Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


சூரசம்ஹார தின பூஜைகள்

Go down

சூரசம்ஹார தின பூஜைகள் Empty சூரசம்ஹார தின பூஜைகள்

Post by oviya Mon Dec 01, 2014 2:00 pm

திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்ச்சி கடந்த 24-ந்தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. அன்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோவில் உள்ளேயும், வெளிப் பிரகாரங்களிலும் தற்காலிக மற்றும் நிரந்தர மண்டபங்களிலும், கோவில் மற்றும் தனியார் விடுதிகளிலும் கடுமையான விரதம் மேற்கொண்டுள்ளார்கள்.

இந்தியா மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, லண்டன், அமெரிக்கா, ஐப்பான் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விரதம் இருக்கிறார்கள். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 1.30க்கு விஸ்வரூப தீபாராதனையும், அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது..

பகல் 11.30 மணிக்கு உச்சிக்காலை தீபாராதனை நடைபெறும். அதனை தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு தீபாராதனை நடத்தப்படும். சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி, தெய்வாணையுடன் தங்க சப்பறத்தில் மேள தாளங்கள் முழங்க பக்தர்களின் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்கள் பாட சண்முகஉலாச மண்டபம் எழுந்தருழ்வார்.

அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதனை தொடர்ந்து திருவாவடுதுறை ஆதினம் கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மாலை 4.40 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் பக்தர்கள் புடை சூழ கடற்கரையில் சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டு வருவார்.

முதலில் சாரகசூரன் யானை முகத்துடன் முருகப்பெருமானிடம் சண்டையிடும் காட்சி நடைபெறும். அதனை தொடர்ந்து சிங்கமுகாசூரன் வதம் நடைபெறும். அதனையடுத்து ஆணவமே உருவான சூரபத்மன் முருகப்பெருமானிடம் சண்டையிடும் காட்சி நடைபெறும்.

சூரனை வதம் செய்யும் பொழுது கடற்கரையில் திரளும் லட்சக்கணக்கான மக்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்கள் எழுப்புவார்கள். மாயமான சூரபத்மன் சேவல் உருக்கொண்டு முருகனிடம் போரிட வருவான். சூரபத்மனின் மாயத்தோற்றத்தில் வந்த சேவலை முருகபெருமான் தனது கொடியாக மாற்றிக் கொள்வார்.

இந்த நிகழ்வு நடைபெற்ற போது வானத்தில் கருடன் மூன்று முறை வலம் வரும். சூரசம்ஹாரம் முடிந்தபின் சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் உள்ள சந்தோஷமண்டபத்தில் எழுந்தருழ்வார். அங்கு சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

பின்னர் ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து திருக்கோவில் உள்ளே உள்ள 108 மகாதேவ சன்னதி அடைவார். அங்கு சுவாமிக்கு எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும் அந்த கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்திற்கு யாகசாலையில் 6 நாளும் பூஜை செய்யப்பட்ட கும்பங்களில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்படும். அதனை தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் தங்கள் விரதத்தை முறைப்படி பூர்த்தி செய்வார்கள்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum