நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் கல்கருட சேவை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் கல்கருட சேவை
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருவிடைமருதூர் : நாச்சியார்கோயில் சீனிவாசபெருமாள் கோயிலில் கல்கருட சேவை நேற்று இரவு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த நாச்சியார்கோயிலில் சீனிவாசபெருமாள் கோயில் உள் ளது. புகழ்பெற்ற வைணவ 108 ஸ்தலங்களில் 20வது ஸ்தலமாக போற்றப்படும் இக்கோயிலில் சோழநாட்டு திருப்பதிகள் 40ல் 14வது கோயிலாக விளங்குகிறது. இந்த கோயிலில் ஆண்டுக்கு 2 முறை தமிழ்மாதமான மார்கழி மற்றும் பங்குனியில் நடைபெறும் கல்கருட சேவை பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் முக்கோடி தெப்ப திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும்.
அதுபோல் 10 நாட்கள் நடைபெறும் விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து விழா நாட்களில் பல்லக்கு, யாளி, கிளி, சேஷ, வெள்ளியானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் மற்றும் தாயார் எழுந்தருளி வீதியுலா புறப்பாடு நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான கல்கருட சேவை நேற்று இரவு நடந்தது. மூலவராகவும், உற்சவராகவும் அமைந்துள்ள கல்கருட பகவான் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி 4, 8, என 64 பேர் வரை படிப்படியாக உயர்ந்து தூக்கி மூலவர் சன்னதியில் இருந்து வாகனம் மண்டபத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.
திருவிடைமருதூர் ஒன்றியக்குழு தலைவர் அசோக்குமார், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலமுருகன், கும்பகோணம் அதிமுக நகர செயலாளர் ராமநாதன், மாவட்ட கவுன்சிலர் சூரியமூர்த்தி, ஊராட்சி தலைவர்கள் நாச்சியார்கோவில் கண்ணன், திருநரையூர் சத்யா பாண்டியராஜன், திருச்சேரை வெண்ணிலா மணிவண்ணன், நாலூர் பிரியதர்ஷினி இளந்திரையன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கா னோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வரும் 11ம் தேதி நடக்கிறது. 12ம் தேதி மாலை 6 மணிக்கு பெருமாள் மற்றும் தாயார் மின் ஒளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப திருவிழா நடக்கிறது. விழா ஏற்படுகளை தக்கார் ராதாகிருஷ்ணன், நிர்வாக அதிகாரி பொன்னழகு மற்றும் ஆலய பணியாளர்கள், பட்டாச்சாரியர்கள் செய்து வருகின்றனர்.
திருவிடைமருதூர் : நாச்சியார்கோயில் சீனிவாசபெருமாள் கோயிலில் கல்கருட சேவை நேற்று இரவு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த நாச்சியார்கோயிலில் சீனிவாசபெருமாள் கோயில் உள் ளது. புகழ்பெற்ற வைணவ 108 ஸ்தலங்களில் 20வது ஸ்தலமாக போற்றப்படும் இக்கோயிலில் சோழநாட்டு திருப்பதிகள் 40ல் 14வது கோயிலாக விளங்குகிறது. இந்த கோயிலில் ஆண்டுக்கு 2 முறை தமிழ்மாதமான மார்கழி மற்றும் பங்குனியில் நடைபெறும் கல்கருட சேவை பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் முக்கோடி தெப்ப திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும்.
அதுபோல் 10 நாட்கள் நடைபெறும் விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து விழா நாட்களில் பல்லக்கு, யாளி, கிளி, சேஷ, வெள்ளியானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் மற்றும் தாயார் எழுந்தருளி வீதியுலா புறப்பாடு நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான கல்கருட சேவை நேற்று இரவு நடந்தது. மூலவராகவும், உற்சவராகவும் அமைந்துள்ள கல்கருட பகவான் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி 4, 8, என 64 பேர் வரை படிப்படியாக உயர்ந்து தூக்கி மூலவர் சன்னதியில் இருந்து வாகனம் மண்டபத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.
திருவிடைமருதூர் ஒன்றியக்குழு தலைவர் அசோக்குமார், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலமுருகன், கும்பகோணம் அதிமுக நகர செயலாளர் ராமநாதன், மாவட்ட கவுன்சிலர் சூரியமூர்த்தி, ஊராட்சி தலைவர்கள் நாச்சியார்கோவில் கண்ணன், திருநரையூர் சத்யா பாண்டியராஜன், திருச்சேரை வெண்ணிலா மணிவண்ணன், நாலூர் பிரியதர்ஷினி இளந்திரையன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கா னோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வரும் 11ம் தேதி நடக்கிறது. 12ம் தேதி மாலை 6 மணிக்கு பெருமாள் மற்றும் தாயார் மின் ஒளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப திருவிழா நடக்கிறது. விழா ஏற்படுகளை தக்கார் ராதாகிருஷ்ணன், நிர்வாக அதிகாரி பொன்னழகு மற்றும் ஆலய பணியாளர்கள், பட்டாச்சாரியர்கள் செய்து வருகின்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேரோட்டம்
» நாதன்கோயில் ஜெகந்நாத பெருமாள் கோயிலில் சுக்லபட்ச மகாஅஷ்டமி ஹோமம்
» திருமணத்தடை போக்கும் புஷ்பாஞ்சலி சேவை
» அபிராமேஸ்வரர் ஆலயத்தில் அந்தகர் சேவை!
» திருப்பதியில் நாளை கருட சேவை
» நாதன்கோயில் ஜெகந்நாத பெருமாள் கோயிலில் சுக்லபட்ச மகாஅஷ்டமி ஹோமம்
» திருமணத்தடை போக்கும் புஷ்பாஞ்சலி சேவை
» அபிராமேஸ்வரர் ஆலயத்தில் அந்தகர் சேவை!
» திருப்பதியில் நாளை கருட சேவை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya