பெளத்த துறவியின் மறுபிறப்பு பேயாக அமையும் அன்றோ!
Page 1 of 1
பெளத்த துறவியின் மறுபிறப்பு பேயாக அமையும் அன்றோ!
இலங்கை நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தென்பகுதியில் தேர்தல் கடும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தென்பகுதிக்கானது போல வடக்கிலும் கிழக்கிலும் பலத்த அமைதி நிலவுகிறது. ஜனாதிபதித் தேர்தல் என்றால் அதனைத் தென்பகுதி மக்களே தீர்மானிக்கின்றனர் என்பதாக இதற்குப் பொருள் கொள்ளலாம்.
அல்லது நீங்கள் நாட்டைப் பிரித்துத் தராவிட்டாலும் நாங்கள் தமிழர் தாயகத்தை மனத்தால் பிரித்தெடுத்து விட்டோம். இதன் காரணமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தேர்தல் சலசலப்பு இல்லாமல் போயிற்று என்றும் பொருள் படுத்தலாம்.
எதுவாயினும் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த - மைத்திரி மோதல் கடுமையானது மட்டுமன்றி கலவரங்களும் நாட்டில் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு என்பதை உணர முடிகிறது. இதனைத் தென்பகுதியில் விறுவிறுப்பாக நடக்கும் தேர்தல் பிரச்சாரம் சான்றுபடுத்தும்.
மகிந்தவை வெல்ல வேண்டும் என்று மைத்திரியும்; மைத்திரியை தோற்கடிக்க வேண்டும் என்று மகிந்தவும் தேர்தலில் பிரச்சாரம் செய்வதாகத் தெரியவில்லை. மாறாக நடக்கப் போகும் தேர்தலில் பழி தீர்க்கும் உணர்வு மேலோங்கியிருப்பதைக் காணமுடிகின்றது.
தேர்தலில் மகிந்த ராஜபக் வெற்றி பெற்றால் மைத்திரிபால சிறிசேனவின் சாதகபலன் பற்றி நாம் சொல்லத் தேவையில்லை. இதேபோல் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால், மகிந்த ராஜபக் குடும்பத்தின் கோசாரபலன் எப்படி அமையும் என்று நீங்களே அறிவீர்கள்.
நிலைமை இதுவாகவிருக்க, மகிந்த ராஜபக்விற்கு எதிராகத் தேர்தல் பிரச்சாரம் செய்த ராமன்ய பீடத்தைச் சேர்ந்த ஆனந்த தேரர்; எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்க முடியாமல் போனால், அடுத்த ஜென்மத்தில் பேயாகப் பிறந்தேனும் மகிந்த ராஜபக்வை பழி தீர்ப்பேன் என்று கோபவேசத்துடன் பேசியுள்ளார்.
ஆனந்த தேரரின் இந்தப் பேச்சு நடக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தலின் விறுவிறுப்பை மட்டுமன்றி தேர்தலுக்கு பின்பான பழிதீர்க்கும் படலத்தையும் சொல்லி நிற்கிறது.
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்காமல் போனால் மட்டுமே அடுத்த பிறப்பில் பேயாக உருவெடுத்து அவரை பழி தீர்ப்பேன் எனவும், மாறாக ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த தோற்றுப் போனால் பழி தீர்த்தல் காண்டம் இந்தப் பிறப்பிலேயே நடந்தாகும் என்பதும் ஆனந்த தேரர் ஆற்றிய உரையின் மூலப் பொருளாகும்.
அடுத்த பிறப்பில் பேயாக வந்து பழி தீர்ப்பேன் என்ற ஆனந்த தேரரின் வீறாப்பான உரையை செவிமடுத்த நடுநிலையாளர்களிடம் சில ஐய வினாக்கள் எழுவது தவிர்க்க முடியாததாக இருக்கும்.
I. ஆனந்த தேரரின் தற்போதைய வயது அவரின் அடுத்த பிறப்பிற்கு விரைவாக ஒத்துழைக்குமா?
II. ஒரு புத்த துறவியின் மறுபிறப்பு பேயாக அமையும் என்ற உண்மையை ஆனந்த தேரர் வெளிப்படுத்தி நிற்கின்றாரா?
III. இந்தப் பிறப்பில் பெரும்பாலான பெளத்த பிக்குகளால், தமிழ் மக்கள் துன்பப்பட்டனர். துன்பப்படுகின்றனர். இந்த நிலையில் அடுத்த பிறப்பு, புல்லாகி, பூடாகி, புழுவாகி,... என்ற ஒழுங்கில் ஒன்பதாவது இடத்தில் இருக்கக்கூடிய பிறப்பாயின் அதனால் சிங்கள மக்கள் துன்பப்படுவார்கள் அல்லவா? என்ற ஐயங்கள் ஏற்படும்.
எனினும் இந்த விடயங்கள் ஆனந்த தேரருக்குத் தெரியாதவையல்ல. இருந்தும் ஜனாதிபதி மகிந்தவை பழி தீர்க்க வேண்டும் என்ற கோபாவேசத்தில் பேயாகப் பிறக்கவும் தயங்கேன் என்பதாக அவரின் உரை அமைந்துள்ளது என்ற அனுமானிப்புக்கு வரலாம்.
இத்தகைய அனுமானிப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை விட தேர்தலுக்குப் பின்பான சம்பவங்கள் கடுகாத்திரமாக இருக்கும் என அறுதியிட்டுக் கூறலாம்.
ஜனாதிபதித் தேர்தல் தென்பகுதிக்கானது போல வடக்கிலும் கிழக்கிலும் பலத்த அமைதி நிலவுகிறது. ஜனாதிபதித் தேர்தல் என்றால் அதனைத் தென்பகுதி மக்களே தீர்மானிக்கின்றனர் என்பதாக இதற்குப் பொருள் கொள்ளலாம்.
அல்லது நீங்கள் நாட்டைப் பிரித்துத் தராவிட்டாலும் நாங்கள் தமிழர் தாயகத்தை மனத்தால் பிரித்தெடுத்து விட்டோம். இதன் காரணமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தேர்தல் சலசலப்பு இல்லாமல் போயிற்று என்றும் பொருள் படுத்தலாம்.
எதுவாயினும் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த - மைத்திரி மோதல் கடுமையானது மட்டுமன்றி கலவரங்களும் நாட்டில் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு என்பதை உணர முடிகிறது. இதனைத் தென்பகுதியில் விறுவிறுப்பாக நடக்கும் தேர்தல் பிரச்சாரம் சான்றுபடுத்தும்.
மகிந்தவை வெல்ல வேண்டும் என்று மைத்திரியும்; மைத்திரியை தோற்கடிக்க வேண்டும் என்று மகிந்தவும் தேர்தலில் பிரச்சாரம் செய்வதாகத் தெரியவில்லை. மாறாக நடக்கப் போகும் தேர்தலில் பழி தீர்க்கும் உணர்வு மேலோங்கியிருப்பதைக் காணமுடிகின்றது.
தேர்தலில் மகிந்த ராஜபக் வெற்றி பெற்றால் மைத்திரிபால சிறிசேனவின் சாதகபலன் பற்றி நாம் சொல்லத் தேவையில்லை. இதேபோல் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால், மகிந்த ராஜபக் குடும்பத்தின் கோசாரபலன் எப்படி அமையும் என்று நீங்களே அறிவீர்கள்.
நிலைமை இதுவாகவிருக்க, மகிந்த ராஜபக்விற்கு எதிராகத் தேர்தல் பிரச்சாரம் செய்த ராமன்ய பீடத்தைச் சேர்ந்த ஆனந்த தேரர்; எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்க முடியாமல் போனால், அடுத்த ஜென்மத்தில் பேயாகப் பிறந்தேனும் மகிந்த ராஜபக்வை பழி தீர்ப்பேன் என்று கோபவேசத்துடன் பேசியுள்ளார்.
ஆனந்த தேரரின் இந்தப் பேச்சு நடக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தலின் விறுவிறுப்பை மட்டுமன்றி தேர்தலுக்கு பின்பான பழிதீர்க்கும் படலத்தையும் சொல்லி நிற்கிறது.
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்காமல் போனால் மட்டுமே அடுத்த பிறப்பில் பேயாக உருவெடுத்து அவரை பழி தீர்ப்பேன் எனவும், மாறாக ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த தோற்றுப் போனால் பழி தீர்த்தல் காண்டம் இந்தப் பிறப்பிலேயே நடந்தாகும் என்பதும் ஆனந்த தேரர் ஆற்றிய உரையின் மூலப் பொருளாகும்.
அடுத்த பிறப்பில் பேயாக வந்து பழி தீர்ப்பேன் என்ற ஆனந்த தேரரின் வீறாப்பான உரையை செவிமடுத்த நடுநிலையாளர்களிடம் சில ஐய வினாக்கள் எழுவது தவிர்க்க முடியாததாக இருக்கும்.
I. ஆனந்த தேரரின் தற்போதைய வயது அவரின் அடுத்த பிறப்பிற்கு விரைவாக ஒத்துழைக்குமா?
II. ஒரு புத்த துறவியின் மறுபிறப்பு பேயாக அமையும் என்ற உண்மையை ஆனந்த தேரர் வெளிப்படுத்தி நிற்கின்றாரா?
III. இந்தப் பிறப்பில் பெரும்பாலான பெளத்த பிக்குகளால், தமிழ் மக்கள் துன்பப்பட்டனர். துன்பப்படுகின்றனர். இந்த நிலையில் அடுத்த பிறப்பு, புல்லாகி, பூடாகி, புழுவாகி,... என்ற ஒழுங்கில் ஒன்பதாவது இடத்தில் இருக்கக்கூடிய பிறப்பாயின் அதனால் சிங்கள மக்கள் துன்பப்படுவார்கள் அல்லவா? என்ற ஐயங்கள் ஏற்படும்.
எனினும் இந்த விடயங்கள் ஆனந்த தேரருக்குத் தெரியாதவையல்ல. இருந்தும் ஜனாதிபதி மகிந்தவை பழி தீர்க்க வேண்டும் என்ற கோபாவேசத்தில் பேயாகப் பிறக்கவும் தயங்கேன் என்பதாக அவரின் உரை அமைந்துள்ளது என்ற அனுமானிப்புக்கு வரலாம்.
இத்தகைய அனுமானிப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை விட தேர்தலுக்குப் பின்பான சம்பவங்கள் கடுகாத்திரமாக இருக்கும் என அறுதியிட்டுக் கூறலாம்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya