Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


ஆருத்ரா தரிசனம்: சிவ ஆலயங்களில் நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள்!

Go down

ஆருத்ரா தரிசனம்: சிவ ஆலயங்களில் நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள்! Empty ஆருத்ரா தரிசனம்: சிவ ஆலயங்களில் நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள்!

Post by oviya Thu Dec 11, 2014 2:09 pm

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெற்ற ஆருத்ர தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சித்சபையில் இருந்து தேரில் எழுந்தருளினார். காலை 6 மணி அளவில் தேர்நிலையை அடைந்தது.

புதன்கிழமை அதிகாலை சுவாமிக்கு மகா அபிஷேகம், புஷ்பாஞ்சலி திரு ஆபரண அலங்கார காட்சி, சொர்ணாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதி உலா நடந்தது. அதன்பின்னர் 2.30 மணியளவில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமிகள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் 3 முறை முன்னுக்கு பின்னுமாக நடனமாக பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சி அளித்தார்.

இதையடுத்து சித்சபை பிரவேசம் நடைபெற்றது. வியாழக்கிழமை முத்து பல்லக்கு உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. தஞ்சையில் தரிசனம் இன்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். உத்தரகோசமங்கை ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பச்சை மரகத நடராஜர் பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum