வைகுண்ட ஏகாதசி : பார்த்தசாரதி கோயிலில் 11ல் பரமபத வாசல் திறப்பு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
வைகுண்ட ஏகாதசி : பார்த்தசாரதி கோயிலில் 11ல் பரமபத வாசல் திறப்பு
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வரும் 11ம் தேதி பரமபதவாசல் திறக்கப்படுகிறது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 1ம் தேதி முதல் வரும் 11ம் தேதி வரை பகல் பத்து உற்சவம் நடக்கிறது. இதைதொடர்ந்து 11ம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை பரமபதவாசல் திறக்கப்படுகிறது. அதிகாலை 12 மணி முதல் 2.30 வரை விஸ்வரூபம், அலங்காரம் மற்றும் தனுர்மாத பூஜையும் நடக்கிறது.
அதிகாலை 2.30 மணியளவில் மேற்கு கோபுர வாசல் வழியாக மூலவர் மற்றும் மகா மண்டபத்தில் உள்ள உற்சவர் ஸ்ரீபார்த்த சாரதியை தரிசனம் செய்யலாம். இதில், முதல் 1000 பக்தர்கள் இலவசமாக தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். பிறகு 4 மணியளவில் உற்சவர் மகா மண்டபத்திலிருந்து உட்பிரகாரம் வழியாக வலம் வந்து 4.30 மணிக்கு பரமபதவாசலை வந்தடைகிறார். அப்போது பரமபதவாசல் திறக்கப்பட்டு, எதிரே எழுந்தருளியிருக்கும் நம்மாழ்வா ருக்கு காட்சி தருகிறார்.
அதன் பின் வேதபாராயணம், நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம் சேவிக்கப்பட்டு உற்சவர் பரமபதவாசலைக் கடந்து திருவாய்மொழி மண்டபத்தில் அமைந்துள்ள புண்ணிய கோடி விமானத்தில் இரவு 9 மணிவரை எழுந்தருளிகிறார். அப்போது உற்சவரை பக்தர்கள் காண பொது மற்றும் சிறப்பு தரிசனத் துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பகல் பத்து உற்சவத்தை தொடர்ந்து 11ம் தேதியன்று இரவு முதல் 20ம் தேதி வரை இராபத்து உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை மாலை 6 மணிக்கும், 20ம் தேதி காலை 9 மணிக்கும் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இந்த விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
அதிகாலை 2.30 மணியளவில் மேற்கு கோபுர வாசல் வழியாக மூலவர் மற்றும் மகா மண்டபத்தில் உள்ள உற்சவர் ஸ்ரீபார்த்த சாரதியை தரிசனம் செய்யலாம். இதில், முதல் 1000 பக்தர்கள் இலவசமாக தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். பிறகு 4 மணியளவில் உற்சவர் மகா மண்டபத்திலிருந்து உட்பிரகாரம் வழியாக வலம் வந்து 4.30 மணிக்கு பரமபதவாசலை வந்தடைகிறார். அப்போது பரமபதவாசல் திறக்கப்பட்டு, எதிரே எழுந்தருளியிருக்கும் நம்மாழ்வா ருக்கு காட்சி தருகிறார்.
அதன் பின் வேதபாராயணம், நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம் சேவிக்கப்பட்டு உற்சவர் பரமபதவாசலைக் கடந்து திருவாய்மொழி மண்டபத்தில் அமைந்துள்ள புண்ணிய கோடி விமானத்தில் இரவு 9 மணிவரை எழுந்தருளிகிறார். அப்போது உற்சவரை பக்தர்கள் காண பொது மற்றும் சிறப்பு தரிசனத் துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பகல் பத்து உற்சவத்தை தொடர்ந்து 11ம் தேதியன்று இரவு முதல் 20ம் தேதி வரை இராபத்து உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை மாலை 6 மணிக்கும், 20ம் தேதி காலை 9 மணிக்கும் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இந்த விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா
» 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி : ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகள் ரத்து
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு
» வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கத்தில் துவக்கம்
» சித்திரை ஆட்டத்திருநாள் : சபரிமலை கோயிலில் 11ம் தேதி நடை திறப்பு
» 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி : ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகள் ரத்து
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு
» வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கத்தில் துவக்கம்
» சித்திரை ஆட்டத்திருநாள் : சபரிமலை கோயிலில் 11ம் தேதி நடை திறப்பு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya