கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் பால வித்யாரம்பம் நிகழ்ச்சி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் பால வித்யாரம்பம் நிகழ்ச்சி
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கூத்தனூரில் கல்வி கடவுளான சரஸ்வதி அம்மனுக்கு தனி கோவில் உள்ளது. சரஸ்வதி தனி கோவில் கொண்டுள்ள ஒரே இடம் கூத்தனூர் தான். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சாரதா நவராத்திரி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 24–ந் தேதி தொடங்கியது.
விழா நாட்களில் சரஸ்வதி அம்மன் துர்காபரமேஸ்வரி, மகாலட்சுமி, ராஜராஜேஸ்வரி, ஸ்ரீசாகம்பரி, சந்தானலட்சுமி, மீனாட்சி என விதவிதமான அம்மன் அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
9–ம் நாளான நேற்றுமுன் தினம் சரஸ்வதி பூஜை அன்று அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், திரவியம், தேன், பஞ்சாமிர்தத்தால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. அதைதொடர்ந்து திருப்பாத தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சரஸ்வதி அம்மன் பாதத்தை தரிசனம் செய்து, கல்வி அறிவு வளம்பெற வேண்டி வணங்கினர். இதையொட்டி சரஸ்வதி அம்மன் பாதத்துக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
நேற்று விஜயதசமி தினத்தையொட்டி அம்மனுக்கு அபிசேக, ஆராதனைகளும், ருத்ராபிசேகமும் நடந்தன. சிறு குழந்தைகள் தங்கள் கல்வி பயிற்சியை தொடங்க சிறந்த நாள் என்பதால், கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் பாலவித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வெளி மாவட்டங் கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்து, நெல்லில் எழுத பழகி கொடுத்தார்கள். அதைதொடர்ந்து குழந்தைகள் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை இந்து சமய உதவி ஆணையர் சிவராம்குமார், செயல் அலுவலர் ராஜசரவணகுமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
விழா நாட்களில் சரஸ்வதி அம்மன் துர்காபரமேஸ்வரி, மகாலட்சுமி, ராஜராஜேஸ்வரி, ஸ்ரீசாகம்பரி, சந்தானலட்சுமி, மீனாட்சி என விதவிதமான அம்மன் அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
9–ம் நாளான நேற்றுமுன் தினம் சரஸ்வதி பூஜை அன்று அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், திரவியம், தேன், பஞ்சாமிர்தத்தால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. அதைதொடர்ந்து திருப்பாத தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சரஸ்வதி அம்மன் பாதத்தை தரிசனம் செய்து, கல்வி அறிவு வளம்பெற வேண்டி வணங்கினர். இதையொட்டி சரஸ்வதி அம்மன் பாதத்துக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
நேற்று விஜயதசமி தினத்தையொட்டி அம்மனுக்கு அபிசேக, ஆராதனைகளும், ருத்ராபிசேகமும் நடந்தன. சிறு குழந்தைகள் தங்கள் கல்வி பயிற்சியை தொடங்க சிறந்த நாள் என்பதால், கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் பாலவித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வெளி மாவட்டங் கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்து, நெல்லில் எழுத பழகி கொடுத்தார்கள். அதைதொடர்ந்து குழந்தைகள் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை இந்து சமய உதவி ஆணையர் சிவராம்குமார், செயல் அலுவலர் ராஜசரவணகுமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பேசும் அருள் தரும் கூத்தனூர் சரஸ்வதி கோவில்
» திருவரங்குளம் சிவன் கோவிலில் முற்றோதுதல் நிகழ்ச்சி
» ஸ்ரீரங்கம் கோவிலில் திருப்பவித்ர உற்சவம் நிகழ்ச்சி இன்று இரவு நடக்கிறது
» மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 29–ந்தேதி தொடக்கம்
» மீனாட்சி அம்மன்–நன்மை தருவார் கோவிலில் நவராத்திரி திருவிழா
» திருவரங்குளம் சிவன் கோவிலில் முற்றோதுதல் நிகழ்ச்சி
» ஸ்ரீரங்கம் கோவிலில் திருப்பவித்ர உற்சவம் நிகழ்ச்சி இன்று இரவு நடக்கிறது
» மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 29–ந்தேதி தொடக்கம்
» மீனாட்சி அம்மன்–நன்மை தருவார் கோவிலில் நவராத்திரி திருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya