Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமியின் அற்புதங்கள்

Go down

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமியின் அற்புதங்கள் Empty சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமியின் அற்புதங்கள்

Post by oviya Mon Dec 01, 2014 2:15 pm

மானாமதுரை கட்டிக்குளம் கிராமத்தில் குப்பமுத்து வேளார்–கூத்தாயி அம்மாளுக்கு மகனாக பிறந்தவர் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள். 1858–ம் ஆண்டு அவதரித்த அவர் காசி முதல் கன்னியாகுமரி மற்றும் ராமேசுவரம் வரையுள்ள திருத்தலங்களுக்கெல்லாம் சென்று திருவருள் பெற்று அற்புதங்களை நிகழ்த்தி காட்டினார்.

ஒரு முறை தென்பகுதியில் உள்ள திருத்தலங்களுக்கு தரிசிக்க சென்றபோது அப்போதைய ராமநாதபுரம் மன்னர் சேதுபதி சுவாமிகளை வரவேற்றார். மன்னருக்கு சுவாமிகள் ஆசி வழங்கினார். பின்னர் கட்டிகுளத்திற்கு மேற்கே உள்ள கருப்பனேந்தலில் தியானத்திருமடம் ஒன்றை சுவாமி உருவாக்கினார்.

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமியை மனமுருகி வணங்கும் பக்தர்களுக்கு நிலையான இன்பத்தை கொடுப்பார். அதே நேரத்தில் பொருள் ஆசையுடன் வணங்க சென்றால் தன் கையில் இருக்கும் சிறிய குச்சியால் வணங்க செல்பவர்கள் மீது வைப்பார். அப்போது உடலில் குச்சிப்பட்ட இடம் சுடும். இதனால் வலியால் அலறுவர். அப்போது, ‘‘அப்பு மனசில் இருக்கிற ஆசை அழுக்கை சுட்டு பொசுக்கணும் அப்பு....’’ என்று சொல்வார்.

இதேபோல பல அற்புதங்களை செய்து காட்டினார். குறிப்பாக மதுரை வடக்கு மாசிவீதியை சேர்ந்த இருளப்ப கோனாரின் ஆயுளை அதிகரித்தது, திருப்பாச்சேத்தி அருகில் உள்ள மார்நாடு கிராமத்தில் மண்ணுக்குள் புதைந்திருந்த சிவன், அம்மன் கோவிலை அவ்வூர் மக்களுக்கு தெரிவித்து பின்னர் கோவிலை கண்டுபிடித்து பூஜை செய்யப்பட்டது. இன்றவும் இக்கோவிலுக்கு பூஜைகள் நடந்து வருகிறது.

ஒரு முறை மதுரையில் இருந்து மானாமதுரைக்கு ரெயிலில் சென்றார். டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் எடுக்கும்படி மிரட்டினார். அப்போது ரெயிலில் பயணித்தவர்கள், அவர் மகான் விட்டு விடுங்கள் என்று சொல்லியும் அதிகாரி கேட்கவில்லை. இதனால் ரெயிலை இடையிலேயே ஓடவிடாமல் நிறுத்தி தனது அற்புதத்தை நிகழ்த்தி காட்டினார். இதை அறிந்து சுவாமியிடம் அதிகாரி மன்னிப்பு கேட்டதும், ரெயில் இயங்க தொடங்கியது. இதே போல் குன்றக்குடியில் தேரில் இருந்த அவரை கீழே இறங்கும்படி கூறியதால் தேரை ஓடவிடாமல் நிறுத்தினார். பின்னர் ஓட வைத்தார். பாம்பு கடியால் உயிருக்கு போராடிய ஒருவருக்கு தான் வைத்திருந்த விபூதியை கொடுத்து குணமாக்கினார்.

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மாயமாய் மறையக் கூடிய தன்மை பெற்றவர். மேலும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் வணங்கினால் குழந்தை பேறும், நோயாளிகளை உடல் நலம் பெற வைத்தும், தண்ணீரில் விளக்கெறிய வைத்தும், தண்ணீரில் நடந்தும் காட்டி தன் மகிமையை வெளிபடுத்தினார்.

இப்படி பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டிய மகான் கட்டிகுளத்திலே ஜீவ சமாதியானார்.

அவ்வூரில் உள்ள திருகூடல் மலையிலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஜீவசமாதி அடைந்த பின்னரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வரும் மகானுக்கு திருவடமலை மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய இடங்களிலும், வெளிநாட்டு பக்தர்களும் குருபூஜை செய்து வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum