Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


பணிபுரிவோர் நலம் காக்கும் பைரவர்

Go down

பணிபுரிவோர் நலம் காக்கும் பைரவர் Empty பணிபுரிவோர் நலம் காக்கும் பைரவர்

Post by oviya Thu Dec 11, 2014 2:19 pm

அரசங்குடி

அரசங்குடி ஓர் அழகிய கிராமம். கரிகாலன் கட்டிய கல்லணையைக் கண்டு பிரமித்து ரசித்த பின் தெற்கே அரை கிலோ மீட்டர் தொலைவு சென்றால் இந்த ஊரையும் ரசிக்கலாம். கூடுதல் பக்தி ரசனைக்காக, வெண்ணாற்றின் அருகேயுள்ள இந்த ஊரில் மருதபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றிலும் பச்சைப் பசேலென வயல் வெளிகள். வளைந்து நெளிந்து குறுகலாக செல்லும் தார் சாலைகள். விரல் விட்டு எண்ணக் கூடிய வீடுகள். இந்தச் சூழலில், அமைதியே உருவாக அமைந்துள்ளது அரனார் ஆலயம்.

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. சாலைக்கும் கோயில் நுழைவாயிலுக்கும் இடையே நந்தி பகவான் அருள்பாலிக்கிறார். மழையோ, வெயிலோ எல்லாவற்றையும் நானே தாங்கிக் கொள்கிறேன் என்று கூறாமல் கூறி, திறந்த வெளியில் மேற்கூரையின்றி அமர்ந்துள்ள£ர் நந்தியார். கோயிலின் நுழைவாயிலைக் கடந்ததும் எதிரே பலிபீடமும் நந்தியும் இருக்க அடுத்து மகா மண்டபம் உள்ளது. மகாமண்டபத் தின் வலதுபுறம் இறைவி கருணாம்பிகை, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் ஞான சக்தியின் திருமேனிகளும் உள்ளன. அடுத்ததாக கருவறையில் இறைவன் மருதபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியில் பேரருள் புரிகிறார். காலத்தின் தொன்மையை லிங்கத்தை தரிசிக்கும்போது உணர முடிகிறது. பழமையின் வாசமும், ஈசனின் அருளும் நெஞ்சை நிம்மதியாக்குகின்றன. கருவறை கோஷ்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடபுறம் துர்க்கையும், மேற்குப் பிராகாரத்தில் சித்தி விநாயகரும் சுப்ரமணியர்-வள்ளி-தெய்வானையும் தனித்தனி சந்நதிகளில் அருள் பாலிக்கின்றனர்.

வடக்கில் சண்டிகேஸ்வரர் சந்நதி. கிழக்குப் பிராகாரத்தில் ஹரிஹரி புத்ரர், பைரவர் திருமேனிகள் உள்ளன. வடகிழக்குப் பகுதியில் நவகிரக நாயகர்கள் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கின்றனர். ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் வெண்ணாறு. 1-1-1975ல் குடமுழுக்குத் திருவிழா கண்ட இந்த ஆலயம் மீண்டும் கும்பாபிஷேகம் காண, திருப்பணி வேலைகள் ஆரம்பிக்க இருப்பதாகக் கூறுகின்றனர். இந்த ஆலயத்தில் உற்சவ மூர்த்திகள் இல்லை. எனவே, இறைவனும் இறைவியும் வீதியுலா வருவது கிடையாது.

இங்கு அருள்பாலிக்கும் துர்க்கைக்கு நடைபெறும் வெள்ளிக்கிழமை ராகு கால பூஜையில் நிறைய பெண்கள் கலந்து கொள்கின்றனர். திருமணத் தடையை இத்தலத்திலு ள்ள துர்க்கை நீக்குவதாக ஐதீகம் நிலவுகிறது. புதிய வேலை கிடைக்கவும், இருக்கும் வேலையில் மென்மேலும் முன்னேறவும் இங்குள்ள பைரவரிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் பைரவருக்கு வடை மாலை சாற்றி தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum