திருவிடைமருதூர் மீனாட்சி–சொக்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் 30–ந்தேதி நடக்கிறது
Page 1 of 1
திருவிடைமருதூர் மீனாட்சி–சொக்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் 30–ந்தேதி நடக்கிறது
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் பழமையான மீனாட்சி– சொக்கநாதர், அஷ்ட தசபுஜாமகாலட்சுமி துர்க்கை கோவில் உள்ளது.
இக்கோவில் மதுரையை ஆண்ட மன்னர் வரகுண பாண்டியன் கட்டியது ஆகும். அவர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க திருவிடைமருதூரில் தங்கி மகாலிங்கேஸ்வரரை வழிபட்டு வந்தார். அவர் தினமும் மீனாட்சி – சொக்கநாதரை வழிபட்டு தனது கடமையை செய்யும் வழக்கம் உடையவர்.
எனவே அவர் மகாலிங்க சுவாமி கோவிலில் வடபுறம் மதுரை சொக்கநாதர் – மீனாட்சிக்கு தனிக்கோவிலை கட்டி வழிபட்டு வந்தார். இதில் அவரது தோஷம் விலகியது.
இக்கோவிலில் தற்போது திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று (27–ந்தேதி) தொடங்கியது. விழாவையொட்டி இன்று காலை கோபூஜை, கஜபூஜை, கணபதி ஹோமம்நவக்கிரக ஹோமம், தனபூஜை, மகாலட்சுமி பூஜை நடை பெற்றது.
நாளை (28–ந்தேதி) காலை 8 மணிக்கு சாந்தி ஹோமம், அஸ்திரஹோமம், மகா பூர்ணாஹீதி தீபாராதனை, முதல் கால பூஜை,திருமுறை பாராயணம் ஆகியவை நடக்கிறது.
29–ந்தேதி 2–ம் கால யாக பூஜை, வேதபாராயணம், 3–ம் காலயாக பூஜை ஆகியவை நடக்கிறது.
வருகிற 30–ந்தேதி 4–ம் காலயாக பூஜை, நாடி சந்தானம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து காலை 8.45 மணிக்கு விமான கும்பாபிஷேகம் 9 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகம், மாலை 5 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணி மீனாட்சி திருக்கல்யாணம், 9 மணிக்கு சுவாமி வீதி உலா ஆகியவை நடக்கிறது. யாக சாலை பூஜைகள் சந்திரசேகர சிவாச்சாரியார் தலைமையில் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜெ.பரணீதரன், கும்பாபிஷேகக்குழு மீனாட்சி வெ.சிவகார்த்திகேயன் ஆகியோர் செய்து உள்ளனர்.
இக்கோவில் மதுரையை ஆண்ட மன்னர் வரகுண பாண்டியன் கட்டியது ஆகும். அவர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க திருவிடைமருதூரில் தங்கி மகாலிங்கேஸ்வரரை வழிபட்டு வந்தார். அவர் தினமும் மீனாட்சி – சொக்கநாதரை வழிபட்டு தனது கடமையை செய்யும் வழக்கம் உடையவர்.
எனவே அவர் மகாலிங்க சுவாமி கோவிலில் வடபுறம் மதுரை சொக்கநாதர் – மீனாட்சிக்கு தனிக்கோவிலை கட்டி வழிபட்டு வந்தார். இதில் அவரது தோஷம் விலகியது.
இக்கோவிலில் தற்போது திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று (27–ந்தேதி) தொடங்கியது. விழாவையொட்டி இன்று காலை கோபூஜை, கஜபூஜை, கணபதி ஹோமம்நவக்கிரக ஹோமம், தனபூஜை, மகாலட்சுமி பூஜை நடை பெற்றது.
நாளை (28–ந்தேதி) காலை 8 மணிக்கு சாந்தி ஹோமம், அஸ்திரஹோமம், மகா பூர்ணாஹீதி தீபாராதனை, முதல் கால பூஜை,திருமுறை பாராயணம் ஆகியவை நடக்கிறது.
29–ந்தேதி 2–ம் கால யாக பூஜை, வேதபாராயணம், 3–ம் காலயாக பூஜை ஆகியவை நடக்கிறது.
வருகிற 30–ந்தேதி 4–ம் காலயாக பூஜை, நாடி சந்தானம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து காலை 8.45 மணிக்கு விமான கும்பாபிஷேகம் 9 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகம், மாலை 5 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணி மீனாட்சி திருக்கல்யாணம், 9 மணிக்கு சுவாமி வீதி உலா ஆகியவை நடக்கிறது. யாக சாலை பூஜைகள் சந்திரசேகர சிவாச்சாரியார் தலைமையில் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜெ.பரணீதரன், கும்பாபிஷேகக்குழு மீனாட்சி வெ.சிவகார்த்திகேயன் ஆகியோர் செய்து உள்ளனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya