிமை மாதா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya