Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


மட்டக்களப்பு சிறைச்சாலையில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு (மட்டு செய்திகள்)

Go down

மட்டக்களப்பு சிறைச்சாலையில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு (மட்டு செய்திகள்) Empty மட்டக்களப்பு சிறைச்சாலையில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு (மட்டு செய்திகள்)

Post by oviya Mon Dec 01, 2014 1:24 pm

எயிட்ஸ் தொடர்பான ஊர்வலமும் விழிப்புணர்வு கருத்தரங்கும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் நலன்புரி அமைப்பினால் இந்த நிகழ்வு இன்று காலை நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சர் எச்.வி.எச்.பிரியங்கர,சிறைச்சாலையின் பிரதான அதிகாரி ஆர்.மோகன்ராஜா,நலன்புரி உத்தியோகத்தர்களான வி.சுசிகரன்,எம்.ஐ.சபீனா,எல்.ஜே.சுதாகரன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஜே.ஜெயப்பிரியா,பிரதிபா கோன்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கைதிகள் ஊர்வலமாக சென்று மீண்டும் சிறைச்சாலையினை வந்தடைந்தனர்.







மட்டு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார பிரிவினரால் உணவு விடுதிகள், சந்தைப்பகுதிகள்,வெதுப்பகங்களில் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் மனித பாவனைக்குதவாத பெருமளவு பொருட்களும் மீட்க்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கொக்குவில் பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இந்த திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கொக்குவில் பொது சுகாதார பரிசோதகர் இராஜ ரவிவர்மன் தலைமையில் வெட்டுக்காடு பொது சுகாதார பரிசோதகர் அமுதமாலன்,கல்லடி பொது சுகாதார பரிசோதகர் ஜெய்சங்கர்,வலையிறவு பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் வா.ரமேஸ்குமார் ஆகியோர் கொண்டு பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினர் இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது கொக்குவில் பகுதியில் உள்ள வாராந்த சந்தை மற்றும் வெதுப்பகம்,உணவு விடுதிகள்,வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

வாராந்த சந்தைப்பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்குதவாத சுமார் 400 கிலோவுக்கும் அதிகமான வெங்காயங்கள் மற்றும் உருளைக்கிழங்குகள்,அழுகிய மரக்கறிகள்,அயடின் கலக்கப்படாத சுமார் 300 கிலோவுக்கும் அதிகமான உப்பு பக்கட்டுகள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் உணவகங்கள் சில சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கும் வகையில் இருந்ததுடன் அங்கிருந்து மனித பாவனைக்குதவாத உணவுப்பொருட்களும் மீட்கப்பட்டன.

இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கை காரணமாக பெருமளவு பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் பத்துக்கும் மேற்பட்டோர் மீது சட்ட நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் கொக்குவில் பொது சுகாதார பரிசோதகர் இராஜ ரவிவர்மன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியின் பணிப்புரையின் கீழ் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.









oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மனோ கணேசன்- சுமந்திரன்- விக்கிரமபாகு ஆகியோர் கலந்துகொள்ளும் நெல்சன் மண்டேலா நிகழ்வு
» புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மட்டு மாணவர்களுக்கு லங்காசிறி இணையத்தளத்தின் கல்விச் சமர் மூலம் உதவிகள்
» தேர்தல் வன்முறைகள் தொடர்பான பொறுப்பினை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏற்க வேண்டும்!- பொலிஸ் மா அதிபர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum