இன்று மண்டல பூஜை லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
இன்று மண்டல பூஜை லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடக்கிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சன்னிதானத்தில் குவிந்தனர்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. கடந்தாண்டைவிட இந்தாண்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. இதேபோல் இரவு நடை சாத்தப்படும் நேரமும் அதிகரிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத நிலையில் காணப்பட்டதால் கோயில் நடை இரவு 11.45 மணிக்கு சாத்தப்பட்டது.
இதனால் ஒரு வாரமாக பக்தர்கள் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக வரிசையில் நின்று ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். நெரிசல் அதிகரித்ததை தொடர்ந்து பம்பையிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சிறிய குழுக்களாக அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று காலை 6 மணிக்கு சபரிமலை வந்த பக்தர்களால் இரவு 7 மணிக்கு பின்னரே தரிசனம் செய்ய முடிந்தது. இதற்கிடையே மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் நேற்று மதியம் 2 மணிக்கு பம்பையை வந்தடைந்தது. அங்குள்ள கணபதி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.
பின்னர் தங்க அங்கி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாலை 6.15 மணி அளவில் சன்னிதானத்தை அடைந்தது. தொடர்ந்து தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. இன்று பகல் 11.55 மணிக்கும் 1 மணிக்கும் இடையே மண்டல பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். இதையடுத்து இவ்வருட மண்டல கால பூஜைகள் நிறைவடைகிறது. மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக டிச.30ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.
இதனால் ஒரு வாரமாக பக்தர்கள் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக வரிசையில் நின்று ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். நெரிசல் அதிகரித்ததை தொடர்ந்து பம்பையிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சிறிய குழுக்களாக அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று காலை 6 மணிக்கு சபரிமலை வந்த பக்தர்களால் இரவு 7 மணிக்கு பின்னரே தரிசனம் செய்ய முடிந்தது. இதற்கிடையே மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் நேற்று மதியம் 2 மணிக்கு பம்பையை வந்தடைந்தது. அங்குள்ள கணபதி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.
பின்னர் தங்க அங்கி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாலை 6.15 மணி அளவில் சன்னிதானத்தை அடைந்தது. தொடர்ந்து தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. இன்று பகல் 11.55 மணிக்கும் 1 மணிக்கும் இடையே மண்டல பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். இதையடுத்து இவ்வருட மண்டல கால பூஜைகள் நிறைவடைகிறது. மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக டிச.30ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சபரிமலையில் இன்று மண்டல பூஜை : பக்தர்கள் குவிகின்றனர்
» இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
» திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
» இன்று வைகாசி விசாக திருவிழா : திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
» குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்
» இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
» திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
» இன்று வைகாசி விசாக திருவிழா : திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
» குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya