Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


கந்தசஷ்டி 4ம் நாள் திருவிழாவில் தங்கத்தேரில் ஜெயந்திநாதர் உலா

Go down

கந்தசஷ்டி 4ம் நாள் திருவிழாவில் தங்கத்தேரில் ஜெயந்திநாதர் உலா Empty கந்தசஷ்டி 4ம் நாள் திருவிழாவில் தங்கத்தேரில் ஜெயந்திநாதர் உலா

Post by oviya Thu Dec 11, 2014 1:47 pm

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் 4வது நாளான நேற்று தங்கத்தேரில் வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் எழுந்தருளி வலம் வந்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது. அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. 4ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்தாண்ட அபிஷேகம் நடந்தது.

காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. 10 மணிக்கு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. பகல் 2 மணிக்கு சுவாமி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரங்களில் வலம் வந்து 2.15 மணிக்கு சண்முகவிலாசம் மண்டபம் சேர்ந்தார். அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. சண்முகவிலாசத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு சுவாமி எழுந்தருளி கந்தசஷ்டி மண்டபத்தை அடைந்தார். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 9 மணிக்கு தங்கத்தேரில் சுவாமி எழுந்தருளி, கிரி பிரகாரம் வலம் வந்து கோயில் சேர்ந்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (8ம் தேதி) மாலை திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. மாலை 4.35 மணிக்கு கடற்கரையில் சூரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்கிறார். இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) ஞானசேகர், அலுவலக கண்காணிப்பாளர் ராமசாமி மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தெற்கு ரயில்வே மதுரை கோட்ட முதுநிலை மக்கள் தொடர்பு அலுவலர் வேணுகோபால் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் - நெல்லை, நெல்லை - திருச்செந்தூர் இடையே நாளை (8ம் தேதி) சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. நெல்லை - திருச்செந்தூர் விரைவு சிறப்பு ரயில், நெல்லையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு 2 மணிக்கும், மற்றொரு விரைவு சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு 3.10 மணிக்கும் திருச்செந்தூர் செல்லும். மறு மார்க்கத்தில் திருச்செந்தூர் - நெல்லை சிறப்பு ரயில் திருச்செந்தூரில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 11.25 மணிக்கும், இன்னொரு சிறப்பு ரயில் திருச்செந்தூரில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு 10.15 மணிக்கும் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் வந்து சேரும். இந்த சிறப்பு விரைவு ரயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum