Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


ஜனாதிபதி முறையை ஒழிப்பதா இன்று தமிழர்களின் பிரச்சினை: சிவநேசத்துரை சந்திரகாந்தன்

Go down

ஜனாதிபதி முறையை ஒழிப்பதா இன்று தமிழர்களின் பிரச்சினை: சிவநேசத்துரை சந்திரகாந்தன் Empty ஜனாதிபதி முறையை ஒழிப்பதா இன்று தமிழர்களின் பிரச்சினை: சிவநேசத்துரை சந்திரகாந்தன்

Post by oviya Thu Dec 04, 2014 1:32 pm

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறுகின்றனர், மைத்திரிபால சிறிசேன நூறு நாட்களில் ஜனாதிபதி முறைமையை ஒழிப்பார் என்று. ஜனாதிபதி முறையை ஒழிப்பதா இன்று தமிழர்களின் பிரச்சினையாகவுள்ளது என ஜனாதிபதியின் ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கல்குடா கல்வி வலயத்தில் பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலயத்தின் நான்காவது பரிசளிப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் கே.கதிர்காமநாதன் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் புதன்கிழமை இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மைத்திரிபால சிறிசேன தானாக கருத்து சொன்னால் பரவாயில்லை. அவர் சந்திரிக்கா குமாரதுங்கவின் விசுவாசத்திற்காக கூறுகின்றார். தமிழர்களை பொறுத்த வரையிலும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டுமாக இருந்தால் தமிழர்களுடைய தீர்வு திட்டத்திலே ஏதாவது தருவதாகவும் பேசியிருந்தால் பரவாயில்லை.

இன்று பொது வேட்பாளர் என்று கூறும் அணியினருக்கு நாட்டில் மஹிந்தவையும் அவரது குடும்பத்தையும் அழிக்க வேண்டும் என்ற எண்ணமே ஒழிய நாட்டில் தற்போது அமைதி ஏற்பட்டிருக்கிறதே, பாரியளவில் அபிவிருத்தி இடம்பெற்று இருக்கிறதே, நாட்டை ஆச்சரியமிக்க நாடாக ஆசியாவிலேயே மாற்றுகின்ற போது எங்களுடைய பிள்ளைகள் தொழில் வாய்ப்புகளை பெறுவார்கள்.

இது எங்களுடைய தாய் நாடு என்ற எண்ணம் இல்லாமல் எங்கோ இருந்து வருகின்ற வெளிநாட்டு சக்திகளுக்காகத் தான் இந்த நாடு அமைதியாக இருக்க கூடாது, இருக்கின்ற அமைதியையும் குழப்ப வேண்டும் என்று நினைக்கின்ற கட்சிகளை ஒன்றிணைத்து தேர்தலில் வெற்றி பெற்று ரணிலுக்கு பதவியை கொடுத்து விட்டு மைத்திரிபால சென்று விடுவாராம்.

இது நடக்கின்ற கதைகளா? நடக்காத சாத்தியமில்லாத விடயங்களை பேசி மீண்டும் இந்த நாட்டை குழப்புவதற்கு இடமளிக்க முடியாது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியினால் தான் நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம். அதற்காக மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும். இன்று சிறு கிராமங்கள் தோறும் பிள்ளைகள் கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ள அரசாங்கம் என்றால் அது மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தான்.

மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி பாடசாலைகளின் வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து அதிபர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள், 2014ம் ஆண்டில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், அரச உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் உட்பட அனைவருக்கும் மாதாந்த கொடுப்பனவு ஆயிரத்தி ஐநூறு ரூபா வழங்கப்படுகின்றது. இவ்வாறு நல்ல விடயங்கள் இந்த அரசாங்கத்தில் தான் வழங்கப்பட்டிருக்கின்றது.

கடந்த காலங்களில் எமது மாகாணத்தில் அச்சமும் பீதியுடனும் நம்பிக்கையில்லாத வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தோம். ஆனால் அவ்வாறான கலாச்சாரம் மாற்றப்பட்டு நம்பிக்கையாக வாழ்க்கையை வாழக்கூடிய சூழலை மஹிந்த ராஜபக்ஷ உறுவாக்கி தந்தார் அவ்வாறான தலைவருடன் நாம் தொடர்ந்தும் பயணித்தால் எமது இலக்கை நாம் அடைந்து கொள்ள முடியும் என்பது தான் என்னுடைய எதிர்பார்ப்பாகும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் என்பது எமது உறுதியான முடிவு என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்குடா கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார், வாழைச்சேனை கோறளைப்பற்று கோட்டக் கல்வி பணிப்பாளர் நா.குணலிங்கம், கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தம்மிகே நவரத்ன மற்றும் மதப் பெரியார்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.



oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனாதிபதி தேர்தல்! மஹிந்த ராஜபக்சவுக்கான கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டது
» தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து நியாயமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்! சோபித தேரர்
» ரணில் போட்டியிடவில்லையே என்ற கவலையில் ஜனாதிபதி!
» ஜனாதிபதி தேர்தல்!- தூர விலகும் தமிழர்கள்!
» ஜனாதிபதி ஒரு மனிதராக செயற்படவில்லை!- மைத்திரிபால

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum