Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


பங்குனியில் பரமனை பூஜிக்கும் பகலவன்

Go down

பங்குனியில் பரமனை பூஜிக்கும் பகலவன் Empty பங்குனியில் பரமனை பூஜிக்கும் பகலவன்

Post by oviya Fri Dec 12, 2014 1:17 pm

பங்குனி மாதத்தில் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் ஈசனை பல தலங்களில் வழிபட்டு பேறு பெறுகிறான். அவற்றில் ஒன்று, திருப்பரிதிநியமம்; தஞ்சைக்கு அருகில் உள்ளது. இங்கு கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஈசன், பரிதியப்பர். இறைவி, மங்களாம்பிகை. இந்த இறைவனை ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 17, 18, 19 (மார்ச் 31, ஏப்ரல் 1, 2) ஆகிய தேதிகளில் காலை சூரிய உதயத்தின்போது சூரியனின் ஒளிக்கதிர்கள், பரிதியப்பரின் மீது படரும் திருக்கோலத்தை தரிசிக்கலாம். சுமார் முப்பது நிமிடங்கள் சூரியன், இத்தல இறைவனை வழிபடுவதால் இதனை சூரிய பூஜை என்று போற்றுவர்.

சேலம் மாவட்டம் தாராமங்கலம் கயிலாயநாதர் திருக்கோயில் மேற்கு திசை நோக்கி அமைந்திருப்பதால் சூரியன் மாலை ஐந்து மணி அளவில் பங்குனி மாதம் 9, 10, 11 தேதிகளில் (மார்ச் 23, 24, 25) நந்தியம்பெருமானின் இரண்டு கொம்புகளின் ஊடாகத் தன் பொன்னிறக் கதிர்களை வீசி வழிபடுவது ஓர் அற்புதக் காட்சியாகும்.

திருவையாறு-கும்பகோணம் வழியில் உள்ளது திங்களூர். இங்கு, இறைவன் கைலாசநாதர்; இறைவி பெரியநாயகி. இங்கு ஆண்டு தோறும் பங்குனி உத்திர தினத்தன்று (மார்ச் 16) காலை ஆறு மணி அளவில் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் ஈசனை வழிபடுகிறான். அன்று காலை சூரிய பூஜையும், மறுதினம் பவுர்ணமி பிரதமையில் மாலை 6.30மணி அளவில் சந்திரன் தன் ஒளிக்கலைகளை சிவலிங்கத்தில் பரப்பி வழிபாடு செய்வதைத் தரிசிக்கலாம். சூரிய பூஜையையும் சந்திர பூஜையையும் தரிசிக்க வாழ்வில் துன்பமின்றி சுகமுடன் வாழலாம் என்பது ஐதீகம்.

புதுச்சேரி மாநிலத்தில் பெரிய கோயில் என்று போற்றப்படும் வில்லியனூர் காமீஸ்வரர் திருக்கோயில் ஏழு நிலை ராஜகோபுரம் கொண்டது. இத்தல ஈசன் திருக்காமீஸ்வரர், அம்பிகை கோகிலாம்பிகை. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் 9, 10, 11 தேதிகளில் (மார்ச் 23, 24, 25) காலையில் சூரியன் தன் ஒளிக்கதிர்களை படரவிட்டு வழிபடுகிறான்.

சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரர் திருக்கோயிலில் அருள்புரியும் திருவட்டீஸ் வரரை பங்குனி முதல் வாரத்தில் சூரிய ஒளி, மூலவர் லிங்கத் திருமேனியில் படர்ந்து ஒளிர்கின்றது. இத்திருக்காட்சியைத் தரிசித்தால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum