Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


ரணில் போட்டியிடவில்லையே என்ற கவலையில் ஜனாதிபதி!

Go down

ரணில் போட்டியிடவில்லையே என்ற கவலையில் ஜனாதிபதி! Empty ரணில் போட்டியிடவில்லையே என்ற கவலையில் ஜனாதிபதி!

Post by oviya Fri Dec 05, 2014 12:18 pm

ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் நடத்தி தான் வெற்றி பெற்றாலும் 2015 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி சத்தியப் பிரமாணம் செய்த பின்னர் தனது பதவிக்காலம் ஆரம்பமாகும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் நடத்தி தான் வெற்றி பெற்றாலும் 2015 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி சத்தியப் பிரமாணம் செய்த பின்னர் தனது பதவிக்காலம் ஆரம்பமாகும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனை கூறியுள்ளார்.

தேர்தல் வெற்றியின் பிறகும் புதிய பதவிக்காலம் எப்போது ஆரம்பமாகும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.இம்முறை தேர்தலில் நான் உண்மையாக போட்டியிடுவது சந்திரிக்கா மற்றும் மங்கள சமரவீரவுடனே அன்றி வேறு வேட்பாளர்களுடன் அல்ல. ரணில் விக்ரமசிங்கவும் பின்னால் இருக்கின்றார் எனவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தன்னுடன் நேருக்கு நேர் போட்டியிட போகும் மைத்திரிபால சிறிசேனவை எதிர்த்து பிரசாரம் செய்ய முடியாத அளவிற்கு ஜனாதிபதி வங்குரோத்து நிலையில் இருப்பதை அவரே ஒப்புக்கொண்டிருப்பதாக த இண்டிபெண்டன் இணையத்தளம் கூறியுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக லட்சக்கணக்கில் சேறுபூசும் சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்களை அச்சிடடு இலகுவான போட்டிக்கு தயாரான ராஜபக்ஷ குடும்பத்தினர் இறுதியில் அவை அனைத்தையும் அழிவிட நேர்ந்தது.

ஜனாதிபதிக்கு இந்த கவலையே என்னவோ தெரியவில்லை. ரணில் விக்ரமசிங்க போட்டிக்கு வந்திருந்தால், போட்டி இதனை விட கடினமானதாக இருந்திருக்கும் எனவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு வலுவான வாக்கு வங்கி இருப்பதாகவும் கூறியுள்ளதாகவும் த இண்டிபெண்டன் குறிப்பிட்டுள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: ரணில்
» மஹிந்தவின் அழுக்கான கை படக்கூடாது என்ற காரணத்தினால் கைலாகு கொடுக்கவில்லை: மைத்திரி
» அரசியலில் பணம் சம்பாதிக்கும் அவசியம் கிடையாது!– ரணில்
» மைத்திரி வெற்றியீட்டினால் ரணில் - சந்திரிகா ஆட்சியே நீடிக்கும்!- குணதாச அமரசேகர
» திஸ்ஸவின் கட்சித்தாவலை முன்னரே அறிந்திருந்த ரணில் - திஸ்ஸ அத்தநாயக்க வெளியேறியமை வருத்தமளிக்கின்றது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum