அதிகாலையில் அர்த்தஜாம பூஜை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
அதிகாலையில் அர்த்தஜாம பூஜை
அனைத்து ஆலயங்களிலும் இரவு ஆலயத்தை மூடும் முன் அர்த்தஜாம பூஜையை செய்வது வழக்கம். ஆனால், தீபாவாளி அன்று மட்டும் முந்தைய நாள் செய்யவேண்டிய அந்த பூஜையை அதிகாலையில் மேற்கொள்ளும் ஆலயம் ஒன்று இருக்கிறது. சோழ வள நாட்டில் வாழ்ந்தவர்கள் பாதிரி வனம் எனும் திருக்கருகாவூரில் உஷத்கால (சூரியோதய) பூஜையையும், முல்லை வனம் எனும் அவளிவளநல்லூரில் கால சந்தி (முற்பகல்) பூஜையையும், வன்னிவனம் எனும் ஹரித்வார மங்கலத்தில் உச்சிகால பூஜையையும், பூளைவனம் எனும் ஆலங்குடியில் சாயரட்சை (சூரிய அஸ்தமனகால) பூஜையையும், வில்வவனம் எனும் திருக்கொள்ளம்புதூரில் அர்த்தஜாம (நள்ளிரவு) பூஜையையும் ஒரே நாளில் அடுத்தடுத்து தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
பல சிவத்தலங்களை தரிசனம் செய்தவாறே ஊர் ஊராக வந்து கொண்டிருந்த ஞானக் குழந்தை திருஞான சம்பந்தர், அவ்வூர் வழக்கப்படி நான்கு ஆலயங்களுக்குச் சென்று அந்த பூஜைகளை தரிசித்துவிட்டு, ஐந்தாவது ஆலயமான திருக்கொள்ளம்புதூர் நோக்கி விரைந்து கொண்டிருந்தார். ஐப்பசி மாத அமாவாசை நாள். தீபாவளிப் பண்டிகையை எல்லோரும் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இருள் அடர்ந்த அந்த வேளையில் திருஞான சம்பந்தர் தம் அடியார்களுடன் முள்ளி ஆற்றைக் கடந்து செல்ல முயன்றார். சோதனையாக ஆற்றில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து ஓடியது. அனைவரும் திகைத்து செய்வதறியாமல் நிற்க, திருஞான சம்பந்தர் தைரியமாக தாமே படகை செலுத்தத் தீர்மானித்து,
கட்டியிருந்த படகை அவிழ்த்து அதில் ஏறி அமர்ந்து அடியவர்களையும் அமரச் செய்தார்.
இருட்டான அந்த அமாவாசை இரவில் பயந்த அடியார்களுக்கு ஆறுதல் கூறும் வண்ணம் பதிகம் பாடினார் சம்பந்தர். வெள்ள நீரோட்டத்தை எதிர்த்து மெல்ல படகைச் செலுத்தி மறுகரையை அவர்கள் அடைந்த போது அதிகாலை ஆகிவிட்டது. திருக்கொள்ளம்புதூர் அர்ச்சகர்கள் திருஞான சம்பந்தர் ஆலயத்திற்கு வருவதை வரவேற்க ஆவலாக பூரண கும்பத்தோடு காத்திருந்தனர். அர்த்த ஜாம பூஜைக்கான நேரம் கடந்து விடிகாலையும் வந்து விட்டது. என்ன ஆயிற்றோ சம்பந்தருக்கு என அவர்கள் கவலைப்பட்டனர். அப்போது தம் அடியவர்களுடன் திருஞான சம்பந்தர்ஆலயப் பிரவேசம் செய்தார். அவருக்காக அர்த்த ஜாம பூஜை, உஷத்காலத்தில் செய்யப்பட்டது. தீபாவளிக்கு அடுத்த நாள் நிகழ்ந்த அந்த சம்பவத்தை நினைவுறுத்தும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் இப்போதும் அந்த ஆலயத்தில் இவ்வாறு பூஜை நடத்தப்படுகிறது.
திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்ததை நினைவுறுத்தும் வகையில் ஓடத்திருவிழா நடக்கிறது. திருஞான சம்பந்தரின் உற்சவத்திருமேனியை படகில் வைத்து ஓதுவார்கள் தேவாரம் ஓத, முள்ளி ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு படகு செல்லும். அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன் படகு கரை சேரும். அங்கே ரிஷபாரூடராய் வில்வவனநாதர் ஞான சம்பந்தரை எதிர்கொண்டழைத்து ஆலயத்திற்கு அழைத்துச் செல்லும் நிகழ்வு நடைபெறும். இந்த விழாவிற்காகவே இறைவன் திருவருளால் அன்று முள்ளியாற்றில் நீர் கரைபுரண்டோடும் அதிசயம் இன்றுவரை தொடர்கிறது. அன்று உஷத்காலத்தில் ஆலயத்தில் அர்த்தஜாம பூஜை நடக்கும். ஆண்டிற்கொருமுறை நடக்கும் அபூர்வத்திருவிழா என்பதால் அன்று சிவனடியார்கள் அதிக எண்ணிக்கையில் ஆலயத்தில் கூடுவர். அம்பாள் அழகு நாச்சியாரும், வில்வவனநாதரும் திருஞானசம்பந்தருக்கு மட்டுமல்லாமல் ஆலயம் நாடும் அடியார்களுக்கும் தம் அருளை வாரி வழங்கும் விழாவாக இது துலங்குகிறது.
பல சிவத்தலங்களை தரிசனம் செய்தவாறே ஊர் ஊராக வந்து கொண்டிருந்த ஞானக் குழந்தை திருஞான சம்பந்தர், அவ்வூர் வழக்கப்படி நான்கு ஆலயங்களுக்குச் சென்று அந்த பூஜைகளை தரிசித்துவிட்டு, ஐந்தாவது ஆலயமான திருக்கொள்ளம்புதூர் நோக்கி விரைந்து கொண்டிருந்தார். ஐப்பசி மாத அமாவாசை நாள். தீபாவளிப் பண்டிகையை எல்லோரும் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இருள் அடர்ந்த அந்த வேளையில் திருஞான சம்பந்தர் தம் அடியார்களுடன் முள்ளி ஆற்றைக் கடந்து செல்ல முயன்றார். சோதனையாக ஆற்றில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து ஓடியது. அனைவரும் திகைத்து செய்வதறியாமல் நிற்க, திருஞான சம்பந்தர் தைரியமாக தாமே படகை செலுத்தத் தீர்மானித்து,
கட்டியிருந்த படகை அவிழ்த்து அதில் ஏறி அமர்ந்து அடியவர்களையும் அமரச் செய்தார்.
இருட்டான அந்த அமாவாசை இரவில் பயந்த அடியார்களுக்கு ஆறுதல் கூறும் வண்ணம் பதிகம் பாடினார் சம்பந்தர். வெள்ள நீரோட்டத்தை எதிர்த்து மெல்ல படகைச் செலுத்தி மறுகரையை அவர்கள் அடைந்த போது அதிகாலை ஆகிவிட்டது. திருக்கொள்ளம்புதூர் அர்ச்சகர்கள் திருஞான சம்பந்தர் ஆலயத்திற்கு வருவதை வரவேற்க ஆவலாக பூரண கும்பத்தோடு காத்திருந்தனர். அர்த்த ஜாம பூஜைக்கான நேரம் கடந்து விடிகாலையும் வந்து விட்டது. என்ன ஆயிற்றோ சம்பந்தருக்கு என அவர்கள் கவலைப்பட்டனர். அப்போது தம் அடியவர்களுடன் திருஞான சம்பந்தர்ஆலயப் பிரவேசம் செய்தார். அவருக்காக அர்த்த ஜாம பூஜை, உஷத்காலத்தில் செய்யப்பட்டது. தீபாவளிக்கு அடுத்த நாள் நிகழ்ந்த அந்த சம்பவத்தை நினைவுறுத்தும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் இப்போதும் அந்த ஆலயத்தில் இவ்வாறு பூஜை நடத்தப்படுகிறது.
திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்ததை நினைவுறுத்தும் வகையில் ஓடத்திருவிழா நடக்கிறது. திருஞான சம்பந்தரின் உற்சவத்திருமேனியை படகில் வைத்து ஓதுவார்கள் தேவாரம் ஓத, முள்ளி ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு படகு செல்லும். அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன் படகு கரை சேரும். அங்கே ரிஷபாரூடராய் வில்வவனநாதர் ஞான சம்பந்தரை எதிர்கொண்டழைத்து ஆலயத்திற்கு அழைத்துச் செல்லும் நிகழ்வு நடைபெறும். இந்த விழாவிற்காகவே இறைவன் திருவருளால் அன்று முள்ளியாற்றில் நீர் கரைபுரண்டோடும் அதிசயம் இன்றுவரை தொடர்கிறது. அன்று உஷத்காலத்தில் ஆலயத்தில் அர்த்தஜாம பூஜை நடக்கும். ஆண்டிற்கொருமுறை நடக்கும் அபூர்வத்திருவிழா என்பதால் அன்று சிவனடியார்கள் அதிக எண்ணிக்கையில் ஆலயத்தில் கூடுவர். அம்பாள் அழகு நாச்சியாரும், வில்வவனநாதரும் திருஞானசம்பந்தருக்கு மட்டுமல்லாமல் ஆலயம் நாடும் அடியார்களுக்கும் தம் அருளை வாரி வழங்கும் விழாவாக இது துலங்குகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஆயுத பூஜை ஆயுத பூஜை
» லட்சுமி பூஜை செய்யுங்கள்
» ஐயப்பன் திருவிளக்கு பூஜை
» முருகப்பெருமானின் ஆறு முகங்களுக்கும் தனித்தனியே பூஜை
» நலங்கள் தரும் ராகுகால பூஜை
» லட்சுமி பூஜை செய்யுங்கள்
» ஐயப்பன் திருவிளக்கு பூஜை
» முருகப்பெருமானின் ஆறு முகங்களுக்கும் தனித்தனியே பூஜை
» நலங்கள் தரும் ராகுகால பூஜை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya