Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


தமிழ் மக்களின் ஆதரவை தேடும் சிங்கள பேரினவாதம்!!

Go down

தமிழ் மக்களின் ஆதரவை தேடும் சிங்கள பேரினவாதம்!! Empty தமிழ் மக்களின் ஆதரவை தேடும் சிங்கள பேரினவாதம்!!

Post by oviya Mon Dec 01, 2014 1:09 pm

இன்று இலங்கை அரசாங்கத்தையும் எதிர் அணியையும் சற்று சிந்திக்க வைக்க கூடிய அளவுக்கு தமிழர்களின் வாக்கு பலம் ஒரு பாரிய சக்தியாக மாறியுள்ளதை அனைவரும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
ஆனால் இதில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் இனத்துக்கு எந்தவிதமான தீர்வும் கிடைக்கப் போவதில்லை என்ற உண்மையும் இன்றைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்து தெளிவாக விளங்குகின்றது.

இவற்றுக்கு மேலாக இலங்கையில் நடக்கும் குடும்ப ஆட்சிக்கு ஒரு முற்று புள்ளி வைப்பதே இந்த பிளவுகளுக்கு முக்கிய காரணாக அமைகின்றதே தவிர வேறு ஒரு முக்கிய விடயங்களும் இதில் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இன்று தமிழர்களின் ஒற்றுமை ஒரு பாரிய கேள்வி குறியாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது .

தனித் தனியாக கருத்துக்களை தெரிவிக்கும் போது எதோ ஒரு கெட்ட காலம் வருவதற்கான அறிகுறிகளே கூடுதலாக காணப்படுகின்றது .

அது போன்று இன்று அரசாங்கமும் பாரிய பண வலையை வீசிக்கொண்டு இருக்கும் வேளையில் இவர்களின் இந்த ஒற்றுமை அற்ற தன்மையானது சிங்கள பேரினவாதத்துக்கு மேலும் வழி கோலக் கூடும்.

இந்த நேரத்தில் தமிழர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். நடக்கின்ற இந்த ஆட்டத்தில் வெறும் பார்வையாளர்களாகவே மட்டும் இருக்க வேண்டும்.

இந்த ஆட்டம் எமக்கு நடந்த கொடுமைகளுக்கு கடவுள் கொடுத்த ஆட்டமே. இதை நாம் மிகவும் சிறந்த முறையில் அமைதி காப்பவர்களாக இருக்க வேண்டும் .

வீண் வெற்று பேச்சு கருத்துகளால் எமது எதிர்காலமே பாதிக்க கூடிய வாய்ப்புகள் வரக் கூடும்.

அது போன்று ரணில் போன்ற ஒரு அரசியல் தலைவர் கடந்த காலங்களில் எமது தமிழர்களுக்கு செய்த துரோகம் நினைவில் இருக்க வேண்டும்.

அன்றைய அந்த பிளவின் விளைவை நாம் யாவரும் அறிந்துள்ளோம். அது அவரின் திறமை என்று கூட சொல்ல முடியும்.

போராட்டத்தில் எவ்வாறு ஒரு பிளவை ஏற்படுத்தி இன்று எம் இனம் சிதைவடைவதற்கு காரணமக இருந்தாரோ அது போன்று இன்று அரசாங்கத்துக்கு வைத்த ஆப்பு அரசாங்கத்துக்குள்ளே இருந்து ஒரு பொது வேட்பாளர்.

இதை எமது தலைமைகள் சற்று சிந்திக்க வேண்டும். இது போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்த ரணில் போன்றவர்கள் ஆட்டத்தை தொடங்க கூடும்.

எம் இனம் இனி மேலும் ஏமாறக் கூடது. இன்று அரசியல்வாதிகளை விட மக்கள் சற்று சிந்திக்க வேண்டிய காலம் இது.

பணத்துக்கும் பதவிக்கும் அலையும் அரசியல்வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம்.

எவன் வந்தாலும் எமக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. எமது விடிவுக்காக எம் மக்கள் பலம் வாக்கு பலத்தை சிந்தித்து செயல் பட வேண்டும் .

எமது வாக்கு பலம் யார் அரசமைப்பது என்று சொல்ல வைக்க வேண்டுமானால் எழுத்து மூலம் எமக்கான தீர்வினை தரக் கூடிய ஒருவருக்கு செல்வதே சிறந்து.

கடந்த கால அரசியல்வாதிகளால் இது வரைக்கும் தீர்வினை தர முடியாதவர்கள் இனியும் தருவார்கள் என்று நம்பினால் அது முட்டாள் தனமானது.

இன்று ஒரு தேரர் தமிழர்களுக்கு தீர்வினை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் கடந்த காலங்களில் அரசாங்கத்துக்குள் இருக்கும் போது வராத இந்த ஒரு அக்கறை இப்போது அவருக்கு வந்துள்ளது .

இதில் ஒன்று தெளிவாக விளங்குகின்றது இன்று ஆட்சி அமைக்க வேண்டுமானால் தமிழர்களின் வாக்கு மிக முக்கியம் என்பதை சிங்கள பேரினவாதம் புரிந்துள்ளது.

இவற்றுக்கு சோரம் போகும் சில தமிழ் அரசியல்வாதிகள் இதுவரைக்கும் செய்த துரோகங்களுக்கு நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதை சிறந்த முறையில் கையாள வேண்டும்.

எது எவ்வரானாலும் தமிழன் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்பதை சிங்கள பேரினவாதத்துக்கு எடுத்து சொல் தமிழா!

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» சுய சிந்தனை தலைமைகளை தேடும் தமிழ் மக்கள்!!
» தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து நியாயமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்! சோபித தேரர்
» இன­வாத பிர­சா­ரத்தின் மூலம் அர­சியல் இலாபம் தேடும் முயற்சி
» எவரும் மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை: முன்னிலை சோசலிச கட்சி
» எமது மக்களின் அழிவுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் டக்ளஸ் - சிறீதரன் வாக்குவாதம்! வெளியேறிய விக்னேஸ்வரன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum