Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


செல்வ வளமருளும் சேர்த்தித் திருவிழா

Go down

செல்வ வளமருளும் சேர்த்தித் திருவிழா Empty செல்வ வளமருளும் சேர்த்தித் திருவிழா

Post by oviya Fri Dec 12, 2014 1:18 pm

தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற பங்குனி உத்திரத் திருநாளன்று ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும், விழாக்களும் நடைபெறுவதைக் காண்கிறோம். அந்த வகையில் சேலம் பகுதியில் நாமகிரி என்று போற்றப்படும் நாமக்கல் திருத்தலத்தில் அருள்புரியும் ஆஞ்சநேயர் திருக்கோயிலிலும், மலைமேல் அமைந்துள்ள நரசிம்மர் திருக்கோயிலிலும் பங்குனி உத்திரத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலத்தில் பங்குனியில் 15 நாட்கள் விழா நடைபெறுகிறது. ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்கு எதிரே மலை மீது நரசிம்மர் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார்.

அதேபோல் லட்சுமியான நாமகிரித் தாயாருக்கும் தனிச் சந்நதி உள்ளது. இங்கு நடைபெறும் விழாவின்போது ஆஞ்சநேயர் காதில் தாமரை மலர்களை வைத்து அலங்காரம் செய்வர். விழா முடியும்வரை அனுமனின் காதில் வைத்த மலர்கள் வாடாமல் காட்சி தரும் அற்புதத்தைக் கண்டு மகிழலாம். 18 அடி உயரமுள்ள இந்த அனுமன் கையில் ஜபமாலையும், இடுப்பில் கத்தியும் பூண்டு, நின்ற திருக்கோலத்தில் கை கூப்பி தரிசனமளிக்கிறார். இவரது சந்நதியின் மேல் விதானம் மூடப்படாமல் திறந்தே இருக்கிறது. இவர் வளர்ந்து கொண்டேயிருப்பதாக ஐதீகம்.

ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் பங்குனி உத்திர தினத்தன்று சேர்த்தித் திருவிழா எப்படி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறதோ, அதேபோல் நாமக்கல்லிலும் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திர தினத்தன்று மலைமேல் அமைந்துள்ள குடைவரைக் கோயிலில் அருள் புரியும் நரசிம்மர் உற்சவ மூர்த்தி, தாயார் சந்நதிக்கு எழுந்தருள்வார். அப்போது, விசேஷ, அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதன் பின், முன் மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி திருக்கல்யாணத் திருக்கோலத்துடன் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார்.

அன்று ஒருநாள் மட்டும் நரசிம்மர்-தாயார் இருவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும். இத்திருக்காட்சியை தம்பதி சமேதராக தரிசித்தால் வாழ்வில் என்றும் வசந்தம் வீசும் என்பது ஐதீகம். இந்தப் பங்குனி மாதத்தில் இரண்டு உத்திர நட்சத்திர தினங்கள் வருகின்றன- 17.3.2014 மற்றும் 13.4.2014. சிலர் முதல் உத்திர தினத்தையும், வேறு சிலர் இரண்டாவது உத்திர தினத்தையும் அனுசரிக்கிறார்கள். நாமக்கல் கோயிலைப் பொறுத்தவரை 17.3.2014 அன்றுதான் சேர்த்தித் திருவிழா கொண்டாடப்படுகிறது என்று தகவல் தெரிவித் திருக்கிறார்கள்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum